Saturday, May 17, 2025

மருதாணியின் நன்மைகள்.



மருதாணியின் நன்மைகள்.
மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் ஆகிய பெயர்களும் மருதாணி தாவரத்திற்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
சித்தர்கள் இதற்கு அட்டகர்ம மூலிகை என்று சொல்லி இருக்கிறார்கள். ஏனென்றால் இந்த மூலிகையை நம் வீட்டில் வைக்கும்போது எந்த விதமான கிருமிகள் மற்றும்   பூச்சிகளாக இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும். இந்த மருதாணி இலை (Maruthani Leaves) மட்டுமின்றி பூ, காய், வேர், விதை, பட்டை போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது.

மருதாணி வைப்பதற்கு மிகவும் ஏற்ற இடங்கள் உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும்தாம். உடலில் இருக்கிற அத்தனை நரம்புகளின் பிரதிபலிப்புப் புள்ளிகளும் இந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன. இங்கே மருதாணி வைப்பதால், உடல் குளிர்ச்சியாகும், ரத்த ஓட்டம் சீராகும், இதயப் படபடப்பு, ரத்த அழுத்தம் இரண்டும் கன்ட்ரோல் ஆகும், ஸ்ட்ரெஸ் குறையும்.

மருதாணி இலைகள் உடலில் ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை நீக்க உதவுகிறது. மருதாணி இலைகளை எடுத்து நீரில் கொதிக்க வைக்கவும். அந்த நீரை வடிகட்டி அதில் இரண்டு மடங்கு அளவு நீர் சேர்த்து இரவு உணவுக்கு பிறகு குடிக்க வேண்டும்.

ஒரு டம்ளர் அளவு வரும் வரை குடித்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறு, ரத்தம் சுத்தியாகும். ஆறுமாதங்களுக்கு ஒருமுறை இதை குடிக்கலாம். ஆனால் மருதாணி இலைகள் புதிதாக பயன்படுத்த வேண்டும்.

மருதாணி மரப்பூக்களை எடுத்து சுத்தப்படுத்தி வைக்கவும். தினமும் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு மருதாணி பூக்களை அரைத்து சேர்த்து குடித்துவர வேண்டும். தொடர்ந்து இப்படி செய்துவந்தால் தூக்கம் நன்றாக வரும்.

தூக்கமாத்திரை போட்டால் தான் தூக்கமே வருகிறது என்பவர்களும் கூட இதை முயற்சி செய்தால் மாத்திரைகள் இல்லாமலே தூக்கம் வரும்.

நகங்களில் வரக்கூடிய நகச்சுத்தி, நகவிரல் இடுக்கில் புண், விரல்களின் ஓரங்களில் தோல் உரிதல் போஒன்றவ வருவதற்கு காரணம் கண்ணுக்கு தெரியாத பூஞ்சைகளும் கிருமிகளும் தான். நகச்சுத்தி அதிக வலி மிக்கது. உபாதை அதிகம் தரக்கூடியது. இதை போக்க எளிய வைத்தியம் மருதாணியை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து தடவுவதுதான்.

தொடர்ந்து 5 நாட்கள் வரை இதை நகத்தில் தடவி ஒரு மணி நேரம் விட்டு கழுவி வந்தால் நகச்சுத்தி காணாமல் போகும். கூடுதலாக நகத்தில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகள், பூஞ்சைகள் வெளியேறும். உடலில் கொப்புளங்கள், வேனல் கட்டிகள் வந்தாலும் இதை பயன்படுத்தலாம். கூடுதலாக வேப்பிலையை சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

மருதாணி இலையை நன்றாக கொழுந்தாக எடுத்து வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு 1 மணி நேரம் கழித்து அந்த நீரை வாயில் ஊற்றி சில விநாடிகள் வைத்திருந்து நன்றாக கொப்புளிக்க வேண்டும். வாய் முழுக்க தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்படி செய்துவந்தால் வாய்ப்புண் அதிசயமாக இரண்டே நாளில் காணாமல் போகும்.

வலி எரிச்சல் உபாதை இருக்காது. தொண்டை வரையும் கொப்புளிக்கலாம். அதனால் சுத்தமான நீரில் சுத்தம் செய்த மருதாணி கொழுந்தை பயன்படுத்த வேண்டும். இதனால் அவை உடலுக்குள் போனாலும் கெடுதல் இருக்காது.

சருமத்தில் வரும் கரும்படை, வண்ணான் படை, கால் இடுக்கிலும், கழுத்து, கை இடுக்கில், தொடையில் வரக்கூடும். மருதாணி இலையை மஞ்சள், வேப்பிலையுடன் அரைத்து அந்த இடத்தில் தடவி குளிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் அளவுக்கு இப்படி செய்துவந்தால் கரும்படை காணாமல் போகும். ஆனால் அதை பயன்படுத்தும் போது அதிக சோப்பு போடக்கூடாது. மருதாணி இலையை சரியாக பயன்படுத்தினால் அவை குஷ்ட நோயை கூட குணப்படுத்தும் தன்மை கொண்டது. சொரி, சிரங்கு போன்றவற்றுக்கும் இந்த வைத்தியம் செய்யலாம்.

கால் ஆணி என்பது உள்ளங்காலில் வரக்கூடியது. கால் ஆணி வந்த பிறகு உபாதை தாங்கமுடியாததாக இருக்கும். சிலருக்கு காலை எடுத்துவைக்கவும் முடியாது. இவை அதிகமாகமால் குணப்படுத்தவும் மருதாணி சிறப்பாக உதவும்.

வசம்பை இடித்து மருதாணியுடன் சேர்த்து அரைத்து அதில் மஞ்சள், கற்பூரம் கலந்து மீண்டும் அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இரவு படுக்கும் போது உள்ளங்காலில் கால் ஆணி இருக்கும் இடத்தில் அந்த விழுதை வைத்து மெல்லிய துணியில் கட்டினால் கால் ஆணி குணமாகும். தொடர்ந்து 15 நாட்கள் வரையாவது கட்டிவந்தாலே ஓரளவு குணமாகும்.

பாதங்களில் எரிச்சல், சேற்றுப்புண், கால் நகம் சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு மருதாணி இலையை அரைத்து பாதத்தில் தடவி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இம்முறையே கடை பிடிக்கப்படுகிறது.

மருதாணி இட்டுக்கொள்வதால் சிலருக்கு சளிப் பிடித்து விடும். அதனால் மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 6 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்தால் ஜலதோஷம் பிடிக்காது. நீலகிரி தைலத்தில் 4, 5 சொட்டுகள் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்.

மருதாணி இலைகள் (Maruthani Leaves) உறவைக்கப்பட்ட தண்ணீரை அருந்தி வருபவர்களுக்கு இரத்த அழுத்தம் சமச்சீரான அளவில் இருக்கச் செய்கிறது.
இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் இரத்த நாளங்களில் இரத்தம் கட்டிக்கொள்ளும் நிலை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருதாணி இலைகளுக்கு (Maruthani Leaves) உண்டு.
இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் மருதாணி இலை (Maruthani Leaves) தண்ணீரை அருந்தி வருவது நல்லது.

உடல் உஷ்ண நிலை திடீரென்று அதிகரிப்பதாலும், வயிற்றிற்கு ஒவ்வாத சில வகை உணவுகளை உண்பதாலும், கிருமி நிறைந்த உணவு, நீர் போன்றவற்றை அருந்துவதாலும் சிலருக்கு தீராத வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. மருதாணி இலைகளை அரைத்த பின்பு அந்த இலைகளை பிழிந்து வடிகட்டி எடுக்கப்படும் மருதாணி இலை சாற்றை தீராத வயிற்று போக்கு சீதபேதி பாதிப்பு கொண்டவர்கள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற கொஞ்சம் மருதாணி (Maruthani) இலைகளை, தூய்மையான தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை அருந்தினால் கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற அனைத்து உறுப்புகளில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறி இவ்வுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

கல்லீரல் பிரச்னையால் உண்டான நோய்களை இது குணப்படுத்தும். குறிப்பாக, மஞ்சள்காமாலைக்கு இது மருந்தாகப் பயன்படும். ஆனால், மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்வது நல்லது.

சுகர் அதிகமாக இருப்பவர்களுக்கு நரம்புகள் சீக்கிரம் பலவீனமாகிவிடும். அதனால், சிலருக்கு கால்கள் குடைவதுபோல வலிக்கும், சிலருக்கு பாதம் மரத்துப்போகும், சிலருக்கு பாதத்தில் முள் போல குத்தும் அல்லது நெருப்பில் கால் வைத்ததுபோல எரியும். நீரிழிவுப் பிரச்னை இருப்பவர்களுக்கு, காலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்காது. அதிலும் கால் கட்டை விரல் வரைக்கும் ரத்த ஓட்டம் பாயாது. அதனால்தான், அவர்களுக்கு கால் கட்டை விரலில் டயபடிக் அல்சர் வருகிறது. நீரிழிவு இருப்பவர்கள் மருதாணியுடன் மஞ்சள் வைத்து அரைத்து கட்டை விரலில், தொடர்ந்து வைத்து வந்தால்,  அந்தப் பகுதியிலும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால், இத்தனை பலன்களும் மருதாணி இலைகளை அரைத்து வைக்கும்போதுதான் கிடைக்கும்.

மேகநோய்க்கு ஆகச்சிறந்த மருந்தாக இது இருக்கிறது. இதன் இலையுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, அதைப் பாலுடன் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்திவந்தால் மேகநோயால் உண்டாகும் புண்கள் குணமாகும்.

மாதவிடாய்க்கு முன்னதாகப் பெண்களிடம் ஒருவித எரிச்சலும் சிடுசிடுப்பும் காணப்படும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி வரும். இவற்றுக்கெல்லாம் காரணம் ஹார்மோன் இம்பேலன்ஸ்தான். இயற்கை வைத்தியம், விரல் முனைகளைத் தலைக்கான பகுதியாகப் பார்க்கிறது. அங்கு மருதாணி வைப்பதால்,  ஒற்றைத் தலைவலிபோகும். எரிச்சலும் சிடுசிடுப்பும் மட்டுப்படும்.

மருதாணி வாதங்கள் வராமல் இருக்கவும், அதனால் வருகிற வலியை நீக்கவும் இது உதவும்.

மருதாணி விதை எண்ணெய்யை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும்.

மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.

No comments:

Post a Comment