Sunday, March 10, 2019

அதிசய மருந்து மின்சார தைலம் !

அதிசய மருந்து மின்சார தைலம் !


1. புதினா உப்பு  (மென்தால்- Menthol )   ----  30 கிராம் .

2.ஓம உப்பு   (தைமால்_Thymol)                   ----  30 கிராம்

3.கட்டி கற்பூரம் என்ற பூச்சூடம்(Camphor)  ----  15. கிராம்

4.பச்சை கற்பூரம்                            ---   15. கிராம்

ஒரு கண்ணாடி பாட்டிலில் நான்கு பொருட்களையும் தனித்தனியாக தூள் செய்துஒன்றாக கலந்து சற்று  நேரம் வெயிலில் வைக்கவும் நீராக உருகி விடும்  பின் வடிகட்டி உபயோகிக்கலாம் .

தீரும் நோய்கள் .
******
 1.சாதாரணம் சுரம்: மூன்று முதல் ஐந்து சொட்டு காபி அல்லது பாலில் கலந்து கொடுக்கவும்
. 2. வயிற்று வலி: ஐந்து துளி வென்னீரில் கொடுக்கவும்.
3. வாந்தி தேனில் எலுமிச்சம்பழச் சாறு கலந்து மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.
 4. காலரா பழுப்பு சர்க்கரையில் மூன்று விட்டுக் கொடுக்கவும் 3 மணி நேரத்தில் நிற்காவிடில் நிற்கும் வரை மூன்று மணிக்கு ஒரு தடவை கொடுக்கவும்.
5. தலைவலி இஞ்சி சாற்றில் தேன் கலந்து மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.
 6. விக்கல் சூடான பாலில் மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.
 7. கக்குவான் இருமல் தேன் அல்லது நன்னாரி சர்பத்தில் இரண்டு துளி விட்டுக் கொடுக்கவும் தொண்டையில் தைலத்தை தேய்க்கவும் உள் நாக்கில் தடவவும் இவ்வாறு நான்கைந்து நாட்கள் செய்யவும்.
8. தாது விருத்திக்கு வெண்ணையில் அல்லது அல்வாவில் மூன்று துளி விட்டு காலை மாலை சாப்பிட்டு வரவும்.
 9. பித்தத்திற்கு எலுமிச்சை இலை அகத்திக்கீரை சம அளவு கசாயம் ஒரு அவுன்சு கசாயத்தில் மூன்று துளி விட்டு ஐந்து நாட்கள் சாப்பிடவும்.
10. காசத் தீர்க்கும் கோழை நாசத்திற்கும்
ஆடாதொடை கசாயத்தில் தேன் விட்டு மூன்று துளி வீதம் குணமாகும்வரை சாப்பிடவும்.
11. மந்தாரகாசம் கண்டங்கத்திரி தூதுவளை துளசி இவைகளை சேர்த்து கசாயம் செய்து நெய் தேன் விட்டு ஒரு வேலைக்கு மூன்று துளி குணமாகும்வரை சாப்பிடவும் (தேனும் நெய்யும் சம அளவாக சேர்க்கக்கூடாது சிறிது கூடுதல் குறைச்சலாக சேர்க்க வேண்டும் ஒரு மனிதன் தேனையும் நெய்யையும் சம அளவு சேர்த்து குடித்தால் அது மரணத்துக்கு ஏதுவாகும்).
12. சகல வலி பஞ்சில் நனைத்து வலியுள்ள பாகத்தில் தொட்டு வைக்கவும் வீக்கத்தில் தைலத்தைத் தேய்த்து ஒத்தடம் கொடுக்கவும்.
13. இடுப்பில் பிடிப்பு கை கால் குடைச்சல் சுக்கு கசாயத்தில் மூன்று துளி இதுபோல் மூன்று நாள் வலியுள்ள பாகத்தில் தைலம் தேய்த்து மணலை வறுத்து ஒத்தடம் கொடுக்கவும். 14. காதில் சீல் தேங்காய் எண்ணெய் ஒரு அவுன்சில் ஏழு துளி கலந்து காதில் மூன்று துளி விட்டு பஞ்சில் அடைக்கவும் தவிர பாலில் மூன்று துளி விட்டு மூன்று நாள் சாப்பிடவும். 15. கண்டமாலை கட்டிகளுக்கு வேப்ப எண்ணெய் ஒரு அவுன்சில் 10 துளி ரணங்களில் தடவவும்.
16. குழந்தைகளின் மாந்தகம் மஞ்சனத்தி துளசி பொடுதலை இவை ஒன்றில் கஷாயம் செய்து தேன் விட்டு அதில் ஒரு துளி விட்டு மூன்று நாள் கொடுக்கவும்.
17. அண்டவாதம் குடல்வாதம் எருக்கலம் பூவில் மொட்டு பூ ஒன்று வெள்ளைப் பூடு பல் 1 மிளகு 5 அரைத்து அதில் துளி விட்டு இரண்டு வேளை கொடுக்கவும் மேலே மேற்படி தைலத்தை தடவி தேங்காயை துருவி அத்துடன் களர்ச்சி கொட்டை இலையையும் சேர்த்து சூடு பண்ணி ஒத்தடம் கொடுக்கவும்.
18. ஜன்னி இஞ்சி முருங்கைப்பட்டை வெள்ளைப்பூடு இவைகளைத் தட்டி சாறு எடுத்து ஒரு கரண்டி வேப்ப எண்ணெய் கலந்து ஐந்து சொட்டுகள் கொடுக்கவும்.
19. சோகை நீர் வீக்கத்திற்கு நீர்முள்ளி இலை கோவை தண்டு சுரைக்கொடி வகைக்கு கைப்பிடி எடுத்து கசாயம் செய்து இரண்டு துளி விட்டு ஒரு வாரம் கொடுக்கவும்.
 20. மூலக் கிராணி வயிற்று இரைச்சல் தான்றிக்காய் சூரணத்தில் திரிகடி எடுத்து தேனை கலந்து 2 துளி 5 நாட்கள் கொடுக்கவும்.
21. வயிற்றுக்கடுப்பு எருமை தயிரில் லவங்க கொழுந்தை சேர்த்து அரைத்து நெல்லியளவு அதில் ஒரு துளி மூன்று நாட்கள் அல்லது நாவல் பட்டை கசாயத்தில் ஒருதுளி ஆகாரம் ஜவ்வரிசியில் கஞ்சி அல்லது தயிர் சாதம் மட்டும் சேர்க்கவும்.
22. பெண்கள் பெரும் பாடு பசு வெண்ணெயில் மூன்று துளி மூன்று வேளை கொடுக்கலாம்.
23. நடுக்கல் சுரம் முந்தின  வேப்பம் பட்டை கசாயத்தில் மூன்று துளி 3 நாட்கள் கொடுக்கலாம்.
24. அஜீரணம் குளிர்ந்த நீரில் 2 துளி கொடுக்கவும்.
25. நீரடைப்பு வெள்ளரிக்காய் வாழைத்தண்டு முள்ளங்கி இவை ஒன்றின் சாரில் இரண்டு துளி கலந்து கொடுக்கவும். 26. சரீரத்தில் திடீர் தடிப்பு மதமதப்பு நீர் சம்பந்தமான சரீர உப்பிசம் காலை மாலை மூன்று துளி காப்பியில் கொடுக்கவும்.
27. தேள் பூரான் மூட்டை பூச்சி கடிக்கு பொன்னாவாரை கசாயத்தில் ஒரு அவுன்சில் சீனி போட்டு இரண்டு துளி கொடுக்கவும்.
28. ரத்த காசத்திற்கு தேங்காய் பாலுடன் தேன் கலந்து ஒரு ஸ்பூன் அளவு அத்துடன் மருந்து 2 துளி இது காலையில் பின் மாலையில் தேங்காய் பாலுடன் நெய் கலந்து இரண்டு துளி கொடுக்கவும்.
29. கரப்பான் சொறி சிரங்கு நில ஆவாரை சூரணத்தில் திருகடி பிரமாணத்தை எடுத்து ஒரு துளி விட்டுக் கொடுக்கவும் வேப்ப எண்ணெயில் கொஞ்சம் விட்டு மத்தித்து மேலுக்கு ரணங்களில் மேல் போடவும்.
30. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கட்டி வெள்ளரி விதை கசாயத்தில் ஒரு துளி வீதம் ஐந்து நாட்கள் கொடுக்கவும் .

மேற்படி 30 வியாதிகளையும்.
ஆரம்பநிலையில் இருந்தால் இந்த மருந்து குணப்படுத்தும்.

  31. தலைவலி தலைபாரம் வலி உள்ள இடத்தில் தடவி லேசாக தேய்த்து விடவும் புருவத்திற்கு மேற்புறம்  பொட்டு பகுதியில் தடவி தேய்த்து விடவும்.
32. பல் வலி பஞ்சில் தொட்டு வலியுள்ள இடத்தில் வைக்கவும் எச்சில் விழுங்க கூடாது சிறிது நேரம் கழித்து வெண்ணீரில் வாய் கொப்பளிக்கவும்.
33. தொண்டை வலி தொண்டைப் பகுதியில் லேசாக தடவி விடவும் சுடு நீரில் இரண்டு துளி விட்டு வாய் கொப்பளிக்கவும்.
 34. அடிபட்ட வீக்கம் ரத்தக்கட்டு  போன்ற இடத்தில் தைலத்தை தாராளமாக தடவி விடவும் தேய்க்கக் கூடாது காலையில் தடவி மாலையில் சுடு நீர் விட்டு கழுவவும் மாலையில் தடவி காலையில் சுடு நீர் விட்டுக் கொள்ளவும். 35. கண்ணில் நீர் குத்தல் புருவத்திற்கு கீழ் கண்ணில் படாமல் தடவி விடவும் கண்ணில் இருந்து நீர் வெளியேறி சுகப்படும்.
 36. உடல்வலி தசைவலி தேங்காய் எண்ணெயில் சில துளி விட்டு வலி உள்ள இடத்தில் தேய்த்து விடவும்.                                 மேலும் பலவிதங்களில் இதை பயன்படுத்தலாம்.

முக்கிய குறிப்பு

தைலம் கடுமையான எரிச்சலைக்கொடுக்கும் மென்மையான தோல் உள்ளவர்கள் குறைவாக பயன்படுத்தவும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு கைக்கு எட்டும் தூரத்தில் வைக்க கூடாது.

No comments:

Post a Comment