Wednesday, September 28, 2016

சத்து மாவு தயாரிக்கும் முறை

நாட்டுமருந்து  வாட்சப்குழு +919787472712

சத்து மாவு தயாரிக்கும் முறை

சத்து மாவு தயாரிப்பு

சத்து மாவு உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

தேவையானவை அளவு

சோளம்                           100 கிராம்
கம்பு                                25 கிராம்
தினை                           25 கிராம்
கேழ்வரகு                  100 கிராம்
கொள்ளு                   50 கிராம்
பாசிப்பயறு                   25 கிராம்
நெய்                          100 மிலி
ஏலக்காய்த்தூள்          சிறிதளவு

சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.தண்ணீரை  நன்றாக  வடித்த பின்னர் அதை ஒரு வெள்ளை   துணியில் கட்டி 12 மணி நேரம் கட்டி தொங்க விட வேண்டும்.  மற்றும்  4 அல்லது 5 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது தண்ணீர்  தெளிக்க வேண்டும்.  பின்பு , தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைக்கலாம். அல்லது மிக்சியிலும் அரைக்கலாம், சுலபமான  சத்து மாவு தயார்.
சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.

     அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.

2)சத்து மாவு தயாரிக்கும் முறை

1.. பொட்டுக்கடலை, பார்லி, ஜவ்வரிசி, பாதாம் முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கும்,  சத்துமாவு தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை
ராகி                   2 கிலோ
சோளம்              2 கிலோ ,
கம்பு                   2 கிலோ ),
பாசிப்பயறு       அரை கிலோ ,
கொள்ளு          அரை கிலோ ,
மக்காசோளம்    2 கிலோ,
பொட்டுக்கடலை ஒரு கிலோ ,
சோயா                ஒரு கிலோ ,
தினை               அரை கிலோ ,
கருப்பு உளுந்து அரை கிலோ ,
சம்பா கோதுமை அரை கிலோ ,
பார்லி                 அரை கிலோ,
நிலக்கடலை       அரை கிலோ ,
அவல்                அரை கிலோ ,
ஜவ்வரிசி           அரை கிலோ ,
வெள்ளை எள்     100 கிராம் ,
கசகசா                 50 கிராம்,
ஏலம்                  50 கிராம் ,
முந்திரி              50 கிராம் ,
சாரப்பருப்பு         50 கிராம் ,
பாதாம்              50 கிராம் ,
ஓமம்                50 கிராம் ,
சுக்கு                   50 கிராம்,
பிஸ்தா            50 கிராம் ,
ஜாதிக்காய்          2 ,
மாசிக்காய்        2 ,

ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க  வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர்  சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும். அதை கால்கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.
        வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
பயன்கள்
இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
6 மாதம் கெடாது
சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை

No comments:

Post a Comment