Sunday, June 26, 2016

சிவனார் வேம்பு

[7:27 PM, 6/26/2016] Maru kirushnan: சிவனார் வேம்பு

மூலிகையின் பெயர் -:
சிவனார் வேம்பு.

தாவரவியல் பெயர் -:
INDIGOFERA.

தாவரவியல் குடும்பம் -:
PAPILIONACEAE. (FABACEAE)

பயன்படும் பாகங்கள் -:
செடி முழுதும் மருத்துவப் பயனுடையது.

வேறு பெயர்கள் -:
அன்றெரித்தான் பூண்டு, குறைவின் வேம்பு போன்றவை.

வளரியல்பு -:
சிவனார் வேம்பு என்னும் மூலிகைச் செடி ஒரு வருடாந்திர வளர்ச்சிச் செடி. இதில்  750 வகைகள் உள்ளன. அவை வளர்வதிலும், பூக்களிலும் வேறு பாடு உள்ளன.  இதன் இலைகள் சிறிதாகவும் முட்டை வடிவிலும் இருக்கும்.  பூக்கள் சிவப்பு நிறத்திலு இருக்கும். கொத்தான காய்களையும், சிவப்பு நிற தண்டினையும் உடைய மிக சிறு செடி.

 இது செம்மண் நிலத்தில் நன்கு வளரும். தமிழகமெங்கும் காணப்படும். செடி பிடுங்கிய உடனே உலர்ந்தது போல எரியும் தன்மையுடையதாகையால் அன்றெரித்தான் பூண்டு என நாட்டுப் புறத்தில் குறிப்பிடுவதுண்டு. இது விதை மூலம் இன விருத்தி செய்யப் படுகிறது.

சிவனார் வேம்பின் மருத்துவப் பயன்கள் -

 இது தாது எரிச்சல் தணித்தல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், நஞ்சு முறித்தல் குடல்புண் குணமாக்குதல் ஆகியவை குணமாக்க வல்லது. அகத்தியரும் அவர் பாடலில் இதன் பலன் பற்றிக் கூறியுள்ளார்.

செடியை வேருடன் உலர்த்திப் பொடித்துச் சமன் கற்கண்டுத் தூள் கலந்து ஒரு தெக்கரண்டிப் பாலில் சாப்பிட்டு வர ஆயுளை நீட்டிப்பதோடு தொழு நோய் போன்ற கடும் நோய்களையும் குணப்படுத்தும்.

செடியைச் சுட்டுச் சாம்பலாக்கித் தேங்காயெண்ணையில் குழைத்துத் தடவி வரச் சொறி, சிரங்கு, கபாலக் கரப்பான் ஆகியவை தீரும்.

இலையை அரைத்துப் பற்றிடக் கட்டிகள் உடைத்துக் கொள்ளும் அல்லது அமுக்கி விடும்.

இதன் வேரால் பல் துலக்கவோ மென்று துப்பவோ செய்தால் வாய்புண், பல் வலி ஆகியவை தீரும்.


இதன் சமூலத்தை வெண்ணெய் கூட்டி மெழுகுபோல் அரைத்து நீர் சம்பந்தமான புரைக்குழலுக்கு (கிரந்தி கட்டுக்கு) மேற்றடவி வரக்கரைந்துபோம்.இதைச் சுட்டுச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயிற் குழைத்துத் தலையில்
 உள்ள சிரங்குகளுக்குத் தடவ ஆறும்

மரு.கிரூஷ்ணன்
[7:27 PM, 6/26/2016] Maru kirushnan: சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் அறிவியல்அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர். அவ்வைத்திய முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர்.

சித்த வைத்தியர்கள் அல்லது சித்தர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, நோயினை நீக்குவர்.

 மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் தருவர். இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். இதனால் எந்த விதமான பின் விளைவும் இருக்காது. தீராத வியாதிகளும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் சித்த வைத்தியம் ஆகும்

மக்கள் அனைவரும், ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் ஆகியவை உடல் நோயை உண்டாக்கும் என்றும் யோகப்பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.

"உலகில் சாவாமைக்கு வழிகாண முடியும் என்ற உயரிய நோக்கம் கொண்ட மருத்துவ முறை சித்த மருத்துவமே

மூளையின் ஆற்றல்
நானூறு  பக்கம் கொண்ட ஒரு புத்தகத்தை நான்கே மணி நேரத்தில் படித்து அதனை தலை கீழாக வொப்புவிக்கும் ஆற்றல் உடையது .இந்த உலகில் மிக சிறந்த அறிவாளியாக கருதப்படும் அதி மேதாவியும் கூட தனது மூளையின் ஆறு சதவீதத்திற்கும் மேலாக பயன் படுத்தவில்லை என்பது ஆராய்ச்சியின் முடிவு.


தேவையே கண்டுபிடிப்பின் தாய்

 .செல்போன் வருவதற்கு முன் பல தொலைபேசி எண்களை நாம் மனப்பாடம் செய்து தானே வைத்திருந்தோம்.இன்றோ நமது பாஸ் வேர்டை கூட நம்மால் எழுதி வைத்து கொள்ளும் நிலை.மறதி என்பது எல்லோரையும் பிடித்தாட்டும் பேயாகதான் பார்க்க முடிகிறது.

நிறைய படிப்பவர்கள் ,சுறுசுறுப்போடு இருப்பவர்கள் வயதே ஆனாலும் சிலரை மறதி பிடிக்காததை நாம் பார்க்க தானே செய்கிறோம் .

ஞாபக சக்தி பெருக ..

1 கவனக்குறைவை விடுங்கள் -அலட்சியம் வேண்டாம்.பதற வேண்டாம் .

2 நிதானத்தோடு அணுகுங்கள் -சாந்தமுள்ள மனதின் சக்தியே தனி

3 எதை மறக்கிறீர்களோ அதை எழுதி வைத்து கொள்ளுங்கள்

4 சரியான சக்தியுள்ள உணவை
 உண்ணுங்கள் -சரிவிகித உணவு உங்களை தட்டியெழுப்பும் .

5 ஒப்பிட்டு மனப்பாடம் செய்யுங்கள் -உங்களது கற்பனை வளத்தை அதிகபடுத்தி கொள்ளுங்கள்.

6 தூக்கமின்மை உங்களது மூளையை துருபிடிக்க செய்திடும் .

7  தேவை இல்லாமல் சத்து மாத்திரை என்றோ,ஆங்கில மருந்தையோ உபயோகிக்காதீர்கள் ..

8 பாராட்டுங்கள் ,சந்தோஷமாய் இருங்கள் -வாழ்க்கை ஒரு முறை தான் -டென்ஷனை குறையுங்கள் .

௯ தலைக்கு எண்ணை வைத்து குளியுங்கள் -

மூளையை தீட்டும் மருத்துகள்
1  சாரஸ்வதாரிச்டம்- காலை மாலை -இருபத்தைந்து மிலி தண்ணீருடன் ஆகாரதிக்கு பின்

2 ப்ரஹ்மி கிருதம் -காலை 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்

3 .பிரம்ம ரசாயனம் லேகியம் - இரவு ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்கள்

  மஹா கல்யாணக கிருதம் 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம்

பிரம்மி வடி -பிரம்மி & மண்டூக பரணி கேப்சுல்ஸ் . சாபிடலாம்

ஸ்ம்ருதி சாகர ரசம் இரவில் ஒரு மாத்திரை சாப்பிடலாம்

சாரஸ்வத கிருதம்,சாரஸ்வத சூரணம் -சாப்பிடலாம்

மேத்ய ரசாயன சூரணம் -சாப்பிடலாம் .
சங்க புச்பீ சூர்ணம் சாப்பிடலாம் .

ஐவகை நிலங்கள்:
----------------------------------
    குறிஞ்சி நிலம்.
    முல்லை நிலம்.
    மருத நிலம்.
    நெய்தல் நிலம்.
    பாலை நிலம்.

குறிஞ்சி நிலம்:

    குறிஞ்சி நிலமானது, மலையும் மலைச்சார்ந்த இடமாகும். இவ்விடம் கபம் மிகுந்தது. மலைப் பூமியில் விளைகின்ற எல்லா விதமான பொருள்களுக்கும் வலிமை உண்டு.

குறிஞ்சி மக்களின் பாதிப்புகள்:

    இப்பூமியில் வாழ்பவர்களுக்கு இரத்தத்தை முறிக்கின்ற சுரமும், வயிற்றில் ஆமைக்கட்டியும் உண்டாகும்.

முல்லை நிலம்:

    முல்லை நிலமானது காடும் காடு சார்ந்ததும் ஆகும். ஆடு, எருது, பசு இவற்றின் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.

முல்லை வாழ் மக்களின் பாதிப்புகள்:

    பித்த தோஷம் அதிகரிப்பதற்கு ஏற்ற இடமாகும். அவ்வாறு இல்லையானால் வாத தோஷம் நிலையாக இருக்கும். அவ்விரு தோஷங்களால் பலவித நோய் வேறுபாடுகள் ஏற்படுகிறது.

நெய்தல் நிலம்:

    நெய்தல் நிலமானது, கடலும் கடல் சார்ந்த இடமாகும். மிகுந்த உவர்ப்பை பெற்றிருப்பதினால் பித்த வாயு தங்குவதற்கு ஏதுவான இடமாக அமைகிறது.

நெய்தல் மக்களின் பாதிப்புகள்:

    இந்நிலங்களில் வாழ்பவர்களின் உடலில் நுட்பமான இடங்களில் சிலேஷ்ம நீரானது கண்டு தடித்தலை உண்டாக்கும். இது தவிர பாதம் முதலான கடினமான உறுப்புகளில் யானைக்கால் நோயையும், குடல் அண்ட விருத்தியையும் உண்டாக்கும்.

மருத நிலம்:

    மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமாகும்.

மருத நில மக்களின் சுகாதாரங்கள்:

    இங்கு நீர்வளம் அதிகமாகக் காணப்படுவதால் வாத பித்த சிலேஷ்மங்களால் உண்டாகின்ற நோய்களை நீக்கும். இது தவிர அந்த நிலத்தில் விளைகின்ற அறுசுவை உணவு உண்பவர்கள் என்றாலே நோய் விட்டுப் போகும். அத்தகையப் பெருமை வாய்ந்தது மருத நிலம்.

பாலை நிலம்:

    பாலை நிலமானது நீரும் நிலமும் இல்லாததாகும்.

பாலை நில மக்களின் பாதிப்புகள்:

    இந்நிலம் தீமை விளைவிக்கக் கூடியது. இந்நிலம் வாத பித்த கபங்களுக்கும், அவற்றை சார்ந்து வரும் அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்ற இடமாகும்.

உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும்  இன்றியமையாக அமைவது  உணவு, உடை, உறைவிடம் ஆகும். எனவே ஐவகை நிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில் மருத நிலமே சிறந்தது.

No comments:

Post a Comment