Wednesday, November 26, 2014

கர்ப்பகாலத்தில் சித்த மருத்துவம்...

மகப்பேறு காலத்தில் உணவு முறை, 
வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது.

தாய் உட்கொள்ளும் உணவு கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் பங்கு வகிக்கிறது. கர்;ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென ஆயுர் வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது.

இந்த காலக்கட்டத்தில் தாய்க்கு திரவ உணவுகள் மற்றும் பழங்கள் பரிந் துரைக்கப்படுகிறது. இது கரு வளர்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆகவே, திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன எடுத்துக் கொள்ளவேண்டும்.

முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட பால் அதாவது பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதவாரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தேன் மற்றும் நெய் இவற்றுடன் கலந்து கொடுக்க வேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

இக்காலத்தில் சிசுவின் உடலில் சினைப்பகுதிகளான கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சியும் நடைபெறும். இந்த மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய்யை ஆயுர் வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு உணவை தாயின் இரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும் ஒரே உணவாக அமைகிறது. இந்த காலங்களில் இவர்கள் சில உணவுப்பொருட்களை விருப்பப்பட்டு கேட்க நேரும். நாம் அதை பூர்த்தி செய்யவேண்டும். அதே நேரத்தில் தேவையற்ற உடல் பருமனை தவிர்க்க உணவு கட்டுப்பாடு முக்கியமானதாகும்.

இக்காலக்கட்டத்தில் சிசுவுக்கு தொப்புள் கொடியின் வழியாக ஆகாரம் கிடைக்கிறது. அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சிறந்த உணவுகளாகும்.

இந்த வகையான உணவுகள் சிசுவின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்திற்கும் சிறந்ததாகும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சத்து நிறைந்த உணவுக்கான பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவ குணம் கொண்ட மூலிகை பொருள்களான அஸ்வகந்தா, கிரான்ச், சிந்தில் கொடி ஆகியவை தசைகளுக்கு பலமாகவும், கருவிற்கு சிறந்த போஷாக் காகவும் அமைகிறது.

கொழுப்பு உப்பு மற்றும் நீரைச்சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு துளசியை உட் கொண்டால் பிரசவ வலி குறையும்.

ஆயுர்வேதம் பிரசவ காலத்தில் சிசு வளர்ச்சிக்கும், தாயின் உடல்நலத்திற்கும் சில மருந்துப் பொருட்களை உண்ணுமாறு அறிவுறுத்துகிறது. அவற்றை ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

ஆயுர்வேதம், தற்கால சத்துள்ள உணவு முறைகளுடன் இணைந்து கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு நல்ல சத்தான புரோட்டீன், விட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை வழங்க சிபாரிசு செய்கிறது.
 
நன்றி: சிவகுமாரின் சித்த மருத்துவம்

நாடி வகைகள், பார்க்கும் விதம்:

நாடி வகைகள், பார்க்கும் விதம்


நோய் கணிப்பு முறைகள்:
ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித் மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம்.
நாடி எப்படி உண்டாகிறது?
நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான்.  அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்.
நாடி பார்க்கும் முறை:
 மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல்) ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும். பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும், தளர்த்தியும் பார்த்தால் நாடியின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
நாடி நிதானம்;
மேலே சொன்னபடி நாடி பார்க்கும் போது ஆள்காட்டி விரல் மூலம் கீழ்வாத நாடி, நடு விரல் மூலம் கீழ் பித்த நாடி, மோதிர விரல் மூலம் கீழ் சிலேத்தும நாடி ஆகியவற்றின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இவை தவிர பூத நாடி, குரு நாடி என இரு நாடிகள் உண்டு. பெருவிரல் மற்றும் சுண்டு விரல் மூலம் பூத நாடியையும், ஐந்து விரல்கள் மூலம் குரு நாடியையும் உணரலாம்.

எவ்வித உடல் நலக் குறைபாடும் இல்லாத ஒருவருக்கு நாடி பார்த்தால், அவருடைய வாத நாடி குயில் மாதிரியும் அன்னம் மாதிரியும் நடக்கும். பித்த நாடி ஆமை மாதிரியும், அட்டை மாதிரியும், சிலேத்தும நாடி பாம்பு மாதிரியும், தவளை மாதிரியும் நடக்கும்.
ஆண்-பெண் நாடி பார்க்கும் முறை:
ஆண்களுக்கு வலக் கையிலும் பெண்களுக்கு இடக் கையிலும் நாடி பார்ப்பதுதான் சிறந்தது.

பத்துவகை நாடிகள்:
1.இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி.
2. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி.
3. சுழிமுனை எனப்படும் ஐய நாடி
4. சிங்குவை எனப்படும் உள்நோக்கு நாடி
5. புருடன் எனப்படும் வலக் கண் நாடி.
6. காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி
7. அத்தி எனப்படும் வலச் செவி நாடி
8. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி.
9. அலம்புடை எனப்படும் இடச் செவி நாடி.
10. குருநாடி எனப்படும் எரு வாயில் நாடி.

நாடி பார்க்கும் மாதங்கள்:
சித்திரை, வைகாசி-காலை (உதயம்)
ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை -நண்பகல்
மார்கழி, தை , மாசி - மாலை
ஆவணி, புரட்டாசி, பங்குனி - இரவு
உடலுறவு கொண்டவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் வாகனம் ஓட்டியதால் களைப்படைந்தவர்கள், வயிறு நிறைய சாப்பிட்டவர்கள், மழையில் நனைந்தவர்கள், அடிக்கடி விக்கல் எடுப்பவர்கள், நாட்டியம் ஆடியவர்கள், மூச்சுப் பயிற்சி செய்தவர்கள், எண்ணெய் தேய்த்துக் குளித்தவர்கள், பயந்த சுபாவம் உடையவர்கள், விஷம் சாப்பிட்டவர்கள், அதிகமாக கவலைப் படுபவர்கள், அதிகப் பசி உடையவர்கள், பூப்படையும் வயதில் உள்ள பெண்கள், அதிகமாகக் கோபப்படுவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், நோன்பு விரதம் இருப்பவர்கள் மற்றும் வேறு சிலருக்கும் தெளிவாக நாடி பார்க்க முடியாது.

நாடிகளின் தன்மை:

வாத நாடி
வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும். வயிற்றில் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச்சிக்கலும், சிறுநீர்க்கட்டும் ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.
அறிகுறிகள்:
உடல் குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவி;ல் கொஞ்சமாகவும் வெளியாகும்.
பித்த நாடி
பித்தம் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற்பட்டு எரிச்சல் அதிகமாகும். மண்டைக்குடைச்சல், நாவறட்சி, வாய்க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக் கிறுகிறுப்பு,காது அடைப்பு, அயர்ச்சி, சோம்பல்,நெஞ்செரிச்சல், மந்தம், குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளிவில்லாமல் இருக்கும். கண்கள் உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் சில சமயத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
அறிகுறிகள்:
உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும். சிறுநீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பாகவும் வெளியாகும்.
சிலேத்தும நாடி:
சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து நடுங்கும்,  உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு, வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சு மற்றும் விலாப்பகுதியில் வலி இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர் குறைவாகப் போகும்.
உடல் அறிகுறிகள்:
உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.

மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:
தலையில்                     15000
கண்களில்                     4000
செவியில்                      3300
மூக்கில்                          3380
பிடரியில்                       6000
கண்டத்தில்                   5000
கைகளில்                       3000
முண்டத்தில்                 2170
இடையின் கீழ்              8000
விரல்களில்                   3000
லிங்கத்தில்                    7000
மூலத்தில்                       5000
சந்துகளில்                     2000
பாதத்தில்                        5150
மொத்தம்                       72000

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்.

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்




லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.
நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.
நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.
கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.
கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்.

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்.

கை மருத்துவம்

சளி, இருமல் நீங்க: திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள்
செய்முறை: இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரைடீ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும்வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம்.

உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்:

இஞ்சிவெற்றிலைபூடுமல்லி

செய்முறை: இதை நன்றாக அம்மியில் வைத்து அரைத்து வென்னீரில் அந்த சாறை பிழிந்து மாலை அருந்தினால் உடலில் உள்ள புளிப்பு குறையும்.

வாயு மருந்து:

பூடுஓமம்மஞ்சள்சுக்குகருஞ்சீரகம்வாவளங்காய்
செய்முறை:இதை சட்டியில் போட்டு அவித்து சாறை வடிகட்டி குடிக்கவும்.

பித்தம் அதிகம் இருப்பின்இஞ்சிசர்க்கரைகொட்டை முந்திரிஏலக்காய் அரிசிமல்லி,

செய்முறை: இதை அம்மியில் அரைத்து வைத்து சட்னியைப் போல் சாப்பிட்டால் பித்தம் குறையும்அல்லது அவித்தும் குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நிற்க:

சுக்குபூடுவாவளங்காய்பெருங்காயம்இந்தி பூஓமம்
செய்முறை: இந்த மருந்துகளை அம்மியில் அரைத்து துணியில் வைத்து வெந்நீ:ரில் பிழிந்து எடுத்து ஒரு சங்கு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப்போக்கு நிற்கும்.

விஷக்குடி மருந்து:

சுக்குமல்லிதிப்பிலிவெற்றிலைகருஞ்சீரகம்வேப்பிலை கொழுந்து,ஓமம்மல்லி.

செய்முறை: இதை ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும்பின்னர் அதை வடிகட்டி ஒரு துண்டு கருப்பட்டி போட்டு குடித்து வந்தால் விஷக்கிருமி அழியும்.

பல்வலி மருந்து:

பூச்சிப் பல் இருப்பவர்கள் கிராம்பை அவ்விடத்தில் தூளாக்கி வைத்தால் வலி நீங்கும்.

தலைவலிதடுமல்தலைபாரம்:

தும்பை , ஓம இலை, மஞ்சள்செங்கல் சுட்டு போட வேண்டும்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து இந்த இலைகளை மஞ்சள் செங்கல் சுட்டுப் போட்டு அதனுடைய ஆவியைப் பிடித்தால் தலைபாரமi;,தடுமல்தலைவலி நீங்கும்.

பேதி குணமாக வழி:

 அவரை இலைச் சாறுதயிறு

அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட்டால் பேதி குறையும்.

குமட்டல் வயிற்றுப் போக்கு நீங்க:

எலுமிச்சைப் பழம் சாறுசீரகம்

எலுமிச்சைப் பழச் சாறில் சீரகம் ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட வேண்டும்.

இரத்த வாந்தி நீங்க:

ஆடுதொடா இலை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சரியாகும்.

திக்குவாய் குணமாக:

வசம்பு பொடிஅருகம்புல் சாறு

இரண்டையும் கலந்து குடித்துவர திக்கிப் பேசுதல் சரியாகும்.

மூல நோய் குணமாக:

பப்பாளி பழம்மாம்பழம்,தேன்

பப்பாளி பழம்மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும்.

கைகால் வெடிப்பு நீங்க:

 கண்டங்கத்திரி இலை, தேங்காய் எ ண்ணெய்

கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வெடிப்பு நீங்கும்.
பல் உறுதியாக:

மாவிலையைப் பொடி செய்து பற்களை துலக்கி வர பல் உறுதி பெறும்.

சுளுக்கு நீங்க வழி

உப்புபுளியை கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப் போட வீக்கம்ரத்தக் கட்டு குணமாகும்.

இரத்தத்திலுள்ள பித்தம் குறைய:

ஆரமா குச்சிகளைத் துண்டுகளாக்கி காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம்.

இரத்தத்தை சுத்தப்படுத்த:

கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி சாப்பிட வேண்டும்கண்பார்வையும் கூர்மையாகும்.

மண்ணீரல் வீக்கத்தை குறைக்க:

கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி தினமும் ஒரு முறை சாப்பிட வேண்டும்.

கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி அரைத்து எந்த இடத்தில் தோல் வியாதி இருக்கிறதோ அந்த இடத்தில் தடவ வேண்டும்.

உடல் வலி, தலைமுடி உதிர்வதை தடுக்க:

கரிசாலை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து அடுப்பில் வைத்து
இளம் சூடாகவும் காய்ச்சி தைலமாக்க வேண்டும்அதன் பிறகு அதை தலையில் எல்லா இடங்களிலும் தடவ வேண்டும்அஅப்படி த டவினால் தலை முடிஉதிர்வதையும், நரை ஏற்படுவதையும் தடுக்கும்உடலில் வலி ஏற்படும் இடத்தில் தடவினால் வலி நீங்கும்.

கண் நோய்களை குணமாக்க:

பொண்ணாங்கன்னி கீரையை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமையில் கண்ணாடி அணியத் தேவையிராது. கண் எரிச்சல், கண் மங்கல், கண்கட்டிகண்ணில் நீர் வடிதல் போன்றவற்றையும் கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணமாக்கும்.

காய்ச்சல் நீங்க:

துளசி இலை 50, மிளகு 20 அல்லது முப்பது.
துளசி இலையையும் மிளகையும் நன்றாக அரைத்து பயிறு அளவு சிறுசிறு மாத்திரைதகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்இம்மாத்திரைகளைஇம்மாத்திரைகளை காலைமாலை இருவேளைகளிலும் சுடு தண்ணீருடன் உட்கொண்டால் காய்ச்சல் நீங்கும்.

சளி தொல்லை, சளி காய்ச்சல்மூச்சுத் திணறல் நீங்க:

சுக்கு ஐந்து கிராம்கண்டங்கத்திரி வேர் முப்பது கிராம்கொத்த மல்லி முப்பது கிராம்சீரகம் 2 கிராம்தண்ணீர் 2 லிட்டர்
தேவையான பொருட்கள் அனைத்தையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஆகும்வரை காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு காய்ச்சிய தண்ணீரை 4 முதல் 6 வேளைகள் குடித்தால் சளி தொல்லை நீங்கி விடும்.

காயப்புண் நீங்க:

அரிவான்மனைப் பூண்டு இலை 20 ஐ நன்றாக கசக்கி அதன் சாற்றை காயத்தில் இட்டால் புண் விரைவில் ஆறும்.

தீப்புண்தீக்காயம் நீங்க:

வேப்பம்பட்டையை இடித்து கசாயமாக்கி காய்ச்சி தடவ வேண்டும்வாழைப்பட்டை சாறு பிழிந்து காயத்தில் தடவ வேண்டும்.

தலைவலி நீங்க:

அரை லிட்டர் தண்ணீர்சங்குப் பூக் கொடி பச்சை வேர் நாற்பது கிராம்.
சங்குப்பூக்கொடி பச்சை வேரை நன்றாக நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு 300 மி.லி. வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்காய்ச்சிய நீருக்கு காக்கணக்குடிநீர் என்று பெயர்காக்கணக் குடிநீரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாக ஆறு முறை சாப்பிட்டால் தலைவலி முழுமையாக நீங்கிவிடும்.
தொண்டைவலி நீங்கசுண்ணாம்புவிளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து சூடு செய்து மித சூட்டில் தொண்டையில் தடவிக் கொள்ளவும்.

பல்வலி நீங்க:

சுடுதண்ணீரில் உப்பைப் போட்டு வாiயு நன்றாகக் கொப்பளித்தாலும்சுக்குத் துண்டை வாயில் போட்டுக் கொண்டாலும் பல்வலி முழுமையாக நீங்கிவிடும்.

வாய்புண்குடல் புண்வாயுத் தொல்லை நீங்க:

வெங்காயம்மிளகுதூள்உப்புதக்காளிமணத்தக்காளி கீரை.

மணத்தக்காளி கீரைiயும்வெங்காயத்தையும் , தக்காளியையும் பொடீயாக நசுக்கி மிளகு தூளும் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து சாறாக குடித்தால்வாய்ப்புண்குடல் புண்வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.

சளி கோலைகாது மந்தம் நீங்க:

தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி அதன் பிறகு தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட வேண்டும்அப்படி சாப்பிட்டால் சளி கோலைகாது மந்தம்நீங்கிவிடும்.

உடல் மெலிவு பெற:

பப்பளிக்காயை சமைத்து உண்ண வேண்டும்.

உடல் தொப்பை குறைய:

சுரைக்காயை வாரம் இருமுறை சாப்பிட வேண்டும்.

கால் ஆணி குணமாக:

வெள்ளை அரக்கு அரைத்து வைத்து ஆணிப் பகுதியில் கட்டி வரவும்.

குடல் புண் குணமாக:

 தினமும் ஒரு டம்பளர் திராட்சைப் பழச் சாறு குடித்து வர அல்சர் நீங்கும்.

மூலம்:

பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்அதன்பிறகு வெந்தயம் சிறிதளவு சாப்பிட வேண்டும்இப்படி செய்தால் மூலம் குணமாகும்.

சர்க்கரை நோய் நீங்க:

பப்பாளி பழமும்கொய்யா பழமும்பாகற்காயும் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்.

மஞ்சள் காமாலை:

திராட்சை பழம் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.

யானைகால் நோய் நீங்க:

வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

நரம்புத் தளர்ச்சி நோய் நீங்க:

அத்திப் பழம் தினந்தோறும் ஐந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி விடும்.

வயிற்று வலி, பித்த வெடிப்பு நீங்க:

மருதம் இலையை அரைத்து ஒரு ஸ்பூன் காலையில் சாப்பிட வேண்டும்.

காது அடைப்புகாது கட்டி நீங்க:

தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் காது அடைப்புகாது கட்டி நீங்கி விடும்.

வாயுத் தொல்லை நீங்க:

பாலில் வாய்விலங்கா சிறிதளவு சேர்த்து காய்ச்சி கொடு:த்து வந்தால் குழந்தைகளுக்கு வாயு
தொல்லை ஏற்படாது.
இந்திப்பூபெருங்காயம் இரண்டையும் உரலில் உரசி தண்ணீர் சேர்த்து கொடுத்தால் வாயுத்தொல்லை நீங்கும்.
தூதுவளைகண்டங்கத்திரிபனங்கற்கண்டுசிறுதும்பை
முதலில் தூதுவளைகண்டங்கத்திரிசிறுதும்பை மூன்றையும் உரலில் வைத்து இடித்து சாறு பிழிந்துஅந்த சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்துகொடுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

ஆஸ்துமா இருந்தால்:

வேப்பங் கொட்டை 3, திப்பிலி.

வேப்பங்கொட்டையிலுள்ள பருப்பை எடுத்து அதே அளவு திப்பிலியையும் சேர்த்து வறுத்துஇடித்துதூளாக்கி வெந்நீரில் கலந்து கொடுத்தால்குழந்தைகளுக்கு ஆஸ்துமா குணமாகும்.

மஞ்சள்காமாலையாக இருப்பின்:

வில்வ இலை, வெந்தயம்குளுக்கோஸ்., ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து அந்த நீருடன் குளுக்கோஸ் சேர்த்து தொடர்ந்துகுடித்து வந்தால் மஞ்சள் காமாலை சீக்கிரமாக குணமாகும்இதற்கு எவ்வித பத்தியமும் கிடையாது.

வாய்ப்புண்:

மாசாக்காயை ஷதினமும் இரண்டு தடைவ உரலில் உரசி அதை வாய்ப்புண் உள்ள இடத்தி;ல் தேய்த்து வந்தால வாய்புண் குணமாகும்.

தீப்புண்:

சுண்ணாம்பை நீரில் கரைத்து  மேலே வரும் தெளிந்த நீரை எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தீ பட்ட இடத்தில் தேய்த்து வந்தால்தீப்புண்ணால் ஏற்பட்ட தழும்பு கூட வராதுசீக்கிரமாகத் தீப்புண் ஆறிவிடும்.

ஜலதோஷமாக இருப்பின்:

சுக்குமிளகுவெற்றிலைமஞ்சள் தூள்வெள்ளைப் பூண்டுகருஞ்சீரகம்வேப்பங்கொழுந்து.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து வேகவைத்து அதன் வற்றிய நீரை குடித்தால் அதிவிரைவில் குணம் கிடைக்கும்அம்மைபோட்டிருப்பினும் 2, 4, 6, 8 தினங்களில் கொடுத்தால் குணமாகும்.

வாய்ப்புண்ணாக இருப்பின்:
மாசாக்காய்மாதுளம் பழத் தோல்சீரகம்அதிமதுரம்சீனாகரம்

இவற்றை நீரில் வேகவைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வந்தால் குணமாகும்.
சளி தொல்லை:

காயம்திப்பிலிமாசாக்காய்அதிமதுரம்சித்திரத்தைவாய்விளங்காய்பால் கடாச்சிமிளகுபூண்டுசீனாகரம்சுக்குஇம்மருந்துக்குப்பெயர் உரைமருந்து.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் உரலில் தேய்த்து சேர்த்து கொடுக்கவும்மாதம் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தைகளுக்குசளித் தொல்லை இராது.

குழந்தைகளுக்கு மார்பில் கட்டி இருப்பின் சமுத்திராபழத்தை உரலில் தேய்த்து அதை மார்பில் பூசிவ ந்தால் ஒரு வாரத்தில் கட்டி கரைந்து விடும்.

இரும்புச் சத்து குறைவாக இருப்பின் தினமும் கருப்பட்டி காப்பியை அருந்தி வந்தால் சீக்கிரத்தில் அளவு கூடும்குழந்தை உண்டாகி இருக்கிறவர்கள் 6, 7மாதத்தில்இதைப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பித்தவாயு குர்ணி:

காய்ந்த கொட்டை முந்திரி பழம்ஏலக்காய்கொத்தமல்லி விதைஇஞ்சி ஆகியவற்றை நீரில் அவித்து அந்த நீரை மூன்று நாட்களுக்குப் பருகி வந்தால்பித்த வாயு தீரும்.

நீரழிவு நோய் இருப்பவர்கள் நாவல் பழக் கொட்டையை காய வைத்து பொடி பண்ணி தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில்குணமாகும்சுகர் ஆரம்பநிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும்.

குழந்தைக்கு சீலம் போவதாக இருப்பின் மாதுளம்பழத்தின் பூவை எடுத்து அரைத்து ஆட்டுப் பாலில் கலந்து கொடுத்தால் சீக்கிரம் குணம் கிடைக்கும்.

வயிற்றுப் புண்:

பாசிப்பருப்பு ஒரு தேக்கரண்டி, அரிசி ஒரு தேக்கரண்டி, பூண்டு ஒரு பல், வெந்தயம் ஒரு தேக்கரண்டி, தேங்காய் பால்.

பாசிப்பருப்பு, அரிசி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து நன்றாக கடைந்து தேங்காய்பால், உப்பு சேர்த்து மூன்று நாள் பருகி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
....
தலைசுற்றல் குணமாக:

சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவை தலா ஐந்து கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரைக் கரண்டி  சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல் நிற்கும்.

இருமல் குணமாக:

அரச மரத்துப் பதட்டையை காய வைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி ஒரு டம்ளர் நீரில் ஒரு ரண்டி போட்டு கொதித்து வடிகட்டி சர்க்கரைப் பால் சேர்த்து குடிக்க இருமல் நிற்கும்.

ஜலதோஷம் குணமாக: ஜலதோசம் காய்ச்சல், தலைவலிக்கு பன    ங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
வரட்டு; இருமல் குறைய: கருவேல மரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும்.

மூச்சுத் திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய்யை விட்டு வதக்கி பால் உணவில் சாப்பிட்டால் மூச்சுத் திணறல் நிற்கும்.

சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடுதொடா சங்கன்இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிக்கட்டு நீங்கும்.

பிரயாணத்தின் போது வாந்தி நிற்க: தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது.

நெஞ்சு சளி நீங்க: தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும்.

தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட்டால் தும்மல் நிற்கும்.

காச நோய் குணமாக: செம்பருத்திப்பூவை எடுத்து சுத்தம் செய்து மைபோல் அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரண குணம் கிடைக்கும்.
சுவாசக் குழாய் அலர்ஜி நீங்க: குங்குமப்பூவுடன் தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை உட்கொள்ள  குணமாகும்.

மூச்சுத்திணறல் குணமாக: தேள் கொடுக்கு செடியின் காயை நசுக்கி துளசி இலையை சேர்த்து காஷயமாக்கி தினமும் ஒரு வேளை சாப்பிட்டால் மூச்சுத் திணறல் குணமாகும்.

வாந்தி நிற்க: வேப்பம்பூவை வறுத்து பொடிசெய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி குணமாகும்.

ஒற்றைத் தலைவலி குணமாக: துளசி இலை, நல்வேளை இலை, அருகம்புல், வெற்றிலை போன்ற இலைகளை கைப்பிடி அளவு சேகரித்து கசக்கி பிழிந்து எந்தப் பக்கம் தலைவலிக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கம் காதில் தொடர்ந்து மூன்று நாட்கள் விட ஒற்றை தலைவலி போய்விடும்.

மூக்கில் நீர் வடிதல்: ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க காய்ச்சி இறக்கி வடிகட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
மூக்கில் இரத்தம் வடிதல் நீங்க: மாதுளம் பழச் சாறு அருகம்புல் சாறு சமஅளவு 30 மி.லி. மூன்று வேளை சாப்பிட்டால் குணமாகும்.

கண் எரிச்சல் நீங்க: அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கும்.

கண்புரை குணமாக: நீக்கிய கீழாநல்லி இலை வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் சாறு எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கண்களில் விட்டுவர கண்புரை குணமாகும்.

மாலைக் கண் குணமாக: கருத்துளசியின் இலையை கழுவி கசக்கி சாறெடுத்து கண்ணுக்கு இரண்டு துளி வீதம் இரண்டு கண்களுக்கும் காலை, மாலை என ஒன்பது நாட்கள் விட்டு வந்தால் மாலைக் கண் நோய் குணமாகும்.

குரல் மாற்றத்தை சரி செய்ய: கடுக்காய் தோல் சிறு துண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிக்கொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை விழுங்கி விடவும்.

விக்கல் குணமாக: நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் குணமாகும்.
தொண்டைப் புண் ஆற: வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும்.

தொண்டை கரகரப்பு குணமாக: சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

வாய் நாற்றம் போக: சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆற வைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். பல்லும் உறுதியாகும்.
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.
ஈறுகளில் இரத்தக் கசிவு குணமாக: இலந்தை மரத்தின் கொழுந்துகளை பறித்து நீரில் காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து அந்நீரை வாய் கொப்பளிக்க ஈறுகளில் இரத்தக் கசிவு குணமாகும்.

பல் ஆட்டம் நிற்க: வாழை மர பட்டையை கரியாக்கி பொடி செய்து பல் தேய்த்து வர பல் ஆட்டம் குணமாகும்.

குரல் இனிமை பெற: முற்றிய மாவிலை 4 ஐ 200 மி.லி; நீரில்போட்டு கொதிக்க வைத்துக் குடிக்க குரல் இனிமை பெறும்.

காது குடைச்சல் குணமாக: ஊமைத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வலி குணமாகும்.
காது அடைப்பை நீக்க: தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பு நீங்கும்.

காதில் சீழ் வடிதல் நீங்க: நாயுறுவி செடி இலை இடித்து சாறு எடுத்து 2 சொட்டு காதில் விட
சீழ்வடிதல் குணமாகும்.

உடலில் உள்ள விஷம் இறங்க: வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2கிராம் உட்கொள்ள விஷங்கள் முறியும்.
உடல் பருமன் குறைக்க: பொன்னாவரை கீரையின் விதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் உடலில் அதிகளவு வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர் மலம், சிறுநீர் வழியாகவும், வயிற்றுக் கடுப்பு மூலமாகவும் வெளிப்படும். உடல் பருமன் குறையும்.

வயிற்றுப் பூச்சிகள் ஒழிய: பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சிகள், புழுக்கள் ஒழியும்.
சீதபேதி குணமாக: கசகசாவை வறுத்து தூள் செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பசி உண்டாக: சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.

ஞாபகசக்தி வளர: வல்லாரை 150 கிராம் வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபக சக்தி பெருகும்.
அலுப்பு தீர: மிளகை நெய்யில் வறுத்து தூளாக்கி வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர அலுப்பு தீரும்.
நல்ல தூக்கம் வர: சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் நித்திரை வரும்.

குளிர் காய்ச்சல் நீங்க: நீலத் துளசிச் சாற்றை 2 தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அருந்தினால் குளிர் காய்ச்சல் குணமாகிவிடும்.