Thursday, September 29, 2016

சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்..!

நாட்டுமருந்து www.facebook.com/NaattuMarunthu http://naattumarunthu.blogspot.in/

சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்..! ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவையல்‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம். சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல் தேவையான பொருள்கள் : தூதுவளை இலை - 2 கப் புதினா - 1 கப் பூண்டு - 4 பல் இஞ்சி - 1/2 துண்டு சிறிய வெங்காயம் - 10 சிவப்பு மிளகாய் - 6 எண்ணெய் - 2 டீஸ்பூன் புளி - கோலிக்குண்டு அளவு துருவிய தேங்காய் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. தாளிக்க : கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை : * பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். * கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும். * கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி ஆற வைக்கவும். * ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும். * மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும். * சுவையான சத்தான தூதுவளை துவையல் ரெடி. * புதினா, தூதுவளை இலையை சிறிது வதக்கினால் மட்டும் போதும்

No comments:

Post a Comment