Saturday, March 9, 2019

சோற்றுக்கற்றாழை வைதிய முறைகள் :

சோற்றுக்கற்றாழை வைதிய முறைகள் :

மூட்டு வலி  உடனே மறைய :

ஏழு முறை சுத்தி செய்த சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் (5கிராம்) ,பெருங்காயம்  (4 சிட்டிகை) சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி உடனே மறையும்.

கப சார்ந்த பிரச்சனை தீர :

சுத்தி செய்த சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் (5கிராம்) , மிளகுத் தூள்
(கால் ஸ்பூன்) சேர்த்துக் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் கப நோய்கள் அனைத்தும் தீரும்.

குடல் புண் , குடல் நோய்கள் குணமாக :

சோற்றுக்கற்றாழைச் சோற்றில் பச்சைப் பயறை ஊறவைத்து காயவைத்து , பிறகு கஞ்சி காய்ச்சிக்  காலை மாலை என இருவேளையும் ஒரு டம்ளர் வீதம் குடித்து வந்தால் வயிற்று வலி , குடல் புண் , குடல் நோய்கள் அனைத்தும் தீரும்.

நீர் அடைப்பு நீங்கி சிறுநீர் தாராளமாக வெளியேற :

சோற்றுக்கற்றாழைச் சோற்றில்
(30 கிராம்) , கடுக்காய்த் தூள் (10 கிராம்) , வெங்கார பஸ்பம் (3கிராம்) , பனை வெல்லம் (25 கிராம்) ஆகியவற்றைக் கலந்து சாப்பிட்டு வந்தால் ஒரிரு முறை பேதி ஆகும். இதனால் நீர் அடைப்பு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

கண் எரிச்சல் குணமாக :

சோற்றுக்கற்றாழையை நீளவாக்கில் கீறி சதை எடுத்து கண்ணில் வைத்துக் கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குணமாகும்.

காதில் சீழ் வடிதல் நிற்க :

சோற்றுக்கற்றாழையை நெருப்பில் வாட்டி இறுக்கிப் பிழிந்து சாறு எடுத்து காதில் மூன்று சொட்டுகள் விட்டு வந்தால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

தோல் மென்மையாக மாற வேண்டுமா :

சோற்றுக்கற்றாழைச் சோற்றை  எடுத்து பருக்கள் மீது தடவி வந்தால் , அவை விரைவில் விழுந்து தோல் மென்மையாக மாறும்.

No comments:

Post a Comment