Tuesday, August 23, 2016

மாதவிலக்கு, ஏன்?, எதனால்?, எப்படி?

மாதவிலக்கு, ஏன்?, எதனால்?, எப்படி?

 பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் மனித உடலின் வளர்ச்சி மற்றும் சீரான செயல்பாட்டினை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில் சுரப்பிகளின் பங்கு முக்கியமானது. இவற்றால் சுரக்கப் படும் நீர்மங்களே (Hormones) உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் “ஹைப்போதாலமஸ்” (hypothalamus) என்னும் சுரப்பிதான் மனிதனின் இனப் பெருக்க செயல்களை கண்காணித்து செயல்படுத்துகிறது. ஹைப்போதாலமஸ் சுரப்பியினால் சுரக்கப்படும் இயக்கு நீர்மமான Gonadotropin releasing hormone (gnrh) சுரந்தவுடன், இதன் கட்டுப் பாட்டில் இருக்கும் Anterior pituitary gland எனும் சுரப்பி விழித்துக் கொள்ளும். இந்த சுரப்பி தன் பங்கிற்கு இரண்டு இயக்கு நீர்மங்களை சுரக்கிறன்றது. அவை முறையே Follicle Stimulating Hormone(FSH), Luteinizing Hormone(LH) என்பனவாகும். இந்த இரண்டு இயக்கு நீர்மங்களே கருமுட்டையை உற்பத்தி செய்யும் சூலகங்களை தூண்டுகிறது.  இதே சமயத்தில் கருவறையின் உட்புறத் தோல் கோழைப் படிவமாக தடிக்கத் துவங்கும், இந்த செயல் பதினைந்து நாட்கள் வரை நீடிக்கும். அரை செண்ட்டி மீட்டர் அளவு தடிமனான இந்த கோழைப் படலத்திற்கு அடியில் இருக்கும் நுண்ணிய குருதி நாளங்களில் குருதி பாய்ந்து நிரம்பும். ஒரு வேளை கரு தரித்து விட்டால் அந்த கருமுட்டையை பாதுகாக்கவும், வளரச் செய்யவுமே இந்த ஏற்பாட்டினை கருவறை செய்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் கருத்தரிப்பு நிகழாவிட்டால் இந்த கருவறையின் உட்புறத்தில் உருவாகி இருந்த பஞ்சு மெத்தை போன்ற அமைப்பு துண்டு துண்டாக பிய்ந்து பிறப்பு உறுப்பின் வழியே வெளிப்பட ஆரம்பிக்கும். அப்போது இந்த கோழைப் படலத்தின் கீழே உள்ள நுண்ணிய குருதிநாளங்கள் உடைந்து அதில் நிரம்பியிருந்த குருதியும் வெளியேறும். இவ்வாறு வெளியேறும் கழிவை “சூதகம்” என்கிறோம். இது இயல்பான ஒரு உடல் இயங்கியல் நிகழ்வு. ஆனால் எல்லாப் பெண்களுக்கும் இத்தகைய மாதவிலக்கு சுழற்சி இயல்பாக நடப்பதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மேலும் இந்த மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னதாகவும், மாதவிலக்கின் போதும் பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை அனுபவிக்க வேண்டி வருகிறடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment