Wednesday, July 28, 2021

வசம்பு...குழந்தைகளின் அருமருந்து. விஷம் குடித்தவருக்குகூட பிழைத்துவிடுவார்கள்!


வசம்பு...குழந்தைகளின் அருமருந்து.
விஷம் குடித்தவருக்குகூட பிழைத்துவிடுவார்கள்! 

நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாகப் பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மை யோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.

அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மை யையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்துசாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லாநாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிரு க்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது. பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
வசம்பும்,, குழந்தையும்..

வசம்பு பத்தி இப்போ எவ்ளோ பேருக்கு தெரியும்..

வசம்பெல்லாம் இப்ப யாரும் யூஸ் பண்ற மாதிரி தெரியல.. முன்னெல்லாம் குழந்தை பிறந்ததும் வசம்பு வாங்கிடுவாங்க.. குழந்தைக்கு ஏதாவது ஒன்னுன்னா உடனே டாக்டர்.. இங்கிலிஷ் மருந்து தான்.

ஆனா.. நீங்க வசம்பு ஒன்னு வீட்ல ஸ்டாக் வச்சிங்கன்னா டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமில்ல.. எப்படி.. படிங்க..

வாயில வசம்பு வெச்சு தேய் என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா?
பாட்டி வைத்தியத்தில் அதற்கு பதில் இருக்கு..

வசம்பு பாரம்பரிய பராம்பரியமாக பயன்படுத்தி வரும் மருத்துவ பொருளாகும். இது குழந்தைகளின் வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த பொருளாகும். அதனால் தான் இது "பிள்ளை வளர்ப்பான்" என்றும் அழைக்கப்படுகிறது. 

பிறந்த குழந்தைகளுக்கு இந்த வசம்பை கையில் காப்பு மாதிரி கட்டுவார்கள். இது குழந்தையின் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை, வயிற்றில் ஏற்படும் அசெளகரியம், நெஞ்சு சளி போன்றவற்றை குணப்படுத்துகிறது. இந்த கையில் வசம்பு கட்டும் முறையை குழந்தை பிறந்த 12 வது நாட்களில் செய்கின்றனர். 

வசம்பை கடிப்பதால்
பிறந்த குழந்தைகள் தங்கள் கையில் கட்டப்பட்டுள்ள வசம்பை கடிப்பதால் அதன் மருத்துவ சத்து உள்ளே நுழைந்து வயிற்று பிரச்சினைகளை விரைவில் களைகிறது. 

வயிறு வீக்கம்...
வசம்பை தீயில் சுட்டு பொடியாக்கி அதை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது வயிறு வீக்கம் அல்லது வயிறு உப்புசம் ஆகியவை சரியாகி விடுகிறது. 

பூச்சு நெருங்காமை...
வசம்பை சாம்பலாக்கிய பொடியை தண்ணீருடன் குழைத்து குழந்தையின் நெற்றியில் பொட்டு இட்டு வர பால் வாடைக்கு எந்த பூச்சும் பல்லி போன்றவை குழந்தையை அண்டாது. வசம்பு பொடியை குழந்தைக்கு பூசி விடுவதாலும், படுக்கையை சுற்றி தூவி விடுவதாலும் குழந்தையை பூச்சிகள் அண்டாது. 

வாய்வு தொல்லை....
வசம்பை சாம்பலாக்கிய பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து குழந்தையின் வயிற்றில் தடவி வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும்.

பால் மட்டும் போதும் 
வசம்பையும் தேனையும் குழைத்து கொடுக்கும் போது குழந்தைக்கு பால் மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் விரைவில் வயிறு பிரச்சினை சரியாகி விடும். 

இருமல்....
வசம்பு மற்றும் அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்று வலிக்கு உதவுகிறது. நீண்ட நாள் மற்றும் வறட்டு இருமல் இருந்தால், வசம்பு மற்றும் அதிமதுரப் பொடியை சிறிது தேனுடன் கலந்து, இரவில் சாப்பிட்டு வர இருமல் வேகமாக குணமடையும். 

மூளை வளர்ச்சி....
இந்த மருந்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. மேலும் குழந்தைக்கு நல்ல பேச்சு திறன், நல்ல கண் பார்வை திறன், அழகு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் போன்ற எண்ணற்ற பலன்களை அள்ளி வழங்குகிறது.

வயிற்று போக்கு...
வசம்பு, காயம், அதிவிடயம், சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் கடுக்காய் தோல் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். 

இதை 1-2 கிராம் அளவு குழந்தைக்கு கொடுத்து வந்தால் சீரணமின்மை, வயிற்று போக்கு மற்றும் வாய்வு போன்றவற்றை குணமாக்கும்...

Saturday, July 24, 2021

சிறுநீர் கல் கரைய வைத்தியமும் தடுக்கும் வழிமுறையும்...

சிறுநீர் கல் கரைய வைத்தியமும் தடுக்கும் வழிமுறையும்:::

சிறுகண்பீளைச் சமூலத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து விதிப்படி குடிநீர் செய்து 30 மி.லி தினம் இருவேளை குடித்து வர சிறுநீரில் குருதி வருதல், சிறுநீரகக் கற்கள் வெள்ளை ஆகியன குணமாகும்.

சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை

இன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது. இனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது. அத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன. நாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன. சுவையும் அதிகம். போதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது. உதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது.

நாம் ஏன் உணவு உண்கிறோம்?

நமது அன்றாட வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே நமக்கு உணவு தேவைப்படுகிறது. நோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும், நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை. அத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும். ஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது. தேவைக்கு மீறி உண்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பலநோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிறுகச் சிறுக கொல்லுகின்றன.

இவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும்.

உணவின் அளவு

ஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான். இதனால் தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம், "அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள்" என்று சொன்னார்.

வெற்றுக் கலோரி வேண்டாம்

இரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஷாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.

எவை ஆரோக்கியமானவை?

உங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.

ஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும். கோழி போன்ற பறவையின இறைச்சிகளை உட்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும். இவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற்கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.

புதிய ஆய்வு

ஆனால் இப்பொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது. கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும். Brigham and Women’s Hospital லில் உள்ள Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும்.

சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.

நமது சூழலில் அதிகம்

எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே.. நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள். நமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.

வலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பார தூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம்.

சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.

Friday, July 23, 2021

சரும நோய்களை எளிதில் போக்கும் திருநீற்றுப்பச்சை !!

சரும நோய்களை எளிதில் போக்கும் திருநீற்றுப்பச்சை !!


திருநீற்றுப்பச்சை செடியில் ஊதா கலந்த வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை.

இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது.

படர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.சாறை உடலில் பூசிக்கொண்டால், பூச்சிகள் எதுவும் நெருங்காது. 

விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது. சிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும்.

சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.

ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு  தேக்கரண்டி விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். 

எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம். ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.

மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.

சித்தம் தெளிவிக்கும் மகாவில்வம்.

சித்தம் தெளிவிக்கும் மகாவில்வம்.
*********************************


யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை என்று திருமூலர் போற்றுவது மகாவில்வ தளம் என்பதில் ஐயமில்லை. மகாவில்வ தரிசனம் என்பது சிவ தரிசனத்திற்கு இணையானது ஆகும். சிவஸ்துதி எனும் மந்திரத்தில் ஏகவில்வம் சிவார்ப்பணம் என்று குறிப்பிடப்படும் வில்வம் சிவ மூலிகைகளுள் சிகரம் மான மூலிகையாகும் மூன்று இதழ்களைக் கொண்டு தோற்றமளிக்கும் வில்வம் சிவபெருமானின் முக்கண் குறிப்பதாக சிவனடியார்கள் போற்றுவர். இதேபோல் 5 ,7 ,10, இதழ்களைக் கொண்ட வில்வம் மரங்களும் உண்டு. இவை அனைத்தும் சிவ தத்துவத்தை விளக்கும் அம்சமாக உள்ளவை என சைவ சமய நூல்கள் போற்றும். சிவ வழிபாட்டின் முதற் பொருளான வில்வம் மரத்தை தொட்டாலும், பார்த்தாலும்,  '
அதீத சக்தி' (cosmic power) உடலுக்கு. உள்த்துக்கும் கிடைக்கிறது என்பது மகரிஷிகளும், ஆச்சாரியர்களும் அனுபவ பூர்வமாக அறிந்த உண்மை! .

மனக் கோளாறு காரணமாக உடல் நலிவுற்றவர்கள்; ஏராளமான பிரச்சினைகளில் மூழ்கி உடலையும் மனதையும் சீரழித்து கொண்டு பித்தம் முற்றியவர்கள் தினசரி காலையில் வில்வ இலைகளைக் கொண்டு இறைவனை அர்ச்சித்து அதில் 10 இலைகளை எடுத்து வாயிலிட்டு மென்று சிறிது வெந்நீருடன் ( தேன் 2 ஸ்பூன் கலந்து ) விழுங்கவும். 1 மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது. இவ்வாறு 48 நாட்கள், 96 நாட்கள் என சாப்பிட்டு வர பிற மருத்துவ முறைகளில் காணாத நன்மைகளை காணலாம். உள்மன சுமைகளை ( depression ) கலைந்து சமநிலை எய்த  வில்வ இலைகள் உதவுகின்றன. இம்முறையை பின்பற்றும் போது கட்டாயம் மாமிச உணவு , புகை , காபி , டீ , அருந்தக்கூடாது. 

சித்தம் கலங்காது இருக்க உதவும் வில்வம் பித்தம் தணியப்  பெரிதும் துணைபுரிகின்றது. பித்த அதிகம் மூளையை பிடிக்கும்போது சித்த பிரமையும் , வயிற்றைப் பற்றும் போது குடற் புண்ணும் சர்மத்தை தாக்கும் போது சொறி, சிரங்கு , தோல் நோய் , கரப்பான் இன்று பல நோய்கள் உண்டாகின்றன. இத்தகைய பித்த தொடர்பான அனைத்து நோய்களையும் வரவொட்டாமலும் , வந்தாள் தொடர் சிகிச்சை மூலம் விரட்டவும் கீழ்கண்ட முறை முற்றிலும் பயனாகின்றது:.

பசுமையான வில்வ இலைகள் 10 ,  சீரகம் 2 சிட்டிகை இரண்டையும் அரைத்து சிறு உருண்டையாக்கி காலை வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மோருடன் பருகிவர 2 மாதங்களில் வியக்கத்தக்க பலனை காணலாம். தோல் நோய் அறிகுறி தென்பட்டால் முளையிலே கில்லி தடுக்க வில்வ இலைகள் 20 எடுத்து அத்துடன் மிளகு 10 , சீரகம் 2 சிட்டிகை சேர்த்து அரைத்து பசு வெண்ணெயுடன் கலந்து, தினசரி காலை வேளை பருகிவர 3  மாதங்களில் நிவாரனம் பெறலாம். நவீன மருத்துவ சிகிச்சை இந்நோய்க்கு ஆண்டுக்கணக்கில் மருந்து சாப்பிட சிபாரிசு செய்வதை இதன் மூலம் தவிர்க்கலாம். 

குடற்புண், மூலநோய்,கண் பார்வை மங்குதல்,ஆகியவற்றை வில்வ இலைச் சூரணத்தைப் வெந்தயத்துடன் கலந்து ( அரை ஸ்பூன் வில்வ இலை சூரணம் + கால் ஸ்பூன் வெந்தயம் ) இளநீருடன் பருகிவர துரித பலன் காணலாம்.
இளமைத் தவறுகளால் விளையும் பால்வினை நோய்கள், புண், ரணங்கள் ஏற்படுமேயானால், வில்வப் பழச்சதையுடன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அவை விலகும் மலச்சிக்கல் வராது.

கடுமையான நீடித்த சரும நோயில் தவிப்பவர்களுக்கு வரப்பிரசாதம் 'வில்வம்' எனலாம். வில்வ இலையுடன் அதன் வேர்பட்டையும் கலந்து கசாயம் போல் செய்து தேன் கலந்து தினசரி 1 குவளை பருகிவர விரைவில் அவை விலகும். 'வெண்புள்ளி' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்ட முறைப்படி தயாரித்து காலை வேளை சாப்பிட்டு மாலையில் வில்வ காய்களைக் கொண்டு தண்ணீரால் அரைத்து ( சிறிது மஞ்சள் கூட்டவும் ) வெண்புள்ளி மீது பூசி உலரவிடவும்.தொடர்ந்து செய்து வர வெண்புள்ளிகள் மறைந்து மீண்டும் பழைய சருமத்தைப் பெற்றிடும். 

பனிக்கால ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து 6 மாதம் வில்வ இலை சூரணத்துடன் அதிமதுரம், சிற்றத்தை சூரணங்களை கால் ஸ்பூன் ( வகைக்கு ) எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, முற்றிலும் நிவாரணம் பெறலாம்.  இதனை மிகச் சிறப்பாக ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தொடர்ந்து செய்தால் ஆஸ்துமா ( winter asthma ) வராது தடுக்கலாம். 

சுருங்கக்கூறின்,மனித உடம்பின் ராஜா உறுப்புகளான மூளை, இருதயம், வயிறு, நுரையீரல், நரம்புகளுக்கு 'வில்வ' மரம் உதவுகிறது . வில்வ மர இலை ,வேர் ,பட்டை, பழம் ஆகியவற்றை மூலமாகக் கொண்டு தயாரிக்கப்படும் 'வில்வாதி லேகியம்' அற்புதமான கல்பமாகும். உடலை இருக்க வைத்து நோயின்றி காக்கும்! 

சிவாலயங்களில் மட்டுமே இதுவரை பயன் ஆகிவந்த 'வில்வமரம்' விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேரளத்தில் உள்ள வேதியல் விஞ்ஞானியின் 'வில்வ இலைகளை' ஆராய்ச்சி செய்ததில் 'நீரிழிவு' நோயாளிகளுக்கு ஒரு 'ஸ்வீட்டான' செய்தியை அளித்துள்ளார். தினசரி காலையில் 10 முதல் இருபது வில்வ இலைகளை மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு காலப்போக்கில் 'நீரிழிவு நோய்' கட்டுப்பட்டு விடக் கூடிய வகையில் மீண்டும் கணையத்தைச் சுரப்பிக்கத் தூண்டுகிறதாம். அத்துடன் நீரிழிவு நோயால் வரும் பிற பாதிப்புகளில் இருந்தும் காப்பாற்றுகின்றதாம். பின்விழைவற்ற  இம்முறையால் விரைவில் இந்திய மக்கள் மட்டுமின்றி, உலக மக்கள் நீரிழிவு நோயிலிருந்து விடுபட வாய்ப்பு உண்டு.

சிலருக்கு சில நேரங்களில் கை, கால், முதுகு, பகுதிகளில் எரிச்சலுடன் கூடிய வலியால் அவதிப்படுவார்கள். இதற்கு ஆண்டுக்கணக்கில் மருந்து சாப்பிடும் குணம் காண இயலாதவர்களுக்கு 'வில்வம்' ஒரு வரப்பிரசாதமாகும். தினசரி 5 முதல் 10 வில்வ இலைகளை ( வெட்டிவேர், சந்தனம் ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீருடன் ) மென்று விழுங்கி வர 'பித்த எரிச்சல்' எனும் மேற்கண்ட நோய் படிப்படியே தணியும்.

ஸ்தல விருட்சங்களுள் 'மகாவில்வம்' கையிலயங்கிரிக்குரியதாகும். மூவிலை கொண்ட வில்வத்தைப் தரிசித்தால் ஒரு சிவாலய தரிசனத்துக்கு இணையாகுமென்பர். 10 தளம் கொண்ட மகா வில்வத்தைத் தரிசனம் செய்வது என்பது 108 சிவாலயங்களை வலம்வந்த புண்ணியச் செயல் என்பர் பெரியோர், 10 இதழ்களைக் கொண்ட 'மகா வில்வத்தை' கரங்களிலே கொண்டு, சிவஸ்துதி' யை வாயார, மனதார தரிசித்த  ராவணன் 'சாகாவரம்' பெற்றவன்; நாம் ராவணனைப் போல் பூஜிக்க முடியாவிட்டாலும், வில்வ இலைகளை கிடைக்கும்போது சிவ ஸ்துதி  செய்து அதனை முறைப்படி அருந்திவர, குறைந்தபட்சம் 'நோயற்ற, வாழ்வு வாழலாம்' !

வீட்டுக்கு ஒரு வில்வ மரம் இனி இருந்தால். இல்லையொரு பிணித் தொல்லை யென நல வாழ்வு வாழலாம்! தூய்மையும், பூஜிக்கும் எண்ணமும் உள்ளவர்கள் வீட்டின் முன்புறம் வில்வப் கன்றுகளை நட்டு `துளசிமாடம்' போல் `வில்வமாடம்' வைத்து வழிபட்டு பயன்படுத்தலாம்! பொதுவாக வில்வமரத்தை தெய்வீக விருட்சமாக ஹிந்துக்கள் போற்றுவதால் ஆலயங்களில் மட்டுமே இதனை வளர்ப்பது ஐதீகம்!

1992 ஆம் வருடம் தினமணிகதிரில்
வெளிவந்த கட்டுரை.
*********************************
வைத்யர் சுகவனேஸ்வரன்
சேலம்.ஆத்தூர்.
*********************************

சோம்பின் நன்மைகள்.

சோம்பின் நன்மைகள்.:


சோம்பு நாம் தினமும் சமையலில் சேர்க்கும் ஒரு பொருள். ஆனால் அதன் மருத்துவ குணங்களை பலரும் அறிந்திருப்பதில்லை.  

சோம்பின் நன்மைகள்.:
செரிமான சக்தியைத் தூண்ட:
எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக  விழுங்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.

குடல்புண் ஆற:
சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.

வயிற்றுவலி, வயிற்று பொருமல் அஜீரணக் கோளாறுகளால்  வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இதற்கு உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.

கருப்பை பலம்பெற கருப்பை பாதிப்பினால், சிலர் குழந்தை பேறு இல்லாமல் தவிப்பர். இவர்கள், சோம்பை (பெருஞ்சீரகத்தை) இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

ஈரல் பாதிப்பு நீங்க உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி  அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

இருமல், இரைப்பு மாற நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.

காய்ச்சல் அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பசியைத் தூண்ட பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.

