Saturday, May 14, 2016
Monday, May 9, 2016
இப்படித்தான் கிரீன் டீ தயாரிக்கணும்...
கிரீன் டீயை தூளாக வாங்கி பயன்படுத்த கூடாது. உலர்த்திய கிரீன் டீ இலைகளை வாங்கி, வெந்நீரில் போட்டு, மூடிவைக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களில் கிரீன் டீயின் ஃபிளேவர் வெந்நீரில் கலக்கும். இதில், சர்க்கரை சேர்க்காமல், தேவைப்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்தால் முழு பலன்களும் கிடைக்கும். க்ரீன் டீயில் பால் சேர்க்கக்கூடாது.
1.கிரீன் டீயில் ஃப்ளவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க, தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.
2. கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.
3.கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.
4.கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.
5. கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.
6. வெயிட்லாஸ் செய்ய விரும்புகிறவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிரீன் டீ அருந்தலாம். இது கொழுப்பைக் கரைத்து ஸ்லிம் ஆக உதவும்.
தண்ணீர் வைத்தியம்... குளிக்க... குடிக்க..
தண்ணீர் வைத்தியம்... குளிக்க... குடிக்க..
கோ டை வெயில் கொளுத்த ஆரம்பிச்சுடுச்சு. குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவும் விட்டாச்சா?! பகலெல்லாம் வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வெச்சு சமாளிப்பது கஷ்டமான காரியம்தாங்க!
‘தாகம்’னு அடிக்கடி ஃப்ரிஜ் தண்ணியை எடுத்து குடிக்கப் போறாங்க. அது, உடம்பு சூட்டை கிளப்பி விடுமே தவிர, தாகத்தைத் தீர்க்காது. அதை விட நன்னாரி வேர் ஊறப்போட்ட தண்ணியை குடிக்கச் சொல்லுங்க. உடம்பு உஷ்ணம், தாகம் சட்டுனு தணியும். மலையாளத்துக்காரங்க எல்லாம் சீரகம் ஊற வச்ச தண்ணியைத்தான் குடிப்பாங்க. கோடைக் காலத்துக்கு உடம்பை குளுமை பண்ற அருமையான தண்ணி அது. அதுல துளசியையும் சேர்த்து போடலாம். எதுவானாலும் ஒவ்வொரு நாளும் புதுத் தண்ணியைத் தயார் பண்ணணுங்க.
வெயில் நேரத்துல குழந்தைகள் மட்டுமில்லாம பெரியவங்களுக்குக்கூட அக்கி, அம்மை மாதிரியான நோய்கள் வரலாம். அதைத் தடுக்க, ஒரு வாளி நிறைய தண்ணியில நிறைய வேப்பிலையை போட்டு வெயில்ல வச்சுடுங்க. தண்ணி சூடானதும் வேப்பிலையை எடுத்துப் போட்டுட்டு குளிங்க. கிருமிகள்கிட்டேயிருந்து உடம்பை காக்கிற அருமையான கிருமிநாசினி தண்ணி இது!
பெண்கள்னா உடம்புல மஞ்சளும் ஆண்கள்னா கொஞ்சம்போல சந்தனமும் பூசி, நல்லா தேய்ச்சி இந்த தண்ணியில குளிச்சா, அதோட பலனே தனி! ஒரு பக்கெட் தண்ணிக்கு அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிஞ்சு குளிச்சா, வியர்வை நாற்றம் நீங்கி இன்னும் ஃப்ரெஷ்ஷா இருக்கலாம்.
குழந்தைகளுக்கு ரெடிமேட் ஜூஸ்கள்லாம் வாங்கிக் கொடுக்காம இளநீர், நீர்மோர்னு குடிக்க வைக்கிறது ரொம்ப நல்லது. அவங்களுக்கு ரொம்பப் பிடிச்ச ‘கேரட் கீர்’ பண்றது எப்படினு சொல்றேன்.
கேரட்டை தோல் சீவி நல்லா கழுவிக்குங்க. கால் கிலோ கேரட்டுக்கு மூணு பெரிய சில்லு தேங்கா சேர்த்து ஒரு டம்ளர் தண்ணி விட்டு மிக்ஸில மையா அரைச்சுக்குங்க. அதை காய்கறி வடிகட்டில போட்டு ஜூஸை மட்டும் எடுத்து தேவையான அளவு வெல்லம் (இரும்பு சத்து கிடைக்கும்), ரெண்டு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து குடிக்கக் கொடுங்க. வெயில் நேரத்துல சாப்பிடப் பிடிக்காம குழந்தைங்க அடம்பிடிச்சாக்கூட, இந்த மாதிரி ஹெல்தி டிரிங்க் தேவையான சத்து கொடுத்து ஈடுகட்டிடும். சொல்றது புரிஞ்சுதா?
