Saturday, March 9, 2019

கருகருவென்று நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு? இதோ சில இயற்கையான டிப்ஸ்:

கருகருவென்று நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு? இதோ சில இயற்கையான டிப்ஸ்:

இன்றைய இளம் தலை முறையினரை வாட்டிவதைக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்தல். தலைமுடி வயதான காலத்தில் கூட உதிராமல் அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்க சில இயற்கை முறைகள்:

1) ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால், தலை முடி அடர்த்தியாக வளரும்.

2) செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி, அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு குளிக்க கூந்தல் அடர்த்தியாக வளரும்.

3) கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து, காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

4) மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

5) வேப்பிலை, கொட்டையுடன் கூடிய 4 வேப்பம் பழத்தையும், வேப்பம் குச்சியையும் சேர்த்து சம அளவு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை தண்ணீரில் கலந்து தலையில் தேய்க்க வேண்டும். தேய்த்து பின்பு சிறிது நேரம் காயவிட்டு பிறகு நன்கு அலசுங்கள்.

இவ்வாறு வாரம் இருமுறை குளித்து வந்தால் தலையில் இருக்கும் ஈறுகள் மற்றும் பொடுகுகள் அழிவது மட்டுமின்றி தலை முடி கருகருவென்று வளரும். முடி உதிர்வு பிரச்சனையை போக்கும். இந்தப் பொடியை சீயக்காயுடன் சேர்த்தும் உபயோகிக்கலாம்."

No comments:

Post a Comment