Thursday, July 22, 2021

முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்

*முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்*

👉 *தேவையான பொருள்*

1.கற்பூர துளசி - ஒரு கைப்புடி அளவு
2.புதினா இலை - ஒரு கைப்புடி அளவு
3.தண்ணீர் - 200 மி.லி
4.தேன் - ஒரு தேக்கரண்டி

👉 *செய்முறை*

✍️முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️பிறகு கற்பூர துளசி இலை மற்றும் புதினா இலை இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

✍️மேலும் கொதிக்கும் தண்ணீருடன் அரைத்த பொருட்களை சேர்த்து கொண்டு 100 மி.லி நீர் வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️இவ்வாறு உருவான நீருடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்த்துக்கொண்டு தினந்தோறும் இரவு துக்கத்திற்கு முன் குடித்து வந்தால் முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்கும்

முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்

*முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்*

👉 *தேவையான பொருள்*

1.கற்பூர துளசி - ஒரு கைப்புடி அளவு
2.புதினா இலை - ஒரு கைப்புடி அளவு
3.தண்ணீர் - 200 மி.லி
4.தேன் - ஒரு தேக்கரண்டி

👉 *செய்முறை*

✍️முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️பிறகு கற்பூர துளசி இலை மற்றும் புதினா இலை இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

✍️மேலும் கொதிக்கும் தண்ணீருடன் அரைத்த பொருட்களை சேர்த்து கொண்டு 100 மி.லி நீர் வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️இவ்வாறு உருவான நீருடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்த்துக்கொண்டு தினந்தோறும் இரவு துக்கத்திற்கு முன் குடித்து வந்தால் முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்கும்

வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

*வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!*
 
நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம்.  
 
இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது.  
 
வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும். 
 
இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும்.  
 
நிச்சயமாக, இது தொற்று நோய் அல்ல. 
 
காரணங்கள்: 
 
உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு 
வயிற்றில் உள்ள கிருமிகள், 
நாட்பட்ட வயிற்றுக் கோளாறுகள், 
ஹார்மோன் பாதிப்பு, 
மன அழுத்தம், 
நோய்வாய்ப்பட்ட நிலை, 
அமீபியாசிஸ், 
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் 
கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம். 
 
காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடலாம். 
 
நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம். 
 
அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம். 
 
அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம். 
 
வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம். 
 
அரை ஸ்பூன் செங்கொன்றைப் பட்டைப் பொடியில் நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து, கால் டம்ளர் அருந்தலாம். 
 
அரை ஸ்பூன் அருகம்புல் பொடியில் ஆலம் பால் ஐந்து சொட்டுகள் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் தினமும் காலையில் உண்ணலாம். 
 
வேப்பிலை, ஒமம் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம். 
 
தராஇலை, ரோஜாப்பூ இதழ் இரண்டையும் சமஅளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம். 
 
கரிப்பான் இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அரை ஸ்பூன் உண்ணலாம். 
 
வெளிப்பிரயோகம்: 
 
கற்கடாகசிங்கியைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம். 
 
கார்போக அரிசியையும், புளியங்கொட்டையையும் நீரில் ஊறவைத்து, அரைத்துப் பூசலாம். 
 
கண்டங் கத்தரிப் பழத்தைக் குழைய வேகவைத்து வடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம். 
 
துளசி இலையை மிளகுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம். 
 
முள்ளங்கி விதையைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம். 
 
மருதோன்றி இலைச் சாற்றில் தாளகத்தை இழைத்துப் பூசலாம். 
 
காட்டு மல்லிகை இலையை அரைத்துப் பூசலாம். 
 
சிவப்புக் களிமண்ணை இஞ்சிச் சாற்றில் கலந்து பூசலாம். 
 
மஞ்சளை நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து, அதில் கடுகெண்ணெய் சேர்த்து, நீர் வற்றும் வரை காய்ச்சிப் பின் பூசலாம். 
 
செங்கொன்றைப் பட்டையை அரைத்துப் பூசலாம். 
 
சேராங்கொட்டைத் தைலத்தைப் பூசலாம். 
 
சேர்க்க வேண்டியவை: 
 
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், சிவப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கறிவேப்பிலை, இஞ்சி. 
 
தவிர்க்க வேண்டியவை: 
 
காபி, தேநீர், சர்க்கரை, வெண்மையான மாவுப் பொருட்கள், தீட்டப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்புப் பொருட்கள் மற்றும் மீன்.
 
*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க...

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க...

    சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது. அந்த வரிசையில் 27 (இருபத்தி ஏழு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ இருக்கிறோம். அது கடுக்காய்!*

   *கடுக்காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.*

1. கண் பார்வைக் கோளாறுகள்
2. காது கேளாமை
3. சுவையின்மை
4. பித்த நோய்கள்
5. வாய்ப்புண்
6. நாக்குப்புண்
7. மூக்குப்புண்
8. தொண்டைப்புண்
9. இரைப்பைப்புண்
10. குடற்புண்
11. ஆசனப்புண்
12. அக்கி, தேமல், படை
13. பிற தோல் நோய்கள்
14. உடல் உஷ்ணம்
15. வெள்ளைப்படுதல்
16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு
18. சதையடைப்பு, நீரடைப்பு
19. பாத எரிச்சல், மூல எரிச்சல்
20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி
21. ரத்தபேதி
22. சர்க்கரை நோய், இதய நோய்
23. மூட்டு வலி, உடல் பலவீனம்
24. உடல் பருமன்
25. ரத்தக் கோளாறுகள்
26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்
27. சீரற்ற மதவிடாய்.

   *மேற்கண்ட 27 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த‍ மருத்துவத்தில் மட்டுமே உண்டு. இது ரொம்ப எளிமைதானுங்க.*

   *நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, மேற்கண்ட 27 நோய்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு, பிணி இல்லா வாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்.*

தினமும் காலை 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

தினமும் காலை 2 கிராம்பு
சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!
நீங்கள் அதை வெறுமனே சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவிலாவது சேர்க்க மறவாதீர்கள் அல்லது கிராம்பு தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்தும் குடிக்கலாம்.
கிராம்பு இந்திய மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் முக்கியப் பொருளாகக் கருதப்படுகிறது. நீங்கள் அதை வெறுமனே சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவிலாவது சேர்க்க மறவாதீர்கள் அல்லது கிராம்பு  தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்தும் குடிக்கலாம். அப்படி தினமும் 2 கிராம்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கிராம்பு இந்திய மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் முக்கியப் பொருளாகக் கருதப்படுகிறது. நீங்கள் அதை வெறுமனே சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவிலாவது சேர்க்க மறவாதீர்கள் அல்லது கிராம்பு  தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்தும் குடிக்கலாம். அப்படி தினமும் 2 கிராம்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

 *நோய் எதிர்ப்பு சக்தி :*

 கிராம்பில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலை எந்த நோய்த்தொற்றுகளும் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். அதோடு நோய்களுக்கு எதிராகவும் போராட உதவுகிறது.

 *செரிமாணம் :*

 ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, செரிமான மண்டலம் சீராக இயங்க வேண்டும். அதற்கு காலையில் கிராம்பை உட்கொள்வது செரிமான பிரச்சினைகளுக்கு உதவும். கிராம்பு செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறத. எனவே மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. கிராம்பு நார்ச்சத்து நிறைந்தது. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது.

 *கல்லீரல் ஆரோக்கியம் :*

 கல்லீரல் தான் உங்கள் உடலை நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை மெட்டபாலிசம் செய்கிறது. எனவே கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, நீங்கள் தினமும் கிராம்பு சாப்பிடுவது நன்மை பயக்கும். கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

 *__பல்லுக்கு உறுதி :_*

 பல்வலியைத் தடுக்க கிராம்பு எண்ணெய் பொதுவாக பற்களில் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகளை உட்கொள்வது பல்வலியைக் குறைக்கவும் உதவும். கிராம்பு பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்ய உதவுகிறது. மேலும், உங்கள் பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலியைத் தணிக்கும்.

 *தலைவலிக்கு நிவாரணி :*

 கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தலைவலிக்கு ஒரு அற்புதமான தீர்வாக இருக்கிறது.எனவே வலி நிவாரணத்திற்காக நீங்கள் அவற்றை உட்கொள்ளலாம் அல்லது ஒரு கிளாஸ் பாலுடன் கிராம்பு தூள் கலந்து குடிக்கலாம். கிராம்பு எண்ணெய்யை நுகர்ந்தால் கூட நிவாரணம் கிடைக்கும்.

 *எலும்புகளுக்கு வலிமை :*

 கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் உள்ளன. அவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கிராம்புகளை உட்கொள்வது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.
 
 *வாய் கிருமிகளை நீக்கும் :*

 காலையில் 2 கிராம்புகளை வாயில் அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றிவிடும். இது உங்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக, இது உங்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு சிறந்தது. கிராம்பு மற்றும் துளசி பயன்படுத்தி வீட்டில் மவுத்வாஷையும் தயார் செய்யலாம்.
வாய் கிருமிகளை நீக்கும் : காலையில் 2 கிராம்புகளை வாயில் அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றிவிடும். இது உங்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக, இது உங்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு சிறந்தது. கிராம்பு மற்றும் துளசி பயன்படுத்தி வீட்டில் மவுத்வாஷையும் தயார் செய்யலாம்.
 
 *சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் :*

 நீரிழிவு நோயாளிகள், தினம் உணவில் கிராம்பு சேர்க்க வேண்டும். கிராம்பு உங்கள் உடலில் இன்சுலின் போல வேலை செய்கிறது. அதாவது, இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம், அவை இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் : நீரிழிவு நோயாளிகள், தினம் உணவில் கிராம்பு சேர்க்க வேண்டும். கிராம்பு உங்கள் உடலில் இன்சுலின் போல வேலை செய்கிறது. அதாவது, இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம், அவை இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன.
 
 *புற்றுநோயை தடுக்கிறது :*

 கிராம்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகள் உள்ளன. அவை உங்கள் உடலை நுரையீரல், மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. கிராம்புகளில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் உடலில் புற்றுநோய் செல்கள் இறப்பை அதிகரிக்கும்.
புற்றுநோயை தடுக்கிறது : கிராம்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகள் உள்ளன. அவை உங்கள் உடலை நுரையீரல், மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. கிராம்புகளில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் உடலில் புற்றுநோய் செல்கள் இறப்பை அதிகரிக்கும்.
 
 *சுவாசப்பாதை ஆரோக்கியம் :* 

ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு உதவும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது கிராம்பு சுவாசக் குழாயில் உண்டாகும் அழுத்தத்தை தணிக்கிறது மற்றும் எந்த பாக்டீரியாக்களும் உங்கள் நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கிறது.
சுவாசப்பாதை ஆரோக்கியம் : ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு உதவும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது கிராம்பு சுவாசக் குழாயில் உண்டாகும் அழுத்தத்தை தணிக்கிறது மற்றும் எந்த பாக்டீரியாக்களும் உங்கள் நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கிறது.
 
 *மன அழுத்தம் நீக்கி :*

 கிராம்பு மன அழுத்த எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, மேலும் காலையில் அவற்றை மென்று சாப்பிட்டாலோ அல்லது அப்படியே வைத்திருந்தாலோ அன்றைய நாள் முழுவதும் உங்களை மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் உணர வைக்கும்.

Monday, July 19, 2021

அனைவருக்கும் மிகச்சிறந்த சத்து தரும் சிறுதானிய மாவுக் கஞ்சி

அனைவருக்கும் மிகச்சிறந்த சத்து தரும் சிறுதானிய மாவுக் கஞ்சி

தே.பொருட்கள்..
கோதுமை - 100 கிராம்
கேழ்வரகு - 100 கிராம்
கம்பு - 100 கிராம்
சாமை - 100 கிராம்
தினை - 100 கிராம்
வரகு - 100 கிராம்
மக்காச்சோளம் காய்ந்தது - 100 கிராம்
சோளம் - 100 கிராம்
பார்லி - 100 கிராம்
பார்லி அரிசி - 50 கிராம்
பச்சைப்பயிறு – 50 கிராம்
வெள்ளைக் கொண்டைக்கடலை – 50 கிராம்
உடைத்தக்கடலை – ஒரு கைப்பிடி அளவு
சோயா பயிறு – 50 கிராம்
முந்திரி பருப்பு – 6
பாதாம் பருப்பு – 6
வெந்தயம் – 2 ஸ்பூன்
ஏலக்காய் – 4
சுக்கு – சிறு துண்டு

     மேற்கூறிய அனைத்தையும் தனித்தனியாக வறுத்து மிஷினில் கொடுத்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து 2 ஸ்பூன் மாவைக் கரைத்து கொதிக்க வைக்கவும். சுக்குச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். விரும்பினால் 1 ஏலக்காய் தட்டிப்போட்டு இறக்கவும்.
     வயது வித்தியாசம் இல்லாமல் இந்தக் கஞ்சியை அனைவரும் சாப்பிட்டு உடல் அரோக்கியத்தை பெறலாம்.

வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்ட சங்கு நாராயண சஞ்சீவி மூலிகையை பற்றி உங்களுக்கு தெரியுமா?


வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்ட சங்கு நாராயண சஞ்சீவி மூலிகையை பற்றி உங்களுக்கு தெரியுமா?

இன்று சஞ்சீவி மூலிகைகளை பற்றிய எனது இணைய தேடலில் அபூர்வமான வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்ட சங்கு நாராயண சஞ்சீவி மூலிகையை பற்றி படிக்க நேர்ந்தது.

இந்த அபூர்வமான மூலிகையை பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு!

இந்த சங்கு நாராயண சஞ்சீவி மூலிகை என்பது சித்தர்கள் அருளிச் சென்ற 21 வகை சஞ்சீவி மூலிகைளில் ஒன்றாகும், 

இந்த மூலிகையை தொடர்ந்து உண்டு வந்தால் சிரஞ்சீவியாய் வாழ முடியும் என்று சித்தர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். 

இதன் இலை பார்ப்பதற்கு சங்கு போன்று இருக்கும். இந்த இலைக்கு நடுவில் சங்கு போன்ற அமைப்பு காணப்படும்.

வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் எப்படி தோஷங்கள் அண்டாது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றனவோ, அந்த வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்டது இந்த சங்கு நாராயண சஞ்சீவி மூலிகை.

இந்த மூலிகை நம் கையில் இருந்தால் எந்த விதமான தோஷமும் நம்மை அண்டாது.

கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் மற்றும் ஜாதகத்தில் உண்டாகும் பலவித தோஷங்களும் நம்மை விட்டு விலகி ஓடும்.

நாம் இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கிவிடும். 

தொழில் வியாபாரங்களில் உள்ள எதிர்ப்புகள் போட்டிகளை சூழ்சிகளை இந்த சங்கு நாராயண சஞ்சீவி மூலிகை முறியடிக்கும்.

இதனால் எதிரிகள் நம்மை கண்டு அஞ்சுவர், தொழில் வியாபாரங்களில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் அதிகப்படியான பொருள் வரத்தையும் உண்டாக்கும்.

தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும்.

குடும்பத்தில் உள்ள பிணக்குகளை நீக்கி சந்தோசத்தையும் மனஅமைதியையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும்.

மொத்தத்தில் நிறைவான வளமான வாழ்வினையும், சமூகத்தில் அந்தஸ்து பட்டம் பதவி கொளரவம், அரசியலில் வெற்றி, மற்றும் லக்ஷ்மி நாராயணரின் அருளினையும் சங்கு நாராயண சஞ்சீவி மூலிகை  பெற்றுத்தரும்.

இது பசியை தாங்கக் கூடியது. 
பசியெடுக்கும் போது, நாலைந்து இலைகளை சாப்பிட்டால் போதும்; பசி நீங்கும்.அதேசமயம் களைப்பு வராது.

இது கசப்பு புளிப்பு துவர்ப்பு என மூன்று சுவை உடையது.

இதன் இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து இரண்டு விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து காலை மாலை இருவேளை தேனில் கலந்து சாப்பிடும் முன்பு சாப்பிட்டு வர இருதய சம்பந்தப்பட்ட இருதய 
பலவீனம்,மாரடைப்பு,இருதய ஓட்டை போன்ற பிரச்சனைகள் தீர்ந்து குணமாவது மட்டுமன்றி உடல் அதிக உற்சாகமாக இருக்கும்.

இம்மூலிகையின் தண்டுப் பகுதியில் இருக்கும் சதையை மட்டும் எடுத்து
சென்னை லயோலா கல்லூரி பூச்சியல் ஆய்வு நிறுவனம் முனைவர் திரு பாண்டிக்குமார் அவர்கள் ஆய்வு செய்து சர்க்கரை வியாதிக்கு நல்ல முறையில் பயன்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இதன் சமூலத்தை நிழலில் உலர்த்தி ஒரு மண்டலம் சாப்பிட்டு வர இது காயகல்பமாக செயல்படும்.

இம்மூலிகையை 
சாப்பிட்டவர்களுக்குத்தான் இதன் அருமை தெரியும்.

இதன் தண்டு பகுதியில் உள்ள சதை இரத்தம் போல் இருக்கும்.அதனால் இதை ரத்தசூரி என்று அழைக்கபடுகிறது.இதன் தண்டும் புளிப்பு இனிப்பு துவர்ப்பு சுவை உடையது.

இம்மூலிகை தனவசியம் செய்யகூடியது என்று செல்வார்கள். எது எப்படியோ ஒரு மண்டலம் இந்த மூலிகையை சாப்பிட்டு வர உடம்பு நல்ல அழகு பெற்று முக வசியமாகும்.

ஆங்கில மொழியில் இந்த மூலிகையின் பயன்கள் பற்றி கீழே பதிவிட்டுள்ளேன்.

Unbelievable Herbal Plant - Begonia Malabarica - Sangunarayana Sanjeevi- Herbal benifits of Begonia malabarica,

சங்கு நாராயண சஞ்சீவி இந்த மூலிகையின் தாவரவியல் பெயர், ('பிகோனியா மாலாபாரிக்கா!') Begonia malabarica plant, sangunarayana sanjeevi ,

இது ரத்தசூரி, அரிய சங்கு நாரண சஞ்சீவி மூலிகை சிவப்பு என்றும் அழைக்கபடும்.

இதன் இலை, சங்கு போல இருக்கும். இலையின் நடுவில், சிவப்பு நிறத்தில் சங்கு போல் தெரியும். 

பழங்குடியின மக்கள் தங்கள் பசியை போக்கவும், காயங்களுக்கு மருந்தாகவும் இதை பயன்படுத்தினர். 

பாபநாசம், பொதிகை மலையில் அதிகளவில் காணப்படுகிறது. இந்த மூலிகை, ரத்த சோகை நோயை குணமாக்கும்.

பசியை போக்கி சிரஞ்சீவியாய் வாழவைக்கும் இந்த சங்கு நாராயண சஞ்சீவி மூலிகை.

In Hindu mythology, sanjeevani is a magical herb which has the power to cure serious nervous system problems. 

It was believed that medicines prepared from this herb could revive situations where death is almost certain.

The herb is mentioned in the Ramayana when Ravana's son Indrajit (Meghnad) hurls a powerful weapon at Lakshmana.

Lakshmana is badly wounded and is nearly killed by Indrajit. Hanuman was called upon to fetch this herb from the mount Dronagiri (Mahodaya) in the Himalayas.

Upon reaching Dronagiri Parvat, Hanuman could not identify the herb and lifted the whole mountain and brought it to the battlefield.

Several plants have been proposed as possible candidates for the sanjeevani plant, including: Selaginella bryopteris, Dendrobium plicatile (synonym Desmotrichum fimbriatum), Cressa cretica, and others.

A search of ancient texts at CSIR laboratories did not reveal any plant that can be definitively confirmed as sanjeevani.

In certain texts it is written that sanjeevani glows in the dark.

The herb, believed in Ayurvedic medicine to have medicinal properties, has been searched for unsuccessfully for centuries, up to modern times.

It is denoted in Mooligai books that Sanjeevi Mooligai has great powder to absorb more carbon dioxide and release the life gas oxygen.

When in contact with the miraculous mooligai leaves all the poisonous germs are killed immediately.

If you smell the pleasant odor of Sanjeevi, the cold and cough never attack you. 

It is one of the best Siddha Maruthuvam to treat the life threatening diseases like pneumonia, malaria, dengue and typhoid.

The best mooligai vaithiyam in Tamil nadu for cold is herbal medicine. 

The leaf juice of Sanjeevi Mooligai is taken for a week to treat of cold and congestion which usually affects the kids Kuzhanthaigal.

Generally to increase your immune resistances soak a bunch Sanjeevi Mooligai in 200ml water for eight hours and drink 50 ml every day morning and evening.

It will also change your skin tone and remove the skin wrinkles. 

In olden days people used the ground paste of Sanjeevi tree root and drumstick tree roots to get natural fairness.

This plant is uses one of the best medicine for chest pain.

A bunch of leaves and 4 tsp honey was boiled by adding 500ml of water. It was boiled until reaches the half of the total amount.

This medicine was use to cure chest pain naturally. 

Mooligai Agarathi states that the paste made by the combination of Sanjeevi Mooligai and pepper is the best medicine for viral fever.


Saturday, July 10, 2021

வெள்ளைப்படுதல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

*வெள்ளைப்படுதல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்*

வெள்ளைப்படுதல் என்பது அனேகமான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை. இதற்கு வெட்கம் வேண்டாமே..!

👉🏿 *வெள்ளைப்படுதல் என்பது என்ன?*

✍️நமது உடலில் பல பகுதிகளில் பிசுபிசுப்புத்தன்மை தேவைப்படுகிறது. பெண்களின் பிறப்பு உறுப்பு எப்போதும் ஈரப்பசை மற்றும் வழவழப்புடன் இருக்கவேண்டியதிருக்கிறது.

✍️அதற்காக இந்த பிசுபிசுப்பான வெள்ளைத் திரவம் சுரக்கிறது. இது, பிறப்பு உறுப்பின் தசைப் பகுதியில் இருந்தும், கருப்பையின் வாய் மற்றும் அதன் உட்சுவர்களில் இருந்தும் சிறிதளவு சுரந்து வருகிறது. இதன் சுரப்பு அதிகமாகிவிடும்போது அதனை வெள்ளைப்படுதல் என்று கூறுகிறோம்.

✍️வயதுக்கு வரப்போகும் பெண்களுக்கும், சமீபத்தில் வயதுக்கு வந்த பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும்தான்

*அதிக வெள்ளைப்படுதல் ஏற்படும் என்பது சரியா?*

✍️சரியல்ல! பெண்களின் எல்லாப் பருவத்திலும் இது வரக்கூடும். குறிப்பாக 15 வயது முதல் மாதவிலக்கு இறுதியாக நின்று போகும் காலம் வரை வெள்ளைப்படுதல் இருப்பது வழக்கம். கருப்பையில் நோய் ஏதாவது இருந்தால் மாதவிலக்கு நின்றுபோகும் காலத்திற்குப் பிறகும் வெள்ளைப்படுதல் நீடிக்கும்.

*எப்போது வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்?*

✍️சினைப்பையில் இருந்து சினைமுட்டை வெளியாகி கருப்பைக்கு வரும் காலத்தில், மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும்- பின்பும், கர்ப்பகாலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். தாம்பத்ய உறவின் போது பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.

*நோய்த்தன்மையாகும் வெள்ளைப்படுதலின் அறிகுறிகள் என்னென்ன?*

✍️நிறம், வாசனை, அளவு போன்றவை மாறுபடுவது அறிகுறியாகும். பிறப்பு உறுப்பில் அரிப்பும் ஏற்படும். உள்ளாடை நனையும் அளவிற்கும், கால்களில் வழியும் அளவிற்கும் இருந்தால் அது உடனடியாக கவனிக்கத்தகுந்த அறிகுறியாகும்.

👉🏿 *வெள்ளைப்படுதல் அதிகரிக்க காரணங்கள் என்ன?*

யோனிக்குழாயில் கிருமித் தொற்று இதற்கு முக்கிய காரணம்.
ஆண் உறுப்பின் நுனித்தோல், சிறுநீர்துளை, ஆண்மை சுரப்பி ஆகிய இடங்களில் 'டிரைக்கோமோனஸ் வெஜைனாலிஸ்' என்ற கிருமிகள் காணப்படுகின்றன.

✍️இது ஆண்களிடமிருந்து பெண்களுக்கு தொற்றுகிறது. கிருமிகள் உள்ள ஆண்கள் பயன்படுத்தும் கழிப்பிடம், குளியல் அறை போன்றவைகளை பயன்படுத்தும் திருமணமாகாத பெண்களுக்கும், சிறுமிகளுக்கும்கூட வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

✍️கிருமித் தொற்றால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் சுரப்பு மஞ்சள் நிறத்திலோ, இளம் பச்சை நிறத்திலோ காணப்படும். அரிப்பு தோன்றும். சிறுநீர் கழிக்கையில் எரிச்சலும், கடுப்பும் தோன்றும். தாம்பத்ய தொடர்பின்போது எரிச்சல், வலி ஏற்படும். மாதவிலக்கின்போது கிருமிகள் அதிகம் பெருகுவதால் அதிகமாக வெள்ளைப்படும்.

✍️யோனிக் குழாயில் நுரைத்த வெண் திரவம் தெரியும். அந்த குழாய் சிவந்து, கருப்பையின் வாய்ப் பகுதியில் செம்புள்ளிகளும் காணப்படும். வெள்ளைப்படுதலை ஏற்படுத்தும் கிருமிகள் பெண்ணிடம் இருந்து ஆணுக்கும் வரும். கருத்தடை மருந்துகள், நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவைகளை நீண்டகாலம் பயன்படுத்தி வந்தாலும் வெள்ளைப்படுதல் அதிகமாகும்.

✍️கண்களுக்கு தெரியாத நுண்கிருமிகள் கருப்பையில் தொற்றிக்கொண்டாலும் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும். அதனால் பெண்கள் உடலையும், உள்ளாடையையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். சிறுநீர் கழித்த ஒவ்வொருமுறையும் தண்ணீ­ரால் கழுவுவதும் அவசியம். நுண்கிருமிகளின் வகை மற்றும் தாக்குதலின் தன்மையைப் பொறுத்து வெள்ளைப்படுதலின் அளவு அதிகரிக்கும். பால்வினை நோய்களாலும் இந்த பாதிப்பு ஏற்படும்.

👉🏿 *கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?*

✍️கருப்பை கோளாறால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அரிப்பு தோன்றாது. ஆனால் அடிக்கடி அடிவயிறு வலிக்கும். கருப்பை புற்றுநோயால் அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால், அது இளஞ்சிவப்பாக இருக்கும். உள்ளாடையில் திட்டாக கறைபோல் படியும். சில வேளைகளில் உள்ளாடை முழுவதும் நனைந்துவிடவும்கூடும்.

✍️அப்போது நாற்றமும் அதிகமாக இருக்கும். ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் அதிக வெள்ளைப்படுதல் ஏற்படுவதுண்டு. கருத்தடைக்கு பயன்படுத்தும் சாதனங்கள், யோனிக் குழாயில் செருகும் மாத்திரைகள், அப்பகுதியில் பயன்படுத்தும் களிம்புகள் போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளைப்படுவதும் உண்டு. அத்தகைய பொருட்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டாலே வெள்ளைப்படுதல் சரியாகிவிடும்.

✍️சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால் தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெறவேண்டும். நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன. வெட்கமும், அலட்சியமும் கொண்ட பெண்களை வெள்ளைப்படுதல் அதிகம் பாதிக்கிறது.

Friday, July 9, 2021

கண்ணாடி_அணிபவர்களே.... அதிக கவனம் செலுத்துங்கள்..

கண்ணாடி_அணிபவர்களே....

கிட்டப்பார்வை_தூரப்பார்வை……

சரி_செய்ய…

பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும்.

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. இதனால் பலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற குறைபாடுகளை நாம் உணவு மூலமே சரியலாம்.

அந்த வகையில் கண் பார்வை சரியாக சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இங்கே காணலாம்.

குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளை எப்படி கண்டுபிடிப்பது❓

1)வகுப்புப்பாடங்கள் கவனிக்கும் போது தலை வலி அல்லது களைப் பாக இருப்பது.

2) கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படு வது.

3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.

4) கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.

5) கண் கட்டி அடிக்கடி வருவது.

6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போ ன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்.


வீட்டு_கை_வைத்தியம்

முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர்.

👉 இது குணமாக

முருங்கை விதை – 100 கிராம் 

மிளகு – 100 கிராம் 

இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம் சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும். 

 செய்முறை 1

குங்குமப்பூ + தண்ணீர் + தேன்

ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். அடுப்பை அனைத்து பின் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் மூடி வையுங்கள். பிறகு வடித்து, தேன் கலந்து பருகினால் போதும்.

இந்த தேநீரை பகலில் ஒரு வேளை அருந்தலாம். பார்வையை மேன்படுத்துவது மட்டுமல்லாமல், உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆர்தரைட்டிஸ் நோயினால் ஏற்படும் வலியை குணப்படுத்தும். ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கும்(improve).

 செய்முறை 2 

சோம்பு + பாதாம்

சோம்பு, பாதாம் இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சக்கரை சேர்த்துக்கொள்ளலாம். இந்த மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்துக்கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்குமுன், பாலில் ஒரு தேக்கரண்டி இந்த பவுடரைக் கலந்து பருகுங்கள். 

கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கேட்ராக்ட் பிரச்சனை எதுவாக இருந்தாலும், 40 நாட்கள் இந்த செய்முறையை பின்பற்றி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். 
 #உணவு_வகைகளில்_கண்களைப் #பாதுகாக்க…

வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இர த்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுக ளுக்கு கேரட், பீட்ரூட், வெண்பூசணி, முள்ளங்கி, வெ ண்டைக் காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணி க் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னா சி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம். அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம்.

சத்துக் குறைவால் கண் 
நோய்கள் நீங்க…

சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், 

கொத்த மல்லி இலைச் சாறு 10 மில்லி, 

தேங்காய் அரை மூடி, 

ஏலக்காய் 2, 

தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக்
கொள்ளவும். 

கொத்தமல்லி இலைச்சாறு, 
கேரட்சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண் டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில் லி) 
தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இரு வேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாகசெய்யவேண்டும்)

பப்பாளிப் பழம் 4 துண்டு, 

தேங்காய்ப் பால் அல்லது பசும்பால்
 1 டம்ளர் (200 மில்லி) 

தேவையான அளவு பனங்கற்கண்டு, 

ஏலக்காய் 2 

பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.

💊புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, 

இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 

1 ஸ்பூன் தேன் 

பேரீச்சை பழத்தை  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஜுஸ் செய்துகொள்ளவும் அதில் 
நெல்லிக்காய் பொடி, தேன் சேர்த்து 
கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.

 கண்புரை சரி செய்யும் ஒரு 
எளிய இயற்கை மூலிகை கஷாயம்

👉தேவையான மூலப்பொருட்கள்❓

அண்ணாச்சி பூ பொடி - 5 கிராம்

கொத்தமல்லி பொடி - 5 கிராம்
நாட்டு சர்க்கரை - 10 கிராம்

தண்ணீர் - 150 மிலி

 செய்முறை

👉🏿முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

👉🏿100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்தவும்

👉🏿மேலும் இந்த நீருடன் 5 கிராம் அண்ணாச்சி பூ பொடி மற்றும் கொத்தமல்லி பொடி சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்

👉🏿மேலும் இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

👉🏿மேலும் வடிகட்டிய நீருடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

👉🏿இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில்  தொடர்ந்து 14 நாட்கள் குடித்து வந்தால் கண்புரை நோய் முற்றிலுமாக நீங்கும்.

 கண் பார்வை தெளிவடைய…

பப்பாளிப் பழம் 2 துண்டு, 

பேரிச்சம்பழம் 4, 

செர்ரிபழம் 10, 

அன்னாசி பழம் 2 துண்டு, 

ஆப்பிள், திராட்சை 50 கிராம், 

மலை அல்லது ரஸ் தாளி 
வாழைப்பழம் 2, 

மாம்பழம் 2 பத்தை, 

பலாச் சுளை 2 (மாம் பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) 

இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப்பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.

கண் பார்வை குறைபாடு நீங்க

கண் பார்வை  வலுப்பெற 

அவுரி எனும் நீலி ,

மஞ்சள் கரிசலாங்கண்ணி ,

வல்லாரை 

இம் மூன்ரையும் 
சம அளவு  எடுத்து  நிழலில்  உலர்த்தி நன்கு காய்ந்த பிறகு இடித்து தூளாக்கி தினமும்❓ 2 கிராம் அளவு பசும்  பால்லில்  அருந்திவர கண் பார்வை தெளிவாகும் .

 கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள்……

ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து, இரவு தூங்கும்போது கண்ணைச் சுற்றி பற்றுப்போட்டு பின், காலையில் எழுந்ததும் கழுவிவிட வேண்டும்.

இதை தினமும் செய்வதோடு திரிபலா பொடியையோ அல்லது சூரணத்தையோ தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

ஜாதிக்காய் பார்வையைத் தெளிவுபடுத்துவதோடு கண்ணைச் சுற்றியுள்ள கருவளையத்தையும் குணப்படுத்தும்.

கண்பார்வை தெளிவாகும்
 கறிவேப்பிலை 

நெல்லிக்கனி 

 இஞ்சி

சம அளவு நாட்டு சக்கரை சேர்த்து அரைத்து வடித்தது.... 

கரும்புச்சாறு குடித்த மாதிரி சுவை இருக்கும். 

நோய் எதிர்பு சக்தி தரும், 
இரும்புச்சத்து கூடும், 
இரத்தசோகை வராது, 
கண்பார்வை தெளிவாகும், 
ஜீரணம் அருமையாக நடக்கும்......

அறிகுறிகள்

• கண்பார்வை திறன் குறைவாக காணப்படுதல்.

• கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள

மலைவாழைப்பழம்.

ஆப்ரிகாட் பழம்

தயிர்.

செய்முறை..

மலைவாழைப்பழம் ஒன்றுடன், 4 ஆப்ரிகாட் பழம் சேர்த்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

கண் மங்கல் நீங்க
மாலைக் கண் நோய்

அறிகுறிகள்

• கண் பார்வை மங்கலாக காணப்படுதல்.

• மாலைக் கண் நோய்.

தேவையான பொருட்கள்❓

பாகல் இலை.

மிளகு.

செய்முறை:,❓

பாகல் இலையுடன் 6 மிளகைச் சேர்த்துகொண்டு மைபோல் நசுக்கி இரவு நேரத்தில் தூங்க செல்வதற்கு முன்பாக கண்களை சுற்றி பூசிக்கொண்டு, காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்தால் கண் பார்வையில் நல்ல மாற்றம் தெரியும்.

கண் பார்வை திறன் 
அதிகரிக்க

அறிகுறிகள்❓

கண்பார்வை திறன் குறைவாக காணப்படுதல்.

கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்❓

கேரட்.

துவரம் பருப்பு.

தேங்காய்.

செய்முறை❓

கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

கண் பார்வை தெளிவாக

👉அறிகுறிகள்❓

கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.

கண் எரிச்சல்.

தேவையான பொருட்கள்❓

கடுக்காய்த் தோல்

நெல்லிக்காய்.

▶️செய்முறை❓

கடுக்காய் தோலுடன், நெல்லிக்காய் கொட்டையை நீக்கி காயவைத்து பொடியாக அரைத்து தினமும் மூன்று கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும். கண் சூடு குறையும.

அறிகுறிகள்❓

கண் சம்பந்தப்பட்ட நோய்கள்.

👉தேவையான பொருட்கள்❓

அன்னாசிப்பழம்.

▶️செய்முறை❓

அன்னாசி பழத்தின் தோள்களை நீக்கிவிட்டு தினமும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாக தெரியும

மங்கலான பார்வை.

⏩தேவையான பொருள்கள்❓

சீரகம்.

கொத்தமல்லி விதை.

வெல்லம்.

▶️செய்முறை❓

சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகியவற்றை எடுத்து இடித்து மைபோல சலித்து கொண்டு காலை, மாலை இதனை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.

கண் பார்வை அதிகரிக்க……💊

4 பேரிச்சம்பழம், 

50 கிராம் திராட்சை பழம், 

மலை வாழை அல்லது ரஸ்தாளி பழம் 2 , 

மாம்பழம் அல்லது பலாச்சுளை 
2 துண்டுகள் 

ஆகியவற்றை தேங்காய் பால் அல்லது பசும்பலோடு சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வரலாம்.

கண் பார்வை தெளிவடைய 💊

கரிசலாங்கண்ணித் தைலம் கரிசலாங்கண்ணி இலைச் சாற்றுடன், சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய் 

ஆகியவற்றின் சாறுகளையும் சம அளவாகச் சேர்த்து, அவற்றின் மொத்த அளவிற்குத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, சுண்டவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 

இந்தத் தைலத்தால் தலைமுழுகிவர வேண்டும். மேலும், தலைவலி, உடல்வலி, உடல் அசதி ஆகியவையும் தீரும். மலச்சிக்கல் தீர தினமும், காலையில் 5 பசுமையான இலைகளை மென்று சாப்பிட்டு வரவும்

வைட்டமின் "ஏ' -- 

ஒளி ஆற்றலை நரம்புத் தூண்டுதல் மூலமாக விழித்திரைக்கு எடுத்துச்செல்லுதல் மற்றும் பார்வை நிறமிகளை உருவாக்குவதன் மூலம் மாலைக்கண் நோயைத் தடுக்கும் முக்கிய பணியைச் செய்கிறது -- ஜாதிக்காய், கேரட், பச்சை காய்கறிகள், பப்பாளி, தக்காளி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, குடை மிளகாய், சிறிய மீன்கள், ஆட்டு ஈரல் -- 600 மைக்ரோ கிராம்.

 வைட்டமின் "சி' -- 

கண் புரையைத்தடுக்க உதவுகிறது, கண்ணில் உள்ள இணைப்புத் திசுக்களுக்கு உறுதியளிப்பதுடன், சீரான ரத்த ஓட்டத்திற்கும் துணை புரிகிறது -- நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சை, மிளகாய், கொய்யாப்பழம், ஆரஞ்சு நிற பழங்கள், கீரைகள், தக்காளி, பெர்ரி வகை பழங்கள் -- 40 மி.கிராம். 

வைட்டமின் "ஈ' -- 

லியூட்டின் மற்றும் ஜுசான்த்தின் ஆகியவற்றுடன் இணைந்து கண் புரை தோன்றுவதை தடுக்கிறது. முக்கியமான கொழுப்பு அமிலங்களுடன் இணைந்து கண்களைக் காக்கிறது -- பாதாம், சூரியகாந்தி விதை, செறிவூட்டப் பட்ட தானியங்கள், கடல் உணவுகள், எண்ணெய் வித்துக்கள், 
கிவி பழம் -- 

துத்தநாகம் -- 

கல்லீரலில் சேமிக்கப்பட்டிருக்கும் வைட்டமின் "ஏ' சத்தானது ரத்தத்தில் கலந்து ரெடினால் என்ற பொருள் ரெடினாயிக் அமிலமாக மாறுவதற்கு துணை புரிகிறது -- கடல் உணவுகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, ப்ரோக்கோலி, பரங்கி விதை, பீன்ஸ், காளான் -- 15 மி.கிராம். 

 செலினியம் -- 

ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்பட்டு கண்களின் செல் சிதைவை தடுக்கிறது -- முளைகட்டிய கோதுமை, ஈஸ்ட், வால்நட், கொட்டை உணவுகள், மீன்கள், பசலைக்கீரை, முட்டை -- 55 மைக்ரோகிராம். 

லியூட்டின் மற்றும் ஜுசான்த்தின் -- 

விழித்திரை தேய்மானம் மற்றும் வறட்சியைத் தடுக்கிறது. கண் புரை வராமல் தடுக்கிறது -- பசலைக்கீரை, மிளகாய், முட்டை, ப்ரோக்கோலி -- 10 மி.கிராம் மற்றும் 2 மி.கிராம். 

 ஒமேகா 3 மற்றும் 6 -- 

கொழுப்பு அமிலங்கள் கண் பார்வையை தெளிவாக்குவதுடன் வைட்டமின் "ஏ' மற்றும் "ஈ' உட்கிரகிக்கப்படுவதற்கு உதவி புரிகிறது -- கடல் உணவுகள், மீன் எண்ணெய், கொட்டை உணவுகள், ஆலிவ் எண்ணெய், சீஸ், முட்டை, வெண்ணெய் -- 1 கிராம் மற்றும் 5 கிராம். கண்களுக்குத் தேவைப்படும் சத்துகள் நிறைந்த உணவுகளைப் பச்சையாகவோ அல்லது சமைத்தோ தொடர்ச்சியாக உண்டு வருவதால், அந்த ஊட்டச்சத்து குறைபாடுகள் நீங்கப் பெற்று, ஆரோக்கியம் நிறைந்த கண்களுடன் ஒளிமயமான வாழ்க்கையும் பெறலாம். 

 
 கண் பார்வை குறைபாடு நீங்க……

*மேலும் கை வைத்தியம்…❓❗*

சர்க்கரை வள்ளிக் ‌கிழங்கு ‌கிடைக்கும் காலங்களில் அதனை அவித்தோ அல்லது உணவில் சமைத்தோ சாப்பிட்டு வரலாம். 
இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தடுக்கிறது..

கண்களில் ஏதேனும் தூசு விழுந்தாலோ அல்லது வலி, ஏற்பட்டாலோ கண்மருத்துவரை அணுகுவது நல்லது.
 
❌மருத்துவரின் ஆலோசனையில்லாமல் கண்களுக்குமருந்துகள் இடக்கூடாது.

அதிக வெயிலில் அல்லது வெப்பமான பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் குளிர் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். நல்ல தூக்கமே கண்களைப் பாதுகாக்கும்.

 கணினியில் வேலை செய்பவர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்யக் கூடாது.

அவ்வப்போது குறைந்தது 
5 நிமிடமாவது விழிகளை சுழலவிட்டுபின் கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்வதுபோல் இருக்க வேண்டும்.

உணவில் தினமும் கீரைகள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது.

எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 மது, புகை, போதை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

உடல் சூடு அடையாமலும், பித்த மாறுபாடு அடையாமலும் இருப்பதற்கு வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

மங்கலான ஒளியில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிக வெயில் இருக்கும்போது சூரியனைப் பார்க்கக்கூடாது.

நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

அதிக மன அழுத்தம், டென்ஷன் கூட பார்வை நரம்புகளைப் பாதிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெண்பூசணிக்காய் (100 கிராம்), 
வெற்றிலை (5), புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை மூன்றையும் சிறிதளவு எடுத்து அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக்கி காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வரவும். 

முருங்கை விதையிலிருந்து எடுக்கப்பட்ட முருங்கை எண்ணெய்யை தினமும் இரவு படுக்கப் போகும் முன் இரண்டு கண்களிலும் தலா ஒரு சொட்டு வீதம் போட்டு வந்தால் தூரப் பார்வை மற்றும் வயதானவர்களுக்கு உண்டாகும் சாளேஸ்வரம்  குறைபாட்டிலிருந்து  முற்றிலும் விடுபடலாம்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

வைட்டமின் ஏ அடங்கிய பழங்களையும், தயிரையும் காலை உணவில் செர்த்து கொள்வதனால், கண் பார்வையை ‌சீராக வைத்துக் கொள்ளலாம்.

பால், மீன், முட்டைகோசு, கேரட், கீரை, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
 எனவே இவற்றை உண்டு வந்தால் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்குக் கூட பார்வைத் ‌திறன் அதிகரிக்கும். குளுகோமா நோயைத் தவிர்க்கலாம்.

காய்கறிகள், பழங்கள், ‌கீரைகளை அதிகம் உணவில் உட்கொள்வது கண்ணுக்கு ‌மிகவும் நல்லது.

கொட்டை நீக்கிய நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் தோலை நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.

 ஒரு மலை வாழைப்பழம் எடுத்துக்கொண்டு அதோடு நான்கு ஆப்ரிகாட் பழம் மற்றும் அரை கப் தயிரை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுப்பதற்கு முன்பு உண்டு வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.

பசும்பாலில் முருங்கைப்பூவை சேர்த்து நன்கு காய்ச்சி காலை மாலை என இரு வேலையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரிக்கும். இதன் மூலம் கண் பார்வை தெளிவு பெரும்.

ஒரு வேலை உணவில் நெய் சேர்த்துக்கொள்வது, தினமும் மதிய உணவில் சிறு கீரை, 
பண்ணை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கேரட் போன்ற உணவு வகைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் கண் பார்வை குறைபாடு சரியாகும்.

50 மில்லி அருகம்புல் சாறோடு இளநீர் கலந்து அதோடு சிறிதளவு தேன் சேர்த்து காலை மாலை என இரு வேலையும் சாப்பிட்டு வர கண் பார்வை குறைபாடு சரியாகும்.

கண் பார்வை அதிகரிக்க, 4 பேரிச்சம்பழம், 50 கிராம் திராட்சை பழம், மலை வாழை அல்லது ரஸ்தாளி பழம் 2 , மாம்பழம் அல்லது பலாச்சுளை 2 துண்டுகள் ஆகியவற்றை தேங்காய் பால் அல்லது பசும்பலோடு சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வரலாம்.

 முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும். கண் பார்வை குறைபாடு நீங்கும்.

 கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.

 முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

 இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

 வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.

 முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.

 இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும்.

விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. 

இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. 

ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். 

நான்கு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.

பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். 

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

உச்சி வெயிலில் அலையக் கூடாது.

 அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற் றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.

 பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப் பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.

 முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.

 கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
  கொட்டை நீக்கிய நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் தோலை நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.

ஒரு மலை வாழைப்பழம் எடுத்துக்கொண்டு அதோடு நான்கு ஆப்ரிகாட் பழம் மற்றும் அரை கப் தயிரை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுப்பதற்கு முன்பு உண்டு வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.

 பசும்பாலில் முருங்கைப்பூவை சேர்த்து நன்கு காய்ச்சி காலை மாலை என இரு வேலையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரிக்கும். இதன் மூலம் கண் பார்வை தெளிவு பெரும்.

ஒரு வேலை உணவில் நெய் சேர்த்துக்கொள்வது, தினமும் மதிய உணவில் சிறு கீரை, பண்ணை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கேரட் போன்ற உணவு வகைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் கண் பார்வை குறைபாடு சரியாகும்.

💊 50 மில்லி அருகம்புல் சாறோடு இளநீர் கலந்து அதோடு சிறிதளவு தேன் சேர்த்து காலை மாலை என இரு வேலையும் சாப்பிட்டு வர கண் பார்வை குறைபாடு சரியாகும்.

💊 கண் பார்வை அதிகரிக்க, 4 பேரிச்சம்பழம், 50 கிராம் திராட்சை பழம், மலை வாழை அல்லது ரஸ்தாளி பழம் 2 , மாம்பழம் அல்லது பலாச்சுளை 2 துண்டுகள் ஆகியவற்றை தேங்காய் பால் அல்லது பசும்பலோடு சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வரலாம்.

💊நெல்லிக்காய்,கடுக்காய்த் தோல், இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.

💊அன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.

💊சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தன்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

💊இருவாட்சி சமூலத்தை பாலில் அரைத்து சிறிதளவு எடுத்து அரைக்கால் படி பாலில் கலந்து காலையில் சாப்பிட்டால் கண்களில் மங்கல் குறைந்து கண்கள் ஒளி பெறும்.

💊சம அளவு கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி தொடர்ந்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

💊 குளிப்பதற்கு…
கண் பார்வை மறைத்தல் குறைய ஆதண்டை இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளிக்க கண் பார்வை மறைத்தல் குறையும்.

💊ஒருபிடி ஆதண்டை இலையை கால்படி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு தேய்த்துக் குளித்து வர கண்களில் பித்தநீர் மற்றும் கண் பார்வை மறைத்தல் குறையும்.

💊பொன்னாங்கண்ணி இலையை சிறிதளவு எடுத்து காலையில் மென்று தின்று பின்பு பால் குடித்து வந்தால் கண்பார்வை தெளிவாகும்.

💊அருநெல்லிக்காயை வடாகம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்க்கு குளிர்ச்சியும் கண்களுக்கு பிரகாசமும் கிடைக்கும்.

💊செண்பகப் பூவை எடுத்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.கண் பார்வை மங்கல் குறைய மூக்கிரட்டை வேர் பொடி செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மங்கல் குறையும்.

💊மூக்கிரட்டை வேரை எடுத்து பொடி செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மங்கல் குறையும்.

💊வாழைப்பழங்களிலேயே மிகவும் சிறந்தது செவ்வாழை தான். இதில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் பார்வை தெளிவாக செவ்வாழை பழம் தொடர்ந்து சாப்பிட கண் பார்வை குறைப்பாடு குறையும்.

💊தும்பைப் பூ, நந்தியாவட்டைப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறி கண் பார்வை தெளிவடையும்.

💊முந்நூறு கிராம் நாட்டு நெல்லிக்காய்ப்பொடி, நூறு கிராம் சுக்குப் பொடி இரண்டையும் நன்றாகக் கலந்து இரண்டு தேக்கரண்டி அளவு பொடி எடுத்து நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேன் சேர்த்து அருந்தினால் கண் பார்வை அதிகரிக்கும்.

💊கொத்துமல்லிக் இலையுடன் துவரம் பருப்பையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர கண் பார்வைத் தெளிவடையும். கொத்தமல்லி இலையானது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நலன்களை தரக்கூடியதாகும்.

💊கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

💊மொபைல், கம்ப்யூட்டர், டி.வி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். மொபைல் மற்றும் கம்ப்யூட்டரின் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் இவற்றைப் பார்க்கக் கூடாது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத்திறனை பாதுகாக்கலாம்.

💊7 – 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது, இரவு 11 மணி முதல் நள்ளிரவு 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.

💊இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும். தினசரி, இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

💊வெளியில் செல்லும்போது கூலிங் கிளாஸ் அணியலாம். இவை தூசு, புகை மற்றும் புறஊதாக் கதிர்களிடம் இருந்து கண்களைக் காக்கிறது. மலிவுவிலையில் விற்கப்படும் சாலையோர கண்ணாடிகளை வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

💊கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகியவை பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகள்.

🔴 வேறு என்ன பயிற்சிகள் கண்களைப் பாதுகாக்க கடைபிடிக்க வேண்டும்❓

👉கண்களை கழுவுங்கள்

காலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக சுத்தப்படுத்துங்கள்.வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின் கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். இதனால் கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும். 

பிறகு, ஆப்டிக்கல்ஸ் கடைகளில் எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். ரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி, கண்களை திறந்தவாறு இந்த கப் பயன்படுத்துங்கள். தண்ணீர் வெளியில் வராதவாறு கப்பை அழுத்தி பிடித்துக்கொண்டு, தலையை மேலே தூக்குங்கள். கண் விழிகளை சுற்றுங்கள். ரோஸ் வாட்டர் கண்களின் மேற்பரப்பை நன்றாக சுத்தம் செய்யுமாறு கண் விழியை சுற்றுங்கள். ஒரு நிமிடம் களித்து, தண்ணீரை மாற்றி அடுத்த கண்ணையும் இவ்வாறு சுத்தம் செய்யுங்கள். 

கண்களில் உள்ள தொற்றை சரி செய்ய மிகவும் உதவும். மேலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். 

🔴 கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்❗

வேலை செய்யும்போது ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் பருகுங்கள். பின் கைகளைத் தேய்த்து, மூடிய கண்கள்மீது வைக்கவும். 

கைகளில் உள்ள அக்குப்ரேசர் புள்ளிகளை அழுத்துங்கள்.

ஒவ்வொருமுறை சிறுநீர் கலிக்கச் செல்லும்போதும், வாயில் தண்ணீர் நிரப்பி, கண்களைக் கழுவுங்கள். 

🔴 கண் பார்வை அதிகரிக்க, தினசரி உங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்❓❗

💊 இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

💊 வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.

💊 முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.

💊 இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும்.

💊 விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கத்தரிக்காய் ஒரு மூலிகை என்பது பலருக்கு தெரியாது.

கத்தரிக்காய்:- வாங்கலியோ;- கத்தரிக்காய் 


கத்தரிக்காய் ஒரு மூலிகை என்பது பலருக்கு தெரியாது. 

எனவே தான் சித்தர்கள் மரியாதையுடன் பத்தியக் கறி என்று இதனை அழைக்கிறார்கள்.

நம் இலக்கியங்களில் இதுவே வழுதுணங்காய் என அழைக்கப்படுகிறது. 

ஆஸ்துமா, ஈரல் நோய், காசம் போன்ற தீவிரமான நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு வலிமை தரக்கூடியது இது.

இதனை வற்றல்போல் செய்து நல்லெண்ணெயில் பொறித்து உண்டால் உடலுக்குத் தேவையான வெப்பசக்தி கிடைக்கும். 

தாது பலவீனமாகி, இல்வாழ்வில் உடல்சோர்வை போக்கும். 

ஈரல் வலிமை குன்றி இருந்தால், ஈரல் சோர்வைப் போக்கும்.

கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி மிளகுத்தூள், உப்பு தூவி உண்டால் பல் நோய்கள், அஜீரணம் நீங்கும். 

வாய்வுக் கோளாறு குறையும்.

பித்தம் போகும். 

மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடுகளுக்கு வரும் வயிற்று வலி, வயிற்றுப்புழுக்கள், வயிறு உப்புசம் ஆகியவற்றுக்குக் கத்தரிக்காயைத் தணலில் சுட்டுச் சிறிது பெருங்காயம் கூட்டி மாடுகளுக்குக் கட்டினால், அந்நோய்கள் விலகும்.

தோல் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் மட்டும் கத்தரிக்காயைச் சேர்க்கக்கூடாது. 

தோல் நோய்க் காரணங்களை இது மிகுவிக்கும்.

மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது என்னும் பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டு கத்தரிக்காய். 

நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் 
ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.

கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. 

முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். 

குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட 
வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும்.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். 
காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது.

ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். 

இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். 

உடலுக்கு சூடு தரும் காய்கறி இது.

எனவே, மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். 

நீர்க்கனத்தைக் குறைக்கும். 

உடல் பருமனைக் குறைக்கும். 

உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது.

உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும். 

மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும்.

இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும்.

வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்….