Saturday, March 12, 2022

கை கால் மூட்டு வலி சரியாக வீக்கம் குறைய ஒரு எளிய வீட்டு வைத்தியம் மூலிகை எண்ணெய் செய்முறை விளக்கம்

*கை கால் மூட்டு வலி சரியாக வீக்கம் குறைய ஒரு எளிய வீட்டு வைத்தியம் மூலிகை எண்ணெய் செய்முறை விளக்கம்*

*தேவையான மூலப்பொருட்கள்:*

1.நொச்சி இலை - 10 எண்ணிக்கை
2.உத்தாமணி இலை - 5 எண்ணிக்கை
3.சுக்கு - 2 சிறிய அளவிலான துண்டு
4.நல்லஎண்ணெய் - 100 மி

*செய்முறை விளக்கம்:*

✍️ நல்லெண்ணெய் நன்றாக சூடாக்கி கொள்ளவும் 

✍️ அதில் நொச்சி மற்றும் உத்தாமணி இலை ஆகியவைற்றை அரைத்து சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்

✍️ நல்ல கொதி நிலையில் உள்ள பொழுது சுக்கு அரைத்து அதில் கலந்து சுண்ட காய்ச்சவும்

நன்கு சுண்டிய எண்ணையை குளிர்ச்சி படாத பகுதியில் ஒரு டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளவும்

*பயன்படுத்தும் முறை:*

தினமும் இரவு உறங்க செல்லும் முன்பு வலி உள்ள மூட்டு பகுதிகளில் நன்கு அழுத்தி தேய்த்து கொள்ளவும் பிறகு ஒத்தடம் கொடுக்கவும் இல்லை என்றால் காயும் வரை விட்டால் போதும்

*:::நினைவில் கொள்க:::*

ஏதேனும் விபத்து ஏற்பட்டு எலும்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இது பலன் கொடுக்காது...மற்றபடி அனைத்து வயதினருக்கும் பலன் கொடுக்கும்

தீராத இருமல் / கக்குவான் இருமல் / ஈளை இருமல் நிரந்தரமாக குணமாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்

*தீராத இருமல் / கக்குவான் இருமல் / ஈளை இருமல் நிரந்தரமாக குணமாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்*

*தேவையான மூலப்பொருட்கள்*

1.திரிகடுகு - 25 கிராம்
2.கிராம்பு - 10 கிராம்
3.ஏலக்காய் - 25 கிராம்
4.பச்சை கற்பூரம் - 10 கிராம்
5.வாய்விளங்கம் - 25 கிராம்
6.அதிமதுரம் - 25 கிராம்
7.சீரகம் - 25 கிராம்
8.ஓமம் - 10 கிராம்

*சூரணம் செய்முறை விளக்கம்:*

மேற்கூறியவற்றை அனைத்தையும் சுத்தம் செய்து காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்

*சாப்பிடும் முறை:*

100 மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு ( 3 கிராம் ) சூரணம் கலந்து காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடிக்கவும்

*கடைபிடிக்க வேண்டிய வழிமுறை:*

1.குறைந்தது 2- 3 மாதம் இதனை தவறாது கடைபிடிக்கவும்

2.சுடுநீர் அதிகம் குடிக்க வேண்டும்

3.இனிப்பு,எண்ணெய் பொருட்கள், அதிக காரம் கூடாது

*மருத்துவ பயன்கள்:*

1.தீராத அனைத்துவகை இருமல் நிரந்தரமாக குணமாகும்

2.நுரையீரல் பலப்படும்

3.வயிறு புண் சரியாகும்

Sunday, October 17, 2021

வறட்டு இருமலை தடுக்க சில வழிமுறைகள்.:


வறட்டு இருமலை தடுக்க சில வழிமுறைகள்.:

தேவையான பொருட்கள்.:
சோம்பு - ஒரு தேக்கரண்டி,
இலவங்க பட்டை - அரை தேக்கரண்டி,
இஞ்சி தூள் - ஒரு தேக்கரண்டி,
தண்ணீர் - 100 மி.லி.

செய்முறை.:
 முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.

பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.

மேலும் நீருடன் சோம்பு,இலவங்க பட்டை மற்றும் இஞ்சி தூள் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.

பிறகு இதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடித்து வந்தால் வறட்டு இருமல் முற்றிலுமாக குணமாகும்

மற்றோரு வழிமுறை.:
பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.

வெங்காயத்தை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் நாளடைவில் பறந்து போய்விடும்.

வெள்ளைப்படுதல் குணமாக...