Saturday, July 30, 2016

குடிநீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!

குடிநீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!

நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட தாவரத்துக்குத் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின.

 இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), பெருங்கதை பாடல் வரியிலும் (35:215) சுட்டப்பட்டுள்ளது. பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூலும் இந்தப் பண்பு பற்றி குறிப்பிடுகிறது.

“அஞ்சனா (பெரிய ஏலக்காய்),
முஸ்டா (கோரைக்கிழங்கு),
உசிரா (வெட்டி வேர்),
நாகா (நன்னாரி),
கோசடக்கா (நுரைபீர்க்கை),
அமலக்கா (நெல்லி)

போன்றவற்றைப் பொடி செய்து, அவற்றைத் தேத்தாங் கொட்டைத் தூளுடன் கிணற்று நீரில் கலந்தால் கலங்கிய, கசந்த, சப்பென்ற, உப்பான, ருசியற்ற, நாற்றமடிக்கும் நீர் நன்கு தெளிந்து ருசியும் மணமும் கொண்ட நல்ல நீராகும்” இது சுரபாலர் எழுதிய விருக்ஷாயுர்வேத நூலின் 299-300-ம் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழ் வடிவம்.


பீப்பாய் நீர் தெளிய

ஆப்பிரிக்கக் கண்டத்து அடிமைகள் அமெரிக்கக் கண்டத்துக்குக் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டபோது, பீப்பாய் நீரைச் சுத்தம் செய்வதற்காகப் புளியங்கொட்டை பயன்படுத்தப்பட்டதைப் போன்று, பண்டைய தமிழகக் கப்பல்களில் நீண்ட தூரப் பயணங்களின்போது, நீரைத் தெளிவாக்கிச் சுத்தம் செய்யத் தேத்தாங்கொட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்றும்கூடப் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டக் கிராமங்களில் தேத்தாங்கொட்டை நீரைத் தெளிவாக்கவும் சுத்தமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

 அண்மைக்கால ஆய்வுகளின்படி பொடி செய்யப்பட்ட தேத்தாங்கொட்டைத் துகளிலுள்ள கார்போஹைட்ரேட் பல்வேறு வேதிப்பொருட்களை
 (கன உலோகங்களையும் சேர்த்து) உறிஞ்சி நீரைத் தெளிவாக்குகிறது.

வறண்ட நிலத் தாவரம்

கடகம், ஜலதம், அக்கோலம், சில்லகி, சில்லம் என்ற இதர பெயர்களைக் கொண்ட இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயர் Strychnos potatorum
 (தாவரக் குடும்பம்: Loganiaceal) ;

இது எட்டி மரத்துடன் தொடர்புடைய ஒரு தாவரம். ஏறத்தாழ 30 முதல் 50 அடி உயரம்வரை வளரக்கூடிய இந்த மரம், நல்ல நிழல் தரும் மரமும்கூட.

 இந்தியாவின் பல பகுதிகளில் காணப்பட்டாலும், தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் இது சாதாரணமாக வளர்கிறது. குறிப்பாக, முல்லை திரிந்த பாலை நிலப்பகுதிகளில் வளர்கிறது.

சங்க இலக்கியக் காலத்தில் முல்லை நிலத்தில் செழிப்பாக வளர்ந்ததாக அறியப்பட்டுள்ள இந்தத் தாவரம், தற்போது குறைந்த எண்ணிக்கைகளில் காணப்படுகிறது. “முல்லை இல்லமொடு மலர …. கார் தொடங்கின்றே”, “இல்லம் முல்லையொடு மலரும்” என்ற அகநானூற்று வரிகள்

(அகநானூறு 364:7, 9; 1: 1, 2,7) மட்டுமின்றி “நரு முல்லை உகு தேறு வீ “ என்ற பொருநராற்றுப்படை வரியும் மேற்கூறியதற்குச் சான்றாகும்.

 கார்காலத்தில் மலரும் இந்த மரத்தின் பூக்களைச் சங்ககால மக்கள் சூடினர் (குல்லை குளவி கூதளங் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தனை கண்ணியன்” நற்றிணை : 5:6). தற்காலத்தில் யாரும் சூடுவதில்லை.

நீரிழிவுக்கு மருந்து

தேற்றா மரம் பாரம்பரிய மருத்துவ முக்கியத்துவம் கொண்டது. இதன் அனைத்து உறுப்புகளும் மருத்துவத் தன்மை கொண்டவை.

உடல் இளைக்கவும் தேறாத உடம்பைத் தேற்றவும் தேத்தாங்கொட்டை லேகியம் சாப்பிட வேண்டும்.

பழம், விதை இரண்டுமே சளியை நீக்கும், கபத்தைப் போக்கும், சீதபேதி – வயிற்றுப்போக்கைக் குணமாக்கும்,

 புண்கள் – காயங்களை ஆற்றும்,
கண் நோய் போக்கும்,
சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும்,

 பெண் இனப்பெருக்க உறுப்புக் கோளாறுகளை அகற்றும்; இதன் கொட்டை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.

