Tuesday, May 20, 2025

வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை_வாழ்வதற்கே...

கை குலுக்கும் பொழுது 
உறுதியாக கை குலுக்குங்கள்...

கண்ணைப் பார்த்து பேசுங்கள் அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசுங்கள்.

யாருடனாவது மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டால் எப்பொழுதும் முதலில் இறங்கி போய்  பேசி சரி செய்வது நீங்களாக இருங்கள்.

எப்பொழுதும் துணிச்சலை இழக்காதீர்கள் பயம் உங்கள் தொண்டையை அடைக்கும் பொழுதும் கூட துணிச்சலுடன் இருங்கள் அல்லது இருப்பது போல் நடிக்கவாவது செய்யுங்கள்.

வாழ்க்கை துணை அல்லது காதலியை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். ஏனெனில் உங்களது வாழ்க்கையில் 90% நிகழ்வுகள் இவரை சார்ந்தே அமைகிறது.

உங்களுக்கு தெரியாத நபருக்கும் உங்களால் முடிந்த உதவி செய்ய 
தயாராக இருங்கள்.

உங்களுக்கு தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லுங்கள். 
Knowledge sharing is a must. கற்று கொள்ளவும் தயங்காததீர்கள். No Ego.

குழந்தைகளோடு விளையாடும் பொழுது அவர்களை வெற்றி பெற விடுங்கள்.

இந்த உலகத்தில் துக்கப்படும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. பிறக்கும் பொழுதும் வெறும் கையோடு தான் வந்தோம் போகும் பொழுதும் வெறும் கையோடு தான் போக போகிறோம் எனவே எப்பொழுதும் மன மகிழ்வுடனேயே சூழ்நிலையை அனுசரித்து இருங்கள்.

எல்லா பூட்டுகளும் சாவிகளோடு தான் தயாரிக்கப்படுகின்றன அது போலவே எல்லா மோசமான சூழ்நிலைகளும் அதற்கான தீர்வுகளோடு தான் வருகின்றன.

தான் சொன்னதே சரி என்று பிடிவாதமாக இருக்கும் நபரோடு மோதாதீர்கள்.
waste of time.

நீங்கள் விரும்பும் நபரை எந்தளவுக்கு விரும்புகிறீர்கள் என கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தெரிவிக்க மறவாதீர்கள்.

நண்பர்களோ உறவினர்களோ உடல் நலமில்லாமல் இருந்தால் நேரில் சென்று நலம் விசாரிக்க தவறாதீர்கள்.

அவ்வப்பொழுது புதிய இடங்களுக்கு 
பயணம் செய்யுங்கள். உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்.

தூங்கும் பொழுது தலைமாட்டில் 
ஒரு சிறிய நோட்டையும் பேனாவையும் வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றி போடக்கூடிய யோசனைகள் பெரும்பாலும்  படுக்கையில் இருக்கும் பொழுதுதான் வரும். 
என் அனுபவம்.

வங்கி வாசலில் நிற்கும் காவலாளியாக இருக்கட்டும் டீ போட்டு கொடுக்கும் மாஸ்டராக இருக்கட்டும், ஒரு வணக்கத்தை தெரிவிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.
மனிதநேயம் மேம்படும்.

குழந்தைகள் போகும் பள்ளிபேருந்தை பார்த்தால் டாடா சொல்லுங்கள் சிறு குழந்தைகளை பார்த்தால் புன்னகைக்க மறக்காதீர்கள்.

வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி 
மர்மம் தான்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!     

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!    

வாழ்த்துகள்.

வாழ்க_வளத்துடன்.
Ganesan Pondicherry 

Sunday, May 18, 2025

உடல் உறுப்பு கடிகாரம் – இயற்கையின் நேரக் கணிப்பு

உடல் உறுப்பு கடிகாரம் – இயற்கையின் நேரக் கணிப்பு* 

நாம் உணராதபடி, நம் உடல் ஒரு மிகச் சிறந்த கடிகாரம் போல இயங்குகிறது. நாளில் 24 மணி நேரத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் ஒரு உறுப்பின் செயல்பாடு அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் அந்த உறுப்பை ஒத்த செயல்களில் ஈடுபடுவது, நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு மிகுந்த பயனை தரும். இதை “உடல் உறுப்பு கடிகாரம்” என்று அழைக்கிறோம்.

 *நேரம் மற்றும் உறுப்புகள்:* 

அதிகாலை 3–5 மணி – *நுரையீரல்* 
சுவாசப் பயிற்சி, தியானம், பாட்டுப் பயிற்சி இவற்றைச் செய்ய நல்ல நேரம்.

அதிகாலை 5–7 மணி – *பெருங்குடல்* 
கழிவுகளை வெளியேற்றும் நேரம். எரிச்சலூட்டும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

காலை 7–9 மணி – *சிறுநீர்ப்பை* 
காலை உணவுக்கான சிறந்த நேரம். வெப்பமான உணவுகள் பரவலாக உபயோகிக்கலாம்.

காலை 9–11 மணி – *குண்டலினி* 
தூண்டலான செயல்பாடுகள் மற்றும் செயற்பாடுகளுக்கான நேரம்.

பகல் 11–1 மணி – *இதயம்* 
நிம்மதியான மதிய உணவு – அதிகப்படியான வேலை அழுத்தம் தவிர்க்க வேண்டும்.

மாலை 1–3 மணி – *சிறுநீர் பை* 
தண்ணீர் அதிகம் பருகவும். குளிர்ச்சியான உணவுகள் தவிர்க்கலாம்.

மாலை 3–5 மணி – *சிறுநீரகம்* 
சிறுநீரக செயல்பாடு அதிகரிக்கும். ஓய்வு அல்லது மெதுவான நடை பயிற்சி சிறந்தது.

மாலை 5–7 மணி – *இருதயம்* 
மெதுவான உடற்பயிற்சி, மன நிம்மதி தரும் செயல்கள்.

இரவு 7–9 மணி – *இதயம்* 
இரவு உணவுக்கான சிறந்த நேரம் – சீரான, இலகுரக உணவு உகந்தது.

இரவு 9–11 மணி – *நரம்புகள்* 
அமைதியான சூழ்நிலையில் ஓய்வு, புத்தக வாசிப்பு.

நள் இரவு 11–1 மணி – *பித்தப்பை* 
ஆழ்ந்த தூக்கம் தேவைப்படும் நேரம்.

பின் இரவு 1–3 மணி – *கல்லீரல்* 
உடலுக்கு தேவைப்படும் சுத்திகரிப்பு நடக்கும் நேரம்.

 *முக்கிய குறிப்புகள்:* 

நாள் முழுவதும் சரியான நேரத்தில் உணவு, ஓய்வு, பயிற்சி ஆகியவை உள்ள உறுப்புகளின் இயற்கை செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருக்கின்றன.

 *இயற்கையை ஒத்த வாழ்க்கை முறை உடல்நலத்தை மேம்படுத்தும்*

வாழ்நாளில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்


வாழ்நாளில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள்

நெஞ்சு கரிப்பு, Acid Reflex ஏன்‌ வருகிறது? 
இது உடம்பில் உள்ள குறைபாடா?
இதற்கு மருத்துவம் தேவையா?

நெஞ்சு கரிப்பு வருகிறது என்றால் உடம்பு தன் வேலையை நன்றாக செய்கிறது, சாப்பிட்ட உணவில் குறைபாடு உள்ளது என்று தான் அர்த்தம்.

ஒன்றை கவனித்தீர்கள் என்றால் எல்லா நேரங்களிலும் இது ஏற்படுவது இல்லை.  வெளியில் சாப்பிடும்போது, திருமண விருந்து, ஓட்டல்களில் சாப்பிடும்போது அதிலும் எண்ணெய், பால் மற்றும் இனிப்பு சம்பந்தப்பட்ட உணவுகள் சாப்பிட்ட பிறகு வருகிறது.

இதனை நம் உடம்பில் உள்ள குறைபாடு என்று மருத்துவரிடம் செல்வது தவறு.

என்ன செய்யலாம்:

1.  இந்த துன்பம் வந்தது நாம் உண்ட உணவில் உள்ள செரிமானத்திற்கு ஒவ்வாத பொருட்கள் என்று உணர வேண்டும்.  (தற்காலிகமாக சில Antacid மருந்துகள் Alginate Raft போன்றவை உடனடி நிவாரணம் தருகிறது, இந்த நிலைக்கு வராமல் தடுப்பதே சிறந்தது)

2.  முன்பு உண்ட உணவிற்கும் அடுத்த வேளை உணவிற்கும் போதிய இடைவெளி இல்லாமல் செரிமானத்திற்கு முன்பே அவசரப்பட்டு அல்லது நிர்பந்திக்கப்பட்டு சாப்பிடுவது.

3.  அளவுக்கு அதிகமான உணவை Party Mood இல் எடுத்துக்கொள்வது.

4.  எந்த மாட்டில், யார், எப்போது கறந்த பால் என்று தெரியவில்லை என்றால் (எது கலப்படம் என்று தெரியாது), காபி, பால், டீ, பாலில் செய்த இனிப்புகள், பாயாசம் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

5.  இது மிகவும் முக்கியமானது,
பெரும்பாலான ஓட்டல்களில் தோசை தவிர எல்லாமே வெளியில் இருந்து எங்கெங்கோ செய்த ரெடிமேட் பொருட்களை வைத்து சப்ளை செய்ய ஆட்களை மட்டுமே வைத்து உணவு விடுதிகள் நடத்துகின்றனர்.

ரெடிமேட் பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம், பண்ணீர் பட்டர் மசாலா போன்ற உணவுகள் கெட்டுப்போகாமல் பல நாட்களுக்கு வரவேண்டும் என்பதற்காக பிரிசர்வேட்டிவ் கெமிக்கல்கள் கலக்கப்படுகிறது, சுவை, நறுமணம் கூட்டுவதற்கு செண்ட் Briyani Essence, Ajinomoto கலக்கப்படுகிறது.  செலவை குறைக்க நெய்க்கு பதிலாக டால்டா, கலப்பட ரிபைண்ட் ஆயில் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.  இடியாப்பம் கேட்டால் யாரும் தமக்காக உடனே பிழிந்து, சமைத்து தருவது எல்லாம் கிடையாது, ஒரு மாதத்துக்கு முன்பு செய்து வருவதை நீர் தெளித்து ஆவியில் வைத்து தருகிறார்கள்.  கண்டிப்பாக நெஞ்செரிச்சல் வரும்.  எல்லாம் ரெடிமேட் தான்.  கெடாமல் இருக்க பல கலப்படங்கள் செய்யப்பட்டது தான்.

6.  பிரட், பப்ஸ். பேக்கரி உணவுகள் எல்லாவற்றிலும் அளவுக்கு அதிகமாக பிரிசர்வேட்டிவ் மற்றும் செரிமானத்திற்கு ஒவ்வாத எசன்ஸ் கலக்கப்படுகிறது.

7.  இனிப்புகள், பல நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள மெயின் ஆபீஸ் தொழிற்சாலை போன்ற இனிப்பு தயாரிக்கும் கம்பெனிகளில் ஒரு நாளைக்கு பல்லாயிரம் கிலோ தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது.  எந்த உணவு தயாரிப்பு கட்டுப்பாட்டு முறைகளையும் கடைப்பிடித்தார் கள் என்று நம்புவது உங்கள் திறமைக்கு சவால்.  உங்கள் ஆரோக்கியத்தை வைத்து சூதாடுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.  பார்ப்பதற்கு பல வண்ணங்களில் கண்கவர் வடிவங்களில் இருக்கும்.  விலை ஒரு கிலோ 2000 வரை போகிறது.

8.  அளவுக்கு அதிகமான இறைச்சி. வறுத்த உணவுகள், ஒவ்வொரு ஊரிலும் திருவிழா, திருமண விருந்துக்கு பின்னர் 2 பேர் டிக்கெட் வாங்குவது இதனால் தான்.

சாராயத்தையும், டூப்ளிகேட் சாராயத்தையும் அரசாங்கமே விற்கும் மாநிலத்தில் வசிக்கிறோம்.  அவர்களே கள்ள சாராயம் விற்றவர்களுக்கு நிவாரணம் தருவதை யும் கண்டோம்.  
கலப்பட உணவு தயாரிப்புகளை கண்டுபிடித்து தடுப்பது எப்போது சாத்தியமாகும் என்பது நமக்கு தெரியாது.

