வாழ்க்கை_வாழ்வதற்கே...
கை குலுக்கும் பொழுது
உறுதியாக கை குலுக்குங்கள்...
கண்ணைப் பார்த்து பேசுங்கள் அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசுங்கள்.
யாருடனாவது மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டால் எப்பொழுதும் முதலில் இறங்கி போய் பேசி சரி செய்வது நீங்களாக இருங்கள்.
எப்பொழுதும் துணிச்சலை இழக்காதீர்கள் பயம் உங்கள் தொண்டையை அடைக்கும் பொழுதும் கூட துணிச்சலுடன் இருங்கள் அல்லது இருப்பது போல் நடிக்கவாவது செய்யுங்கள்.
வாழ்க்கை துணை அல்லது காதலியை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். ஏனெனில் உங்களது வாழ்க்கையில் 90% நிகழ்வுகள் இவரை சார்ந்தே அமைகிறது.
உங்களுக்கு தெரியாத நபருக்கும் உங்களால் முடிந்த உதவி செய்ய
தயாராக இருங்கள்.
உங்களுக்கு தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.
Knowledge sharing is a must. கற்று கொள்ளவும் தயங்காததீர்கள். No Ego.
குழந்தைகளோடு விளையாடும் பொழுது அவர்களை வெற்றி பெற விடுங்கள்.
இந்த உலகத்தில் துக்கப்படும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. பிறக்கும் பொழுதும் வெறும் கையோடு தான் வந்தோம் போகும் பொழுதும் வெறும் கையோடு தான் போக போகிறோம் எனவே எப்பொழுதும் மன மகிழ்வுடனேயே சூழ்நிலையை அனுசரித்து இருங்கள்.
எல்லா பூட்டுகளும் சாவிகளோடு தான் தயாரிக்கப்படுகின்றன அது போலவே எல்லா மோசமான சூழ்நிலைகளும் அதற்கான தீர்வுகளோடு தான் வருகின்றன.
தான் சொன்னதே சரி என்று பிடிவாதமாக இருக்கும் நபரோடு மோதாதீர்கள்.
waste of time.
நீங்கள் விரும்பும் நபரை எந்தளவுக்கு விரும்புகிறீர்கள் என கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தெரிவிக்க மறவாதீர்கள்.
நண்பர்களோ உறவினர்களோ உடல் நலமில்லாமல் இருந்தால் நேரில் சென்று நலம் விசாரிக்க தவறாதீர்கள்.
அவ்வப்பொழுது புதிய இடங்களுக்கு
பயணம் செய்யுங்கள். உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்.
தூங்கும் பொழுது தலைமாட்டில்
ஒரு சிறிய நோட்டையும் பேனாவையும் வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றி போடக்கூடிய யோசனைகள் பெரும்பாலும் படுக்கையில் இருக்கும் பொழுதுதான் வரும்.
என் அனுபவம்.
வங்கி வாசலில் நிற்கும் காவலாளியாக இருக்கட்டும் டீ போட்டு கொடுக்கும் மாஸ்டராக இருக்கட்டும், ஒரு வணக்கத்தை தெரிவிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.
மனிதநேயம் மேம்படும்.
குழந்தைகள் போகும் பள்ளிபேருந்தை பார்த்தால் டாடா சொல்லுங்கள் சிறு குழந்தைகளை பார்த்தால் புன்னகைக்க மறக்காதீர்கள்.
வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி
மர்மம் தான்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
வாழ்த்துகள்.
வாழ்க_வளத்துடன்.
Ganesan Pondicherry
No comments:
Post a Comment