பார்வைத்திறனை மேம்படுத்தும் அத்தி !
பார்வைத்திறனை மேம்படுத்தும் அத்தி !
50 கிராமில் 37 கலோரிகள் உள்ளன.
தினசரி நார்சத்துத் தேவையில் 6 சதவிகிதம் இதில் இருந்து கிடைக்கும்.
பொட்டாசியம் நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
மெனோபாஸைக் கடந்த பெண்களுக்கு நல்லது. மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தினமும் மூன்று நான்கு அத்தி சாப்பிட்டுவந்தால், உடல் பொலிவுபெறும். முதுமையைத் தாமதப்படுத்தும்.
கெரோட்டினாய்டு உள்ளதால், பார்வைத்திறனை மேம்படுத்தும்.
ஆக்ஸிலேட் நிறைந்துள்ளது, சிறுநீரகக் கல் நீங்க உதவும். தினமும் ஆறு அத்திகளை ஒரு கப் நீரில் ஊறவைத்து, மறுநாள் பருகிவரலாம்.
கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு நல்லது.
தினமும் இரண்டு மூன்று அத்தியை தேனில் ஊறவைத்து சாப்பிட்டுவந்தால், மலச்சிக்கல் நீங்கும்.
வைட்டமின் சி நிறைந்துள்ளதால், தொண்டைப்புண்கள், குடல்புண்களை ஆற்றும்.
50 கிராமில் 37 கலோரிகள் உள்ளன.
தினசரி நார்சத்துத் தேவையில் 6 சதவிகிதம் இதில் இருந்து கிடைக்கும்.
பொட்டாசியம் நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
மெனோபாஸைக் கடந்த பெண்களுக்கு நல்லது. மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தினமும் மூன்று நான்கு அத்தி சாப்பிட்டுவந்தால், உடல் பொலிவுபெறும். முதுமையைத் தாமதப்படுத்தும்.
கெரோட்டினாய்டு உள்ளதால், பார்வைத்திறனை மேம்படுத்தும்.
ஆக்ஸிலேட் நிறைந்துள்ளது, சிறுநீரகக் கல் நீங்க உதவும். தினமும் ஆறு அத்திகளை ஒரு கப் நீரில் ஊறவைத்து, மறுநாள் பருகிவரலாம்.
கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு நல்லது.
தினமும் இரண்டு மூன்று அத்தியை தேனில் ஊறவைத்து சாப்பிட்டுவந்தால், மலச்சிக்கல் நீங்கும்.
வைட்டமின் சி நிறைந்துள்ளதால், தொண்டைப்புண்கள், குடல்புண்களை ஆற்றும்.
கொழுப்பை கட்டுப்படுத்தும் தர்பூசணி
இயற்கையின் கொடையாக, கோடை காலத்தில் மட்டுமே சில பழங்கள் கிடைக்கின்றன. அவற்றுள், கோடை வந்ததுமே சாலையோரத்தை நிறைக்கும், நீர் நிறைந்த தர்பூசணிப் பழத்தை விரும்பாதவர் இருக்க முடியுமா?
தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் (Citrulline) என்ற சத்துப் பொருள், கொழுப்புச் சேர்வதை தடுக்கிறது. ரத்தத்தில் இந்த சிட்ரூலின் கலந்ததும், சிறுநீரகத்தின் உதவியுடன் 'அர்ஜனைன்’ (Arginine) என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. இந்த அர்ஜனைன், கொழுப்பு செல்களைக் கட்டுப்படுத்தி, கொழுப்பு அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுக்கிறது. இதுதவிர காயம், புண் உள்ள பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. காயம்பட்ட பகுதியில் நல்ல ரத்த ஓட்டம் காரணமாக ஆக்சிஜன் அளவு அதிகரித்து, புண் விரைவில் குணமாக உதவுகிறது. புண் உள்ள பகுதியில் புதிய திசுக்கள் உற்பத்திக்கும் அர்ஜனைன் காரணமாகிறது.
தர்ப்பூசணியில், 'ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ என்ற சத்து உள்ளது. இது, உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகிறது. தினமும் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் அளவை 23 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த முடியும். இதில், மகிழ்ச்சிக்கான 'டோபோமைன்’ என்ற ரசாயனம் சுரக்க உதவும், வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இப் பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
எல்லோருக்கும் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், தர்பூசணியை எந்த வயதினரும் சாப்பிடலாம். இந்தப் பழம் உடலில் உள்ள நீரின் அளவினை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.
எல்லோருக்கும் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், தர்பூசணியை எந்த வயதினரும் சாப்பிடலாம். இந்தப் பழம் உடலில் உள்ள நீரின் அளவினை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.
Friday, April 15, 2016
Subscribe to:
Posts (Atom)






