Friday, May 28, 2021

ஓமம் தண்ணீர் இப்படி தயாரித்து காலையில் குடிங்க!


*மூச்சுத் திணறல், காய்ச்சல் வராது:*

ஓமம் தண்ணீர் இப்படி தயாரித்து காலையில் குடிங்க!

ஓமத்திற்கு ஆண்டிசெப்டிக், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிபராசிடிக் பண்புகள் உள்ளன, இது இருமல், சளி, காது அல்லது வாய் தொற்றுநோயை ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகளுக்கு சரியான மருந்தாக அமைகிறது.

நம்முடைய உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் உணவுக்கு சுவையூட்டுவது மட்டுமல்லாமல் மருத்துவ நன்மைகளையும் தருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் இருக்ககூடிய இந்த எளிய மசாலாப் பொருட்கள், உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் திறன் கொண்டவை.

அப்படியான ஒரு மசாலாப் பொருட்களில் ஒன்றைப் பற்றி இப்பொழுது பார்ப்போம். நாம் வீடுகளில் அவ்வப்போது பயன்படுத்தும் மசாலாப்பொருட்களில் ஒன்று ஓமம். ஓமத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.


ஓமத்திற்கு மருந்தியல் பண்புகள் உள்ளன. இதில், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, புரதம், ஃபைபர், டானின்கள், கிளைகோசைடுகள், ஈரப்பதம், சபோனின்கள், ஃபிளாவோன் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கோபால்ட், தாமிரம், அயோடின், மாங்கனீசு, தியாமின் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த உள்ளடக்கங்கள் அனைத்தும் இந்த சிறிய விதையை ஒரு ஆரோக்கிய அதிசயமாக்குகின்றன.

இந்த ஓமத்தை பயன்படுத்தி செய்யப்படும் பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்களுக்கு பல மருத்துவ நன்மைகள் கிடைக்கும். இப்போது அந்த ஓமம் நீர் எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.

*ஓமம் நீர் செய்ய தேவையான பொருட்கள்:*


1 டீஸ்பூன் ஓமம்

500 மி.லி தண்ணீர்


1 எலுமிச்சை அல்லது 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்

1 தேக்கரண்டி மஞ்சள்

கருப்பு உப்பு தேவையான அளவு

1 டீஸ்பூன் தேன்

*செய்முறை*

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் ஓமம் சேர்க்கவும். பாத்திரத்தில் உள்ள தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்கவைக்கவும்.

ஒரு கிளாஸில் இந்த கலவையை வடிகட்டி கொள்ளவும். எலுமிச்சை அல்லது ஆப்பிள் சைடர் வினிகர், தேன் மற்றும் கருப்பு உப்பு சேர்க்கவும். அதை நன்றாக கலந்து மெதுவாக குடியுங்கள்.

*ஓமம் நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்*

*தொற்றுநோய் தடுப்பு*

ஓமத்திற்கு ஆண்டிசெப்டிக், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிபராசிடிக் பண்புகள் உள்ளன, இது இருமல், சளி, காது அல்லது வாய் தொற்றுநோயை ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகளுக்கு சரியான மருந்தாக அமைகிறது. கான்ஜுண்ட்டிவிடிஸ் போன்ற கண் நோய்த்தொற்றுகளை குணப்படுத்த ஓமம் உதவுகிறது.

*சுவாச பிரச்சனைகள்*

ஓமம் உங்கள் நுரையீரல் மற்றும் குரல்வளையை சுத்தமாக வைத்திருக்க உதவுவதாக அறியப்படுகிறது, இதனால் அடைப்பு உங்களுக்கு தொந்தரவாக இருக்காது. இந்த விளைவு மூச்சுக்குழாய் விளைவு என்று அழைக்கப்படுகிறது, இது குறிப்பாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த ஓமம் காற்றுப் பாதையை தளர்த்த உதவுகிறது மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நன்றாக சுவாசிக்க உதவுகிறது.

*குடல் ஆரோக்கியம்*

உங்களுக்கு இரைப்பை பிரச்சினைகள் இருந்தாலோ, அதிக வயிற்று வலி அல்லது பிடிப்புகள் இருந்தாலோ, நீங்கள் தினமும் இந்த பானத்தை குடிக்க வேண்டும். நீங்கள் வெறும் வயிற்றில் ஓமம் நீரைக் குடிக்கும்போது, ​​அது உங்கள் குடலில் உள்ள நொதிகளை செயல்படுத்துகிறது, இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. சிறந்த செரிமானம் என்றால் அமிலத்தன்மை மற்றும் குடல் இயக்க தொல்லைகள் நீங்கும்.

*வலி குறைப்பு*

முடக்கு வாதத்திற்கு ஓமம் நீர் நல்ல பலனை அளிக்கிறது. அழற்சி காரணமாக முடக்கு வாதம் ஏற்படுகிறது என்று அழற்சி ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. ஓமத்தின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதற்கு சில நிவாரணங்களை அளிக்கிறது.

*எடை குறைப்பு*

உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த ஓமம் உதவுகிறது. அடிப்படையில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற பல வாழ்க்கை முறை பிரச்சினைகள் மற்றும் இருதய பிரச்சினைகள் போன்றவற்றுக்கு வழிவகுக்கும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை ஓமம் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக, உங்கள் இதய ஆரோக்கியமும் நீண்ட காலம் நிலையானதாக இருக்கும்

No comments:

Post a Comment