Sunday, July 17, 2016

அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..!

அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..!

பொதுவாக பழங்களை உட்கொள்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பக்கபலமாய் உள்ளது.

பழங்களில் பலவகை உண்டு, சில பழங்கள் ருசியை மட்டும் தரும், ஆனால் அதில் சத்து ஏதும் இருக்காது.

சிலவற்றில் உடலுக்கு சக்தி அளிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கும், அதுபோல் ஒரு பழம் தான் விளாம்பழம்.

விளாம்பழத்தை ஆங்கிலத்தில் WOOD APPLE என்று சொல்வார்கள். இதில் வைட்டமின்களும் தாதுபொருட்களும் அதிகம் உள்ளன.

ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த பழம் அதிகம் உபயோகப்படுகிறது. பழம் மட்டுமல்லாது இதன் வேரும், இலைகளும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

இதன் இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன.

வலுவான எலும்புகளுக்கு

இதில் இரும்புசத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

எனவே இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எலும்புகள் வலுவடையும்.

ஜீரணமாக்கும் மருந்து

நீங்கள் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகவில்லை என்றால் ஒரு விளாம்பழத்தை சாப்பிடுங்கள்.

இதை தினந்தோறும் சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனை இருக்காது.

மேலும் சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும்.

பித்தத்தை விரட்டும்

பித்தத்தால் வரும் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.

தினசரி ஒரு பழம் விதம் தொடர்ந்து 21 தினங்களுக்கு இப்பழத்தை சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும்.

ஆரோக்கியமான இதயத்திற்கு

இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை எவ்வித பிரச்சனையும் இன்றி இயங்க செய்வது விளாம்பழம்.

மேலும் இதயத்தை பாதுகாக்க வைக்கும் இப்பழம், மனசந்தோஷத்தையும், மனதைரியத்தையும் அளிக்கும்.

உறுதியான பற்களுக்கு

முதியவர்களுக்கு ஒரு வயதை கடந்து விட்டால் பற்கள் கொட்டிப்போவது இயல்பு.

ஆனால் விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பல் செட்டை தேடி செல்ல வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment