நாட்டுமருந்து
www.facebook.com/NaattuMarunthu
http://naattumarunthu.blogspot.in/
இடுப்பு எலும்பு தேய்மானம் !!!
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து இருபது கிராம்
வேர்க்கடலைப் பருப்பு ............நான்கு தேக்கரண்டி
வெள்ளை எள்ளு ............ நான்கு தேக்கரண்டி
பாசிப் பருப்பு ................ நான்கு தேக்கரண்டி
புழுங்கல் அரிசி ......... நான்கு தேக்கரண்டி
பெரிய சுக்குத்துண்டு ...... ஒன்று
பனை வெல்லம் ...... ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் ... சிறிது
செய்முறை:
1.ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
2.வறுத்து எடுத்த அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து சன்னமான பொடியாக எடுக்கவும்.
3.இந்தப் பொடியில் இருந்து உளுந்தங் கஞ்சி செய்ய நூறு மில்லி கொதிக்கும் நீரில்
ஒரு தேக்கரண்டிப் பொடியைப் போட்டுக் கிளறி
நன்கு கொதிக்க விட்டுக் கஞ்சியாக வந்தவுடன்
பனை வெல்லம் சேர்த்துக் கிளறி நன்கு கொதிக்க விட்டு இறக்கி தேங்காய்த் துருவல் சேர்த்து எடுத்தால்சுவை மிக்க உளுந்தங் கஞ்சி கிடைக்கும்.
வாரம் ஒரு முறை
காலை உணவாக இந்த உளுந்தங் கஞ்சியைச் சாப்பிட்டு வர இடுப்பு எலும்பு தேய்மானம்
முதுகுத் தண்டு வட வலி அற்புதமான முறையில் குணமாகும்.
No comments:
Post a Comment