Friday, November 11, 2016

வாய்வு கோளாறு ..



அடிக்கடி ஆசன வாயில் இருந்து காற்று பிரிதல்
புளி ஏப்பம் வாயிற்று வலி நெஞ்செரிச்சல் சரியாக
வெங்காய சாறு ......... நான்கு தேக்கரண்டி
தோல் நீக்கிய இஞ்சி சாறு ....... ......... நான்கு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு ....... ......... நான்கு தேக்கரண்டி
வாணலியில் அனைத்து சாறுகளையும் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்


கடுகு .............. பத்து கிராம்
மிளகு .............. பத்து கிராம்
பெருங்காயம் .............. பத்து கிராம்
மஞ்சள் தூள் .............. பத்து கிராம்
ஓமம் .............. பத்து கிராம்
இந்துப்பு .............. பத்து கிராம்

ஆகிய பொருட்களை அரைத்துத் தூளாக்கி சிறிது சிறிதாக கொதிக்கும் சாற்றில் தூவி கிளறவும்
லேகியப் பதம் வந்தவுடன் இறக்கி

பனை வெல்லம் . தேவையான அளவு சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காய வைத்து எடுக்கவும்
தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து ஓரிரு உருண்டைகள் மென்று தின்று வர மேற்கூறிய நோய்கள் குணமாகும்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment