Sunday, May 30, 2021

பெண்களுக்கு மகப்பேறு உண்டாக

அகர திரவியம் சித்தா

          பெண்களுக்கு மகப்பேறு உண்டாக

            விழுதி இலை தைலம்

1,விழுதி இலை சாறு
2,சிற்றாமணக்கு எண்ணெய்
3,நாட்டு பசு நெய்
4,சுக்கு
5,மிளகு
6,திப்பிலி
7,கோஷ்டம்
8,வசம்பு
9,லவங்கம்
10,ஏல அரிசி
11,சின்ன வெங்காயம்
12,பூண்டு

       4 முதல் 10 வரை உள்ள சரக்குகளை நன்றாக தூள் செய்து பாலில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  சிற்றாமணக்கு எண்ணெயை ஊற்றி 4 முதல் 10 வரை உள்ள சரக்குகளை பாலில் அரைத்து வைத்ததை கலந்து
பின் சின்ன வெங்காயம் பூண்டு சாறுகளையும், கலந்து விழுதி இலை சாறு கலந்து மிதமான தீயில் எரித்து கற்கம் வரும்வரையில் பதம் வந்ததும் சூடு பதத்தில் வடித்து வைத்துக் கொள்ளவும்.

                 தீரும் வியாதிகள்

பெண்களின் மலடு, கர்ப்பப்பை பிரச்சனை, கர்ப்பப்பை சூலை, கர்ப்பப்பை நீர்க்கட்டி, அதிக பெரும்பாடு, வெள்ளைபடுதல்,  வயிற்றுவலி. இடுப்பு வலி சரியாகி மகப்பேறு உண்டாவதற்கான இடையூறுகளை களைந்து பெண்களுக்கு கருத்தரிக்கும், மகப்பேறு உண்டாகும் அற்புதமான விழுதி இலை தைலம் அகஸ்தியர் பரிபூரணம் 400-ல் இருந்து இது பெண்களுக்கான தையலும்.

  ஆண்களுக்கு தனி மருத்துவம் அவர்களுக்கு விந்து அணு (counting)சரியாக வீரியம்உள்ளதா என்று பார்க்க வேண்டும்..
    மாதவிலக்கு ஆனா இரண்டு நாள் கழித்து மூன்றாம் நாள் முதல் 5ஆம் நாள் வரை காலை மாலை 40 ml .

    அனுபானம்.

 சோறு வடித்த கஞ்சி
நீராகாரம் நெய் வெண்ணெய் வெண்ணீர்.
  
இதுபோன்று வைத்தியம் முன்பே சித்தர்கள் கண்டுபிடித்து வைத்துள்ளார்கள்  என்பதற்காக இந்த பதிவு இதனால் பல பேர்கள் பயனடைவார்கள் என்பதனால். ஏனென்றால் மருத்துவமனையில் சென்று பல ஆயிரம் லட்சங்கள் கொடுத்தாலும் சில பேர்களுக்கு மகப்பேறு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. மரம் பூ பூத்தால் கண்டிப்பாக காய்காய்க்கும் பூக்காத மரம் காய்க்காது இது போன்று தான் பெண்களும் நன்றி வணக்கம்.

   U. பிரபாகரன் பரம்பரை சித்த வைத்தியர். காஞ்சிபுரம்.
9500933355.

No comments:

Post a Comment