Saturday, March 12, 2022

கண் குறைபாடுகள் அனைத்திற்கும் தீர்வு தரும் நேத்திர பூண்டு தைலம் செய்முறை விளக்கம்:

*கண் குறைபாடுகள் அனைத்திற்கும் தீர்வு தரும் நேத்திர பூண்டு தைலம் செய்முறை விளக்கம்:*

1.சுத்தமான நல்லெண்ணெய் – 100 மி
2.நேத்திரப்பூண்டு – 50 கிராம்
3.தும்பை -10 கிராம்
4.கரிசாலை -10 கிராம்
5.பொன்னாங்காணி -10 கிராம்
6.கற்றாழை – 10 கிராம்

*செய்முறை விளக்கம்:*

✍️ வரிசை எண் 3 முதல் 6 வரை உள்ள இலைகளை சுத்தம் செய்து அரைத்து பிழிந்து சாறு எடுத்து கொள்ளுங்கள்

✍️ பிறகு நல்லெண்ணெய் ஒரு வாணலியில் ஊற்றி கொதிக்க வைத்து அதில் நேத்திரப்பூண்டு அரைத்து அதில் போட்டு நன்கு கொதிக்க விடவும் பிறகு 50-மி யாக சுண்டியதும் வடிகட்டி கொள்ளவும்

✍️ வடிகட்டிய எண்ணையில் ஏற்கவனே தயார் செய்து வைத்துள்ள சாறு கலந்து கொள்ளவும் 

✍️ கலந்து வைத்து கொண்டு இந்த எண்ணெயை மதியசூரிய வெயிலில் படும்படி ஒரு 3 மணிநேரம் வைக்கவும்

பிறகு,இந்த எண்ணை பயன்படுத்த தயார்

*பயன்படுத்தும் முறை:*

✍️காலை மற்றும் இரவு ஓய்வு நேரங்களில் இரு கண்களுக்கும் 2 சொட்டு அளவு விட்டு கண்களை மூடி மூடி திறக்கவும் பிறகு 30 நிமிடம் ஓய்வில் இருக்கவும்,பிறகு தேவைப்பட்டால் முகம் கழுவி கொள்ளலாம்

✍️இதை 15 முதல் 60 வயதினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும், குழந்தைகள் எடுக்க கூடாது

✍️அதிகப்பட்சம் 21 நாட்கள் பயன்படுத்தினால் போதும்

*மருத்துவ பயன்கள் என்ன???*

1.கண்களை சுத்தம் செய்யும்
2.புரை ஆரம்ப நிலையில் தடுக்கும்
3.கண் எரிச்சல் கண் அரிப்பு உடனடியாக தீரும்
4.கண் வலி நீங்கும்
5.தூரபார்வை மற்றும் கிட்டபார்வை தெளிவு பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது

*கவனிக்க:*

நாட்டுமருந்து கடைகளில் இந்த தைலம் விற்பனைக்கு கிடைக்கும் இதில் ஒரிஜினல் மட்டுமே பலன் கொடுக்கும் மற்றவை பலன் கொடுக்க வாய்ப்பில்லை தயவுசெய்து விலை குறைவாக வாங்க வேண்டாம்

இது ஒரு பாரம்பரிய வைத்திய முறை கண் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

No comments:

Post a Comment