Monday, December 15, 2014

கால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்

கால் ஆணி, பித்த வெடிப்பு, எளிய இயற்கை வைத்தியம்

பித்த வெடிப்பு நம்மில் அனேகம்பேருக்கு உள்ளது, குதிகாலின் பின்புறம் வெடிப்புகள் தோன்றும்.
• பித்த வெடிப்பு தோன்றமலிருக்க, காலை, மாலை இரு வேளையும் குளிக்கும் போது குதிகாலை நன்கு கல்லில் தேய்த்துக் குளித்து வந்தால், பித்த வெடிப்புகள் தோன்றாது.
• குதிகாலின் பின்புறம் அழுக்குச் சேர்ந்து, அவ்வழுக்கை அவ்வப்போது சரியாகச் சுத்தப்படுத்தாமலிருப்பதே, பித்த வெடிப்புகள் வரக்காரணம்.
• பித்த வெடிப்புகள் தோன்றிய பகுதிகளில் மாமரத்து பட்டையை வெட்டினால் பிசின் போன்று வரும் மாமரப் பாலை நாள்தோறும் தடவி வந்தால், பித்த வெடிப்புகள் மறையும்.
• விளாமர இலைக் கசாயம் அருந்தலாம். அரச மரத்தைக் குத்தி வரும் பாலை, பித்த வெடிப்புகளின் மீது தடவி வந்தால், பித்த வெடிப்புகள் மறைந்து விடும்.
• பீர்க்கங்காய் இலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பித்த வெடிப்புகளில் தடவலாம். மாமரத்து இலைச் சாறும் தடவலாம்.
• கால் ஆணி குணமாக, செந்தூரக் கட்டியை எடுத்துக் கால் ஆணியில் தேய்த்து வந்தால் இரத்தம் வடியும்.
• இரத்தம் வடிவதைக் தடுக்க இரத்தம் வரும் பகுதியில் மஞ்சளை அரைத்துப் பூச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், கால் ஆணி குறைந்து விடும்.
• மருதோன்றி இலை, வசம்பு, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்தரைத்துக் கால் ஆணி மேல் கட்டி வந்தால் கால் ஆணி குணமாகும்.
• கால் ஆணி உள்ள இடத்தில் அம்மான் பச்சரிசி மூலிகைப் பாலைத் தடவினால், கால் ஆணி குணமாகும். மயில் துத்தத்தை உரைத்துப் போட கால் ஆணி குணமாகும்.

No comments:

Post a Comment