9. அரை வேக்காடு அரிசி சாதம்.
சில ஓட்டல்களில் மதிய சாப்பாட்டுக்கு சமைக்கும் அரிசி சாதம் சில சோம்பேறி சமையல் காரர்களின் புத்திசாலி தனத்தால் அரை வேக்காடு கொடுத்து எடுக்கப்படுகிறது, முழுமையாக வெந்த அரிசி சீக்கிரம் கெட்டுவிடும் அடுத்த வேளைக்கு பயன்படுத்த முடியாது, இதையே பிரைடு ரைஸ் மற்றும் உடனடி சைனீஸ் மஸ்ரும் பிரியாணி செய்ய பயன்படுத்தலாம்.  அடுத்த வேளை சாம்பார் மற்றும் தயிர் சாதம். எலுமிச்சை சாதம் என்று மாற்றலாம்.
இந்த வித தயாரிப்புகளை உண்பதால் வயிறு கல்லை உண்டது போல் செரிமானத்திற்கு 9 அல்லது 10 மணி நேரம் ஆகும்.  மிகவும் வயதானவர்களுக்கு மரணத்தை ஒத்த துன்பம் கூட வரலாம்.

10.  ஜூஸ்: பெரும்பாலும் பஃபே உணவு சாப்பிடும் போது வைத்திருக்கும் ஜூஸ் எல்லாம், பாட்டிலில் வரும் சர்க்கரை தண்ணீர், பழ எசன்ஸ், மற்றும் பிரிசர்வேட்டிவ் கலந்தது தான். ஒரு சில இடங்களில் உண்மையான பழச்சாறுகள் வழங்கப்படுகிறது.

11. உணவுக்கு பின் உடனே படுக்கைக்கு செல்வது.  4 வேளை உணவு.

 *பின் வரும் மூல பொருட்களால் உண்டாகும் உபாதைகள் மற்றும் நோய்கள்*

*🔴நிறமூட்டிகள் Food Colour*
மாரடைப்பு, கேன்சர், நெஞ்செரிச்சல்.

*🔴டால்டா*
மாரடைப்பு, கேன்சர், உடல் பருமன், இரத்த அழுத்தம்

*🔴மைதா*
மலச்சிக்கல், நீரிழிவு, கணைய பாதிப்பு,

*🔴வெள்ளை சர்க்கரை*
எலும்பு தேய்மானம், நீரிழிவு உடல்சூடு, தோல் நோய்,
 ஆண்மையின்மை

*🔴ரிபைண்ட் ஆயில் (சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்)*
அல்சர், புற்றுநோய்,
 மூட்டுவலி, முடி நரைத்தல்

*🔴நைஸ் உப்பு* *(அயோடின் சேர்த்த உப்பு)* 
பக்கவாதம், இரத்தகொதிப்பு அறிவுதிறன் பாதிப்பு

*🔴அஜீணமோட்டோ*
ஜீரண உறுப்புகள் சிதைவு

*🔴பிரிசர்வேட்டிவ் கெமிக்கல்ஸ்*
மாரடைப்பு, கேன்சர், நெஞ்செரிச்சல்.

*🔴 பிரியாணி சென்ட்*
கேன்சர், நெஞ்செரிச்சல், 
சென்ட் வாடை ஏப்பம், பேசும்போது வாயில் பிரியாணி வாடை தொடர்வது.

*🔴 பாக்கெட் மிளகாய் பொடி மற்றும் மசாலா பொடிகள்*
மாரடைப்பு, கேன்சர், நெஞ்செரிச்சல்.

*🔴 2 ம் உபயோக எண்ணெய்*
(ஸ்டார் ஓட்டல்களில் வறுக்க பயன்படுத்தி கீழே கொட்டாமல் சிறிய சிற்றுண்டிகள் மற்றும் தள்ளு வண்டிகளுக்கு விற்க படுகிறது)
மாரடைப்பு, கேன்சர், உடல் பருமன், நெஞ்செரிச்சல்.

*🔴மாட்டு கொழுப்பு கலப்பட நெய்*
மாரடைப்பு, கேன்சர், நெஞ்செரிச்சல், கையில் பிசுபிசுப்பு.
நாட்டு மருந்து வாட்ஸ் அப் குழு 
9787472712
https://chat.whatsapp.com/Hg4NqjFWEhAFel8klV2WAY