Wednesday, August 29, 2018

சர்க்கரை நோய் குணமாக புங்கன்

சர்க்கரை நோய் குணமாக புங்கன்

சாலையோரங்களில் நிழல் தருவதற்காக வைக்கப்படும் புங்கன் மரத்தின் பூக்களை பயன்படுத்தி சர்க்கரை நோய்க்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் கால் ஸ்பூன் நெய் எடுக்கவும். இதனுடன், வெயிலில் காயவைத்த புங்கன் பூக்களை ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கவும். இதை ஆறவைத்து அதிகாலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

புங்கன் மரத்தின் பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். இந்த பூக்களை சேகரித்து காயவைத்து தினமும் மாலையில் நீரில் கலந்து குடிக்க சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. கணையத்தை பலப்படுத்தி சீராக இயங்க வைக்கிறது.

புங்கன் மரத்தின் பட்டையை பயன்படுத்தி கழிச்சல், ரத்த மூலத்துக்கான மருந்து தயாரிக்கலாம். புங்கன் மரத்தின் பட்டையுடன் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி அதிகாலையில் குடித்துவர ரத்த மூலம் குணமாகும். கழிச்சல், சீதக்கழிச்சல் பிரச்னை சரியாகும். இந்த நீரை புண்களை கழுவும் மேல் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment