Thursday, May 27, 2021

ஆஸ்துமா மற்றும் பல நோய்கள் குணமாக்கும் கிராம்பு & தேன்


*ஆஸ்துமா மற்றும் பல நோய்கள் குணமாக்கும் கிராம்பு & தேன் :*

🍯 முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்த கசாயத்தில் தேன் கலந்து அதிகாலையில் குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

🍯 கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.

🍯 கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி குணமாகும்.

🍯 கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

🍯 50 கிராம் அளவு கிராம்பை பொடித்து சலித்துக் கொள்ளவும். நாட்டுக் கோழி முட்டை 5 எண்ணிக்கையில் வாங்கி அவித்து, மஞ்சள் கருவை மட்டும் எடுத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
½ கிலோ சுத்தமான தேனை பாத்திரத்தில் ஊற்றி சிறு தீயாக கொதிக்க விடவும். தேன் கொதிக்க ஆரம்பித்ததும் மஞ்சள் கருவை அதில் கலந்து கிராம்பினையும் சேர்த்து இறக்கிவிடவும்.
காலை, இரவு இருவேளை உணவுக்குப்பின் கொட்டை பாக்கு அளவு சாப்பிட போகத்தில் அபரிமிதமான சக்தி உண்டாகும்.

No comments:

Post a Comment