Wednesday, May 26, 2021

ஆளி விதை மோர்


ஆளி விதை மோர்

5-15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் உடல்பருமனாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கங்களில் மாற்றம் போன்றவற்றால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. தற்போதைய கொரோனா சூழலில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் அனைவருக்கும் பூதாகர பிரச்சினையாகி வருகிறது பருமன். இதைத் தவிர்க்க ரிலாக்ஸ் டைமில் தினமும் இந்த மோரைக் குடித்துவர, ஆரோக்கியம் அதிகரிக்கும்; ஆயுள் கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.

எப்படிச் செய்வது?

டிபார்ட்மென்ட்டல் கடைகளிலும் நாட்டு மருந்துக்கடைகளிலும் கிடைக்கும் ஆளி விதையைப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்து வரலாம். உப்பு சேர்க்கக் கூடாது.

சிறப்பு

இடுப்புச் சதை கரைந்து, கட்டுடலாக மாறும். உடல் எடை குறையும். இதய நோய்கள் வராமல் தடுக்கும். ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும். நல்ல கொழுப்பு அதிகரிக்கும். கெட்ட கொழுப்புக் கரையும்.

No comments:

Post a Comment