Tuesday, August 23, 2016

சினைப்பை நீர்கட்டி...

 சினைப்பை நீர்கட்டி...

                         சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. இதற்கு சினைப்பை நீர்க்கட்டிகள் 10 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கருத்தரிக்க முடியாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் நித்தமும் பல எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கின்றனர்.

சினைப்பை நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. அதிலும் குறிப்பாக டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது.

இதில் பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் உள்ளது.

பெரும்பாலும் 1முதல் 5 விழுக்காடு வரையிலான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தற்காலத்தில் அதிகமாக ஏற்பட மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களில் மாதந்தோறும் நிகழும் மாதவிலக்கு சுழற்சி சரிவர இருக்காது. 2,3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு சுழற்சி நிகழும். சிலருக்கு மாதவிலக்கு குறைவாக வெளிப்படும்.

இவ்வாறு மாதவிலக்கு தள்ளிப்போவது பல பிரச்சனைகளுக்கு வழிகோலுகிறது. உடல் எடை அதிகரிக்கிறது. ஆண்மைத் தன்மை பெண்களுக்கு மிகுதியாகிறது. ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் ரோமம் வளர ஆரம்பிக்கிறது. தேகத்திலும் ரோமங்கள் வளரும். சினைப்பைகள் அளவில் பெரிதாகும். சினைப்பை நீர்க் கட்டிகளில் நீர் சேர்வதே இதற்கு காரணமாகும்.

சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்

நோயுண்டாக்கும் காரணத்தை அறுதியிட்டு கூற முடியுமா எனில் இயலாது என்றுதான் கூறவேண்டும். இந்நோய் பெரம்பாலும் பருவமடைந்த மங்கைகளில் காணப்படும் . எனினும் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில்தான் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.

மரபணு மூலமாகவும், பரம்பரையாகவும் இந்நோய் வரலாம்.

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது. ஊகுஏ எனும் ஹார்மோன் குறைந்து காணும். ஃஏ எனும் ஹார்மோன் அதிகரித்துக் காணும். சில சமயங்களில் அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன்கள் அதிகரித்துக் காணும்.

டெஸ்டோஸ்டிரான் அதிகரித்துக் காணும்.

புரோலாக்டின் அதிகரித்துக் காணும்.

மாதவிடாய் கோளாறுகள்

ஒரு பெண் பூப்பெய்திய பின் முறையாக மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு உண்டாகும். இது இயல்பானது. ஆனால் இந்நோய் கண்ட சிலருக்கு மாதந்தோறும் மாதவிலக்கு நிகழாது. சில பெண்களில் மாதவிலக்கு ஏற்பட்டாலும் சினைமுட்டை வளர்ச்சியின்றி மாதவிடாய் நிகழும். இயல்பாக பெண்களில் மாதந்தோறும் சினைப்பையில் இருந்து ஒரு சினைமுட்டை வளர்ந்து வெளிப்படுகிறது.

0.5-1 மி.மீ. அளவிலான கட்டிகள் சினைப்பையில் ஓரத்தில் காணப்படும். பத்துக்கு மேற்பட்ட கட்டிகள் காணப்படும். 20 மி.மீ. அளவுக்கு மேல் கட்டிகள் பெரும்பாலும் பெரிதாவதில்லை. சினைப்பையின் மேற்பரப்பில் நெக்லஸ் அமைப்பில் ஸ்கேன் சோதனையில் கட்டிகள் காணும். சினைப்பை அளவில் பெரிதாக காணப்படும்.

இந்நோயுற்ற பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்திற்கு அதிகமாக இருக்கும். உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தவுடன் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளல் அவசியம்.

மலட்டுத் தன்மை

சினை பை நீர்கட்டிகள் பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மைக்கு 30% வரை காரணமாக இருக்கிறது. சாதாரணமாக கருத்தரிக்க இயலாமல் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான பெண்களுக்கு இந்நோய் இருக்கிறது. இதற்கு சிகிச்சையளித்தாலே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

முடி வளர்ச்சி

பெரும்பாலும் பெண்களுக்கு முகத்திலும், உடலிலும் அதிகளவில் முடிகள் இருப்பதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களைப் போல அதிக முடிவளர்ச்சி உடலில் உண்டாகும்.

குறிப்பாக மேலுதடு, கீழ்தாடை, மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, முன்கைகளில் முடி வளர்ச்சி காணப்படும்.

தோலில் காணப்படும் மாற்றங்கள்

உடலில் சில இடங்களில் கருமை நிறம் அதிகரித்து காணும்.

பெரும்பாலும் கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதிகளில் இம்மாற்றம் காணப்படுகிறது.

ஆய்வுகூடத் தேர்வுகள்

ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.

ஹார்மோன்களின் அளவுகளை பரிசோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.

மருத்துவம் மற்றும் ஆலோசனைகள்

சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கின்றன என்பதை சூதகதடை, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுணங்களைக் கொண்டு யூகிக்கும்போது அல்லது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கும்போது பெண்கள் செய்யவேண்டிய முதற் காரியம் அவர்களது உடல் எடையை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதேயாகும்.

உடல் எடையை குறைத்தல்

தினமும் காலை அல்லது மாலை வேளையில் 2 முதல் 3 கி.மீ தொலைவு வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நடைபயிற்சி மேற் கொள்வதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கின்றன. நடைபயிற்சி மூலம் ஒரு மாத காலத்திலேயே நல்ல பலனை அடையலாம்.

நடை பயிற்சியுடன் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இயற்கை உணவுகளான காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் சீராக

சினைமுட்டை முதிர்ச்சியடைந்து வெளிப் படுதலைத் தூண்ட ஆங்கில மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

எனவே சினைப்பை நீர்க்கட்டிகளுக்கு ஏற்ற மருத்துவம் சித்த மருத்துவமே என்று கூறலாம். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுவதால் பக்க விளைவுகளின்றி அறுவை சிகிச்சையின்றி சினைப்பை நீர்க்கட்டிகளை அகற்றிவிடலாம்.

சினைப்பை நீர்க்கட்டிகள் கரைய தொடங்குகின்ற போதே சினைமுட்டைகள் முதிர்ச்சியடைந்து வெளிப்படும் சூழல் உருவாகிறது.

============================================

நீர்க்கட்டிகளை விரட்டினால்... வாரிசு ஓடி வரும்!

'குழந்தையின்மை பிரச்னைக்குத் தீர்வு தருகிறோம்' என்றபடி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 'கருத்தரிப்பு மையங்கள்' பலவும், காசு பார்க்கும் வெறியில், பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுவது வாடிக்கையாகிப் போய்விட்டது. இதுதான் காரணம் என்பதை அறியாமல், 'கடவுளே சொல்லிட்டார்' என்பதுபோல, 'டாக்டர் சொல்லிட்டார்' என்றபடி நம்பிக்கையோடு நடைபோடுகிறார்கள் பெண்கள் பலரும். ஆனால், நிஜத்தில், பெரும்பாலும் மோசடி வேலைகளே நடக்கின்றன. இதைப் பற்றி கடந்த இரண்டு இதழ்களாக எழுதியிருந்தோம்.

''குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு... பெரும்பாலும் நம்மிடமே இருக்கிறது. நம்முடைய உடல்நலத்தை தகுந்தபடி பேணுவதோடு, உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் அக்கறை காட்டினால், இத்தகைய பிரச்னைகளில் இருப்பவர்களில்  80 சதவிகிதத்தினருக்கும் மேல், பைசா செலவில்லாமலேயே... குழந்தைப்பேறு அடைய முடியும்'' என்பதுதான் நம்முடைய மண்ணின் மருத்துவர்களான சித்த மருத்துவர்கள் சொல்லும் தீர்வாக இருக்கிறது!

உணவும், வாழ்க்கை முறையுமே மருந்து!
இங்கே அதைப் பற்றி பேசுகிறார்... சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர், கு.சிவராமன். ''பெரும்பாலான கருத்தரிப்பு பிரச்னைகளை சிகிச்சையின்றியே தீர்த்துக்கொள்ளலாம். கருத்தரித்தலுக்கான முக்கியக் காரணமான மாதவிடாய் சிக்கல் ஏற்பட, நீர்க்கட்டிகளே பிரதான காரணம். சத்து இல்லாத 'ஜங் ஃபுட்' உணவுப் பழக்கம், அளவுக்கு அதிகமான இனிப்புகள் உண்பது, எடையைக் குறைப்பதற்காக பட்டினி கிடப்பது, நேரங்காலமில்லாமல் உண்பது, உரிய நேரத்தில் உண்ணாமல் இருப்பது... இதுபோன்ற காரணங்களால் நீர்க்கட்டிகள் ஏற்படலாம். தினசரி உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறி, பழங்கள் சேர்த்து, முறையாக யோகா செய்தாலே போதும்... நீர்க்கட்டிகளைத் தவிர்க்கலாம். பெற்றோர்களே... இதை கண்டிப்பாக உங்கள் பெண் பிள்ளைகளிடம் அறிவுறுத்துங்கள்.

ஏற்கெனவே நீர்க்கட்டி இருப்பவர்கள், அதிலிருந்து குணம்பெற தினமும் 45 நிமிடம் வேகமான நடைபயிற்சி செய்யலாம்; 20 - 30 நிமிடங்கள் யோகா செய்யலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதுடன் சிறுதானியம், கீரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும் இனிப்பை யும் அறவே தவிர்க்க வேண்டும். சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பவருக்கு சர்க்கரை மற்றும் தைராய்டு பிரச்னை இருக்கும்பட்சத்தில், சுயமருத்துவமின்றி சித்த மருத்துவரை அணுகி தீர்வுகாண வேண்டும்.

மன அழுத்தத்தை விரட்டுங்கள்!
அடுத்த பிரச்னை, சினைப்பை அடைப்பு. இதற்கு மன அழுத்தமும் காரணமாக இருக்கலாம். எனவே, மற்ற சிகிச்சைகள் எடுப்பதற்கு முன் கவுன்சலிங் எடுத்துக்கொண்டு, மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டாலே, அடைப்பு தானாக நீங்கிவிடும். அதேபோல் வெள்ளைப்படுதல் ஒரு முக்கியக் காரணம். சாதாரணமாக மாதவிடாய்க்கு 4 நாட்களுக்கு முன்பு வெள்ளைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால், துர்நாற்றம் வீசக்கூடிய அளவுக்கு அடிக்கடி வந்தாலோ... பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டாலோ கண்டிப்பாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதிலிருந்து விடுபட, வாரம் இருமுறை வெள்ளைப் பூசணிக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்த கூட்டு வைத்து சாப்பிடலாம். வெள்ளைப்பூசணி சாறு எடுத்துக்கொள்வதும் நல்லது. கண்டிப்பாக கோழி இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். சோற்றுக்கற்றாழை சாற்றை, உணவுக்கு முன் காலையில் எடுத்துக்கொள்ளலாம். சித்த மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் சோற்றுக்கற்றாழை லேகியம் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் அவசியம். பிறப்புறுப்பில் பூஞ்சை அல்லது நுண்ணுயிர் தொற்று இருக்கும்பட்சத்தில், உரிய மருத்துவரை அணுகுதல் நல்லது.

சினைப்பை முட்டை வளர்ச்சி குறைவாக இருப்பது, கருமுட்டையானது சினைப்  பையிலிருந்து கருப்பைக்கு வர தாமதிப்பது, ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவையும் பெண்களைப் பொறுத்தவரை குழந்தை   யின்மைக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
ஆண்களைப் பொறுத்தவரை, விந்தணு உற்பத்தி எண்ணிக்கை குறைவு, விந்தணு உற்பத்தியில்லாத ஆண்மைக் குறைவு, விந்தணுவின் இயக்கத்தில் குறைபாடு ஆகியவை முக்கியக் காரணங்கள். ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க, தினமும் காலையில் மாதுளையும், மாலையில் மஞ்சள் வாழையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கைப்பூ மற்றும் பாதாம் பருப்பு கலந்த பாலை இரவில் அருந்த வேண்டும். பயறு வகைகளையும், புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மகத்துவம் தரும் மாதுளை... பப்பாளி!
பெண்ணின் கருப்பையை பலப்படுத்தவும், வருங்காலத்தில் குழந்தையின்மையைத் தவிர்க்கவும், ஒரு பெண் பூப்படைந்து மாதவிடாய் ஆரம்பிக்கும் காலத்தில் இருந்து வாழ்நாள் முழுக்கவே பின்வரும் உணவுக்குறிப்புகளைப் பின்பற்றலாம். உளுந்தங்களி, கருப்பைக்கு மிகவும் நல்லது; மார்பகங்களை சீராக வைத்திருக்கவும் உதவும். தோல் நீக்காத கறுப்பு உளுந்தை வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் எடுத்துக்கொள்வதுடன் மாதுளை, பப்பாளி போன்ற பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆண்களோ, பெண்களோ... பர்கர், பீட்ஸா மற்றும் துரித உணவுகளை உண்பதும் மலட்டுத்தன்மையை உண்டாக்கலாம். அதேபோல், உடற்பயிற்சியின்மையும் மலட்டுத்தன்மைக்கான காரணமாகலாம். சீரான உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், கருப்பை கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி செய்வது... ஆண்களுக்கு ஆபத்தா?
'ஆண்கள் உடற்பயிற்சி செய்வதால் விந்தணு உற்பத்தி குறைய வாய்ப்பிருக்கிறது’ என்றொரு தகவல் உண்டு. இது தவறான தகவல். ஆனால், உடற்பயிற்சிக்குத் தகுந்த, சத்தான உணவை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, உடற்பயிற்சி மையங்களில் தரப்படும் புரோட்டீன் பவுடர்களை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்வது ஆகியவை விந்தணு குறைபாட்டுக்கு காரணமாகலாம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்'' என்ற டாக்டர் சிவ ராமன்,

''உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நெருப்புக்கு அருகில் வேலை செய்பவர்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக் கிறது'' என்று எச்சரிக்கையும் தந்தார்.

மூலிகை வைத்தியத்தில் தீர்வு!
''விந்தணு குறைபாடு, கர்ப்பப்பை அடைப்பு மற்றும் சினை முட்டை உற்பத்தியின்மை போன்றவையே குழந்தையின்மைக்கு முக்கியக் காரணங்கள். இவற்றை மூலிகை வைத்தியத்தின் மூலம் எளிதாக நிவர்த்தி செய்யமுடியும்'' என்கிறார் பழநிமலையை அடுத்துள்ள கொழுமம் கிராம மூலிகை ஆராய்ச்சியாளர் பிறைசூடிப்பித்தன்.

''ரசாயன இடுபொருள் பயன்பாட்டில் விளைந்த உணவுப் பொருட்கள், மது, புகை, மன உளைச்சல், குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுதல், உடல் பருமன் நோய் போன்ற பற்பல காரணங்களினால்... ஏழை, பணக்காரர் பாகுபாடின்றி ஆண், பெண் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னையை எளிமையாகக் குணப்படுத்தி, பிறருடைய விந்தணு மற்றும் கருமுட்டை என தேடிக்கொண்டிருக்காமல், அந்தந்த ஜோடியினரே ஆரோக்கியமான குழந்தைகள் பெற்றுக்கொள்ள மூலிகை வைத்தியத்தில் அநேக வழிகள் உள்ளன.

இதற்கு பொறுமை யும், ஒத்துழைப்பும் மிக அவசியம்.
சோற்றுக்கற்றாழை, மூசாம்பர மெழுகு, பெருங்காயம், வெல்லம் உள்ளிட்ட பலவற் றைப் பயன்படுத்தி பெண்ணின் சினைமுட்டை உற்பத்தியைப் பெருக்கவும் வழிஉண்டு. பப்பாளி, அன்னாசிப்பழம் இரண்டையும் குறைபாடு உள்ள பெண்கள் சாப்பிட்டு வந்தால்... முறையான மாதவிலக்கு சுழற்சி ஏற்படும். முறையான மூலிகை வைத்தியம் செய் தால்... கர்ப்பப்பை குறைபாடுகள், அடைப்பு, கட்டிகள் போன்றவற்றை கத்தியின்றி சரிசெய்யலாம்'' என்கிறார் பிறைசூடிப்பித்தன்.

#############################################

சினைப்பை நீர்க்கட்டி  --பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்,!!!

(எளிய இயற்கை மருத்துவத்தில் குணமான தோழி ஒருவரின் அனுபவம் )

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

 நானும் treatment எடுத்துக் கொண்டே தான் ஜுஸ் குடித்தேன்.அதனால் எதுவும் side effect இல்லை தோழி. மாத விலக்கு ஆன முதல் 3 நாட்கள் morning வெறும் வயிற்றில் 1 டம்ளர் ஜூஸ் குடிக்க வேண்டும்.1 மாதம் மட்டும் குடித்தால் போதும்.

1.நீர்க்கட்டி இருந்தால் தான் குடிக்க வேண்டும் என்பது இல்லை.குழந்தை உண்டாவது தள்ளிப் போகிறவர்களும் குடிக்கலாம்.
2.மலை வேம்பு வேப்ப மரத்தில் வேறு வகை.பார்க்க கருவேப்பிலை போல் இருக்கும்.சிலர் வீட்டில் வைத்திருப்பார்கள்.நாட்டு வைத்தியரிடம் கேட்டு பாருங்கள் உங்கள் ஊரில் அந்த மரம் எங்கு இருக்கிற்து என்று.
3.இலைகளின் அளவு சரியாக தெரியாது.கருவேப்பிலை ஜூஸ் 1 glass எடுக்க எவ்வளவு இலை செர்ப்போமோ அவ்வளவு சேருங்கள்.
4.பழச்சாறு டம்ளரின் அளவு.
5.தொடரலாம்.
6.ஜூஸ் குடிக்கும் 3 நாட்கள் மட்டும் தான் எண்ணெய்,புளிப்பு இல்லாத சாப்பாடு சாப்பிடனும்.மற்ற நாட்கள் எப்போதும் போல சாப்பிட்டுக் கொள்ளலாம்.
எங்கள் குடும்பத்தில் என்னுடன் சேர்த்து 3 பேர் குழந்தை உண்டாகி இருக்கிறோம்.அதனால் முயற்சி செய்து பாருங்கள் தோழி...

6 comments:

  1. 3 month kudukanumagitu illa one month kudicha podhuma

    ReplyDelete
  2. உணவு முறைகள்:
    பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், களி, தினமும் மதியம் சாப்பாட்டில் சிறிது வெந்தய பொடி, சின்ன வெங்காயம், ஆகியவை உதவும். உடல் எடை அதிகமாக இருப்பின் நடை பயிற்சியோடு கொள்ளு ரசம் தினமும் சாப்பிடுதல் நலம்.
    புளிப்பு உணவுகளை , அதிக கொழுப்பு உணவுகள் மற்றும் அடுமனை உணவுகளை தவிர்த்தல் நல்லது.
    கை மருத்துவம் :
    கழற்சிக்காய் சூரணம் வாங்கி தினமும் காலை வெறும் வயிற்றில் மிளகு மோர் சேர்த்து இரு மாதம் வரை சாப்பிட குணம் அடையும்.
    மருந்துகள்:
    சில நேரங்களில் சிலருக்கு கை மருத்துவத்தில் சரியாவதில்லை, உடல் மற்றும் ஹார்மோன் பிரச்சனை அதிகமாய் இருப்பின் நமது சித்த மருத்துவத்தில் அருமையான மருந்துகள் உள்ளன,
    வெப்பு செந்தூரம், சூதக செந்தூரம் போன்ற மருந்துகளால், பத்தியதோடு நீர்க்கட்டி மட்டுமல்ல திசு பிரச்சனை( FIBROID) மற்றும் சூதக வலி, சூதக வாய்வு, சூதக பிரச்சனையால் ஏற்படும் தலைவலி முதலிய வியாதிகளையும் சரி செய்ய முடியும்.
    ஓம் பாரம்பரிய மருத்துவம் மற்றும் மொழி ஆய்வு மையம்
    43, சுபலட்சுமி எழிலகம், முடியரசன் சாலை , காரைக்குடி-630002
    தொடர்புக்கு: 9361710100 / 9361810100 / 9345650000

    ReplyDelete
    Replies
    1. வாழ்க வளமுடன் நலமுடன்
      வெப்புச்சூரணம், சாதக சூரணம் சாப்பிடும் முறை மற்றும் துணை மருந்து சொன்னால் நல்லது உங்கள் மருத்துவ தொண்டுக்கு நன்றி வளம் நலம் ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் ஓங்கி வாழ்க வளமுடன் நலமுடன்.

      Delete