தேற்றா மரம் ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டது. தியாகேசருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள தாவரம். திருவாரூர் திருக்குவளையின் கோலிவிழிநாதர் கோயிலின் தலமரமாகத் திகழ்கிறது. தேற்றா வனத்தின் நடுவில் (கடக்கா வனம்) பிரம்மா ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார் என்று புராணக் கதை ஒன்று கூறுகிறது.

தமிழகத்தில் அழிந்துவரும் தாவரங்களில் தேற்றா மரமும் ஒன்று. இதைப் பாதுகாப்பதற்கு மக்களும் அரசும் அதிக முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

 இதன் மருத்துவப் பண்புகளைப் பிரபலப்படுத்த, அறிவியல் சார்ந்த ஆய்வுகளும் அதிகம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

[1:55 AM, 7/30/2016] Maru kirushnan: தேற்றான் கொட்டை மரம்
[1:58 AM, 7/30/2016] Maru kirushnan: தேற்றான் கொட்டை மருத்துவ பயன்கள்

கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டதும், உஷ்ணத்தை குறைக்க கூடியதும், ரத்த ஓட்டத்தை சீராக்க வல்லதும், அடிக்கடி சிறுநீர் கழித்தலை தடுப்பதும், பலவீனமான உடலை தேற்றக் கூடியதும், பால்வினை நோயால் ஏற்படும் புண்களை குணப்படுத்த கூடியதுமான தேத்தான் கொட்டை சூரணம் பல மருத்துவகுணங்களை கொண்டது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் பலவீனம் அடைவதுடன் தூக்கம் கெட்டுவிடும். இந்நிலையில், தேத்தான் கொட்டை சூரணத்தை தேனீராக்கி பால் சேர்த்து குடிப்பதால் இப்பிரச்னை சரியாகும்.

தேத்தான் கொட்டை சூரணத்தை பயன்படுத்தி உடலை தேற்றும் மருந்து தயாரிக்கலாம்.

தேத்தான் கொட்டை சூரணப்பொடி, திரிகடுகு சூரணம், திரிபலா சூரணம், சீரகப்பொடி, சித்தரத்தை பொடி, பால் சேர்த்து பசை போன்று தயாரித்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர், 4 பங்கு வெல்லம், ஒரு பங்கு நீர் விட்டு பாகு தயாரிக்கவும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பசையை, வெல்ல பாகுடன் சேர்த்து கிளறவும். அல்வா பதத்தில் வரும்போது நெய்விட்டு கிளறவும்.

நெய் பிரிந்து தனியாக வரும் சமயத்தில் ஸ்டவ்வை ஆப் செய்யவும். கடைசியாக தேன் சேர்த்து கலக்கவும். லேகிய பதத்தில் இருக்கும் இதை காலை மற்றும் மாலை வேளைகளில் நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து கொண்டால் உடல் தேறும்.

உடலுக்கு பலத்தை கொடுக்கும் தேத்தான் கொட்டையானது, உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கும்.  உஷ்ணத்தை குறைக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் கொழுப்பை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும்.

லேகியமாக செய்து காலை, மாலை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடுவதுடன் பலம் அதிகரிக்கும். பால்வினை நோய்க்கு தீர்வாக அமைகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.

சிறுநீரக கோளாறுகளை சரி செய்கிறது. இருமலை தணிக்கும் தன்மை கொண்டது. ரத்த அழுத்ததை குறைக்கிறது.

 பால்வினையால் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடியது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தம் கலந்து வெளியேறுதலை தடுக்கிறது.

கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. சளியை உடைத்து வெளித்தள்ளும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

இளைத்த உடம்பை தேற்றும். உயிரணுக்களை அதிகரிக்கும். தேத்தான் கொட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியது. இதை வாங்கி இடித்து பொடியாக்கி அதனுடன் சிறிது பால் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால் எடுத்துகொண்டு மெல்லிய துணியில் பொடியை பிட்டுபோல் வேக வைத்து எடுத்துக் கொண்டால் அது சுத்தமான பொடியாக இருக்கும்.

திண்டுக்கல்லிலல் அழகப்ப நாடார் நாட்டு மருந்துக் கடையில் தேற்றான் கொட்டை
சூரணம்  (பொடி) கிடைக்கும்

தேத்தான் கொட்டை  -  குறிப்பு


நீரை அதிகளவு சுத்திகரிக்கும் திறன் வாய்ந்தது தேத்தான் கொட்டை.

 தேவையான அளவு தேத்தான் கொட்டையை எடுத்து அரைத்து நீரில் கரைத்துவிட வேண்டும்.

இது நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் நீக்கி, தூய்மையான தண்ணீரை தரும்.

அதோடு, உடல் இளைத்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற குடிநீர்

இது. வீட்டில் கிணறு வைத்திருப்பவர்கள், அரைக் கிலோ தேத்தான் கொட்டையைக் கிணற்றில் கொட்டிவிட்டால் போதும். எப்பேர்பட்ட அழுக்கான தண்ணீரையும் சுத்திகரித்துச் சத்தான நீராக மாற்றிவிடும்

http://naattumarunthu.blogspot.in/

https://www.facebook.com/NaattuMarunthu/

No comments:

Post